பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்கமுடியாது’

ஒருமுறை அரசவையில் கிருஷ்ண தேவராயர் அவையோரிடம் ஒரு கேள்வி கேட்டார். உலகத்திலேயே எதை அடக்குவது கடினமானது? ஒவ்வொரு வரும், மனதை அடக்குவது கடினம், நாவை அடக்குவது கடினம் என பல்வேறு விதமான கருத்துக்களை கூறினார்கள்.

கேள்வி தெனாலிராமன் பக்கம் வந்த போது, ‘ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்கமுடியாது’ என விடை பகன்றான்.

அவையில் சபை நாகரிகமில்லாமல் பதில் கூறியதற்காக உடனடியாக அவையை விட்டு வெளியேற மன்னர் கட்டளை யிட்டார்.

மறுநாள் அதிகாலையிலேயே மன்னரின் அறைக்கு வெளியே தாளிட்டார் தெனாலி ராமன். அரசர் மிகவும் தவித்துப் போன பிறகு கதவை திறந்துவிட்டார்.

இயற்கை உபாதையை மட்டுமல்ல இயற்கையை அடக்குவதும் மிகவும் கடினம் என்பதை எளிதாக புரிய வைத்தார் தெனாலி ராமன். அரசன் அவர் கூற்றை ஏற்று பரிசளித்தார்.

மருத்துவர் பவளவிழி மனோகரன் கூற்றுப்படி, சிறுநீர் என்பது பல பெரிய வியாதிகளை எளிதில் கண்டறிய உதவும் ஒரு உடல் திரவம்.

சங்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் சிறுநீரின் அளவை வைத்தும், நிறத்தைப் பார்த்தும், மணத்தை(?) நுகர்ந்தும், சுவைத் தும்(?) பல்வேறு விதமான வியாதிகளை எளிதில் கண்டறிந்தார்கள்.

இன்றும்கூட சிறுநீர் கழித்த இடத்தில் எறும்பு, ஈ, தேனீ மொய்ப்பதைக் கண்டு, சர்க்கரை வியாதியையும், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் சில சாத பருக்கைகளை ஒரு தேங்காய்த் தொட்டியில் உள்ள சிறு நீரில் போட்டு பிறகு நல்ல நீரில் கழுவிப் பார்த்து சாதத்தில் மஞ்சள் நிறம் படிந்து இருந்தால் மஞ்சள் காமாலை என்பதை யும் எளிதாக கண்டறிகின்றனர்.

சோதனைக் கூடங்களில் சிறுநீர் உள்ள சிறுபாட்டிலை மேலும், கீழுமாக அசைத்து நுரை தோன்றினால், காமாலைக்குக் காரண மான பித்தநீர், நிறமிகள் இருப்பதைக் கண் டறிகின்றனர் என உறுதிப்படுத்து கிறார் மருத்துவர் பவித்ரா விஸ்வநாதன். பழங்கால நாட்களில், மூத்திர தோஷம் என சிறுநீர் சம்பந்தமான வியாதிகளை குறிப்பதோடு, அவைகளை வாத வாஸ்ஷ், வாத குண்டலி, வாதரஷ்டீலம், மூத்தரா தீதம், மூத்திர சடரம், மூத்திரோச்சங்கம், மூத்திர சுக்லம், மூத்திர கிரந்தி, மூத்திர விட்விகாதம், மூத்திர வுஷ்ணாவாதம், மூத்திர ஷயம், மூத்திர சாதம் என பிரித்து பரி சோதனை செய்து வைத்தியம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘சாதாரண சமயங்களில் சிறுநீரைப் பற்றி கவலைப்படாத மக்கள், வலி, எரிச்சல் வந்தாலோ மிக குறைவாக போனாலோ, மிக அதிகமாக போனாலோ, சிவப்பு கலரில் போனாலோதான் அலறி அடித்துக் கொண்டு மருத்துவரிடம் வருவர்’’ என்கிறார் மருத்துவர் பிரபு.

நோயாளிகளிடம் சிறுநீர் எந்த நிறத்தில் போகிறது, எவ்வளவு போகிறது என கேட்டால், பலர் திருதிருவென விழிப் பதும், இதையெல்லாம் யாருங்க டாக்டர் பார்க்கிறார்கள் என நம்மிடம் பதில் சொல்வதும்தான் பெரும்பாலான சமயங்களில் நடக்கிறது.

ஒரு அனுபவம்மிக்க மருத்துவர், ஒரு சிறிய, நிறமில்லாத கண்ணாடி பாட்டி லில் பிடிக்கப்பட்ட சிறுநீரின் நிறத்தை வைத்தே பல வியாதிகளை சொல்லி விடுவார்.

நிறைய நீர் அருந்துபவர்களுக்கு நிற மில்லாமல் வெளியேறும் சிறுநீர், சாதார ணமாக வெளிர் மஞ்சள் அல்லது வைக் கோல் நிறத்தில் காணப்படும். வெயில் காலங்கள், போதுமான நீர் அருந்தாத வர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நீரிழப்பு காலங்களில் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

எலுமிச்சம்பழ நிறத்தில் காணப் பட்டால் மஞ்சள் காமாலை எனவும், பால் கலக்காத டீ டிக்காஷன் போல இருந்தால், சிறுநீரகத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று எனவும், அடர் பழுப்பு நிறத்தில் காணப்பட்டால் மலேரியா நோய்த் தாக்குதல் என்றும் சூடா மோனாஸ் என்ற கிருமி தாக்கியவர்களுக்கு நீல, பச்சை, மஞ்சள் நிறத்திலும், பினைல் கீ ட்டோன்யூரியா அல்காட்டனூரியா போன்ற வளர்சிதை மாற்ற நோய் உள்ளவர்களுக்கு கறுப்பு நிறத்திலும், சில மாத்திரைகளை குறிப்பாக பி. காம்ப்ளெக்ஸ் பயன்படுத்து வோருக்கு அடர்ந்த மஞ்சள் நிறத்திலும், காசநோய்க்கான மருந்து எடுத்துக் கொள் பவர்களுக்கு ஆரஞ்சு நிறத்திலும், பால் வினை நோய் உள்ளவர்களுக்கு சீழ் கலந்த நிறத்திலும், நாப்தால் கலந்த மருந்தை உண்பவர்களுக்கு பிங்க் நிறத்திலும், பார்பைரியா நோய் உள்ளவர்களுக்கு மர நிறத்திலும் சிறுநீரகக் கல், சிறுநீரக காசநோய், சிறுநீரக நோய்த் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய், மூத்திரப்பை புற்றுநோய் உள்ளவர்களுக்கு ரத்தம் கலந்தும், சிறுநீர் சிவப்பாக வெளியேறும்.

சிலவகை சல்பா மருந்து சாப்பிட்டால் உப்பு படிமம் கலந்தும், நீண்ட நாள் பால்வினை வியாதி உள்ளவர்கள் துர் நாற்றத்துடனும், சீழ் மட்டுமே சிறுநீரில் வரும்.

காரட், பீட்ரூட் போன்ற உணவு வகை களை உண்டால் அதே நிறத்திலும், பல் வகை வண்ணம் சேர்த்த மிட்டாய் சாப் பிட்டால் அந்த நிறத்திலும் சிறுநீர் வரக் கூடும். நீலக் கலரில் சிறுநீர் இருந்தால் அது அரசாங்கம் கொடுத்த மண்ணெண் ணெய் ஆக இருக்கக்கூட வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை!

புகை படிந்தாற்போல் மங்கலாக இருந் தால் சிறுநீரக நோயாக இருக்கலாம். கலங்கலாக இருப்பது, அதிகமாக புரதம் வெளியேறும். சிறுநீரக நோய்களாலோ சிறுநீர்ப்பை புற்று நோயானால் கசடு களுடன் கலந்தும் இருக்கலாம். கோலா, பாண்டா நிறத்தில் சிறுநீர் இருப்பது, சிறுநீரக வியாதிகளால் இருக்கக்கூடும். நிறமில்லாத கண்ணாடி பாட்டிலில் பிடித் தால் மட்டுமே இவைகளை எளிதாக கண்டறிய இயலும்.

எண்ணெய்ப் படிவம் சிறுநீரின் மேல் படிந்து பல வண்ண வானவில் நிறம் தெரிந்தால், ‘அதிக கொழுப்பு சிறுநீரில் வெளியேறும் நெப்ராடிக் சின்ரோம் வியாதி யாக இருக்கலாம்.

பால்போல் சிறுநீர் கழிந்தால், ‘கைலஸ்’ எனும் கொழுப்பு புரத கரைசல் சிறுநீரில் கலந்ததால் இருக்கலாம்.

2 கருத்துகள்:

  1. These cards support native capture and monitor mode and, since they're designed for this purpose, they offer a higher performance. Therefore, when capturing in monitor mode using an AirPcap card, it is posible to display, in addition to all available parameters collected by NDIS compatible WiFi cards, information on SNR values (Signal-to-Noise Ratio).
    Download now
    Download link
    this website
    get now click here
    SNR is a good parameter to measure communication quality, since it takes into account the received signal strength and the noise present in the wireless medium. Its value ranges from 0 (weakest) to 100 (strongest). Over 60 is considered a good value.
    SNR is avaliable both on Acrylic WiFi Professional as well as Acrylic WiFi Heatmaps. ¿Do you want try it?

    பதிலளிநீக்கு