பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

100 முறை தோல்வி ஆனால்?

இந்த கட்டுரை...
பெற்றோர்கள் மற்றும் ,
ஆசிரியர்கள் மூலம் அவர்தம்
குழந்தைகளுக்கு சமர்ப்பணம்....

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.

மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.

குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.




எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.




எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.




100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலரே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு அறிவியல் என்றால் அலர்ஜி; கணக்கு என்றால் கசப்பு என்று கூறக் கூடாது.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.




அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு, கிராமபோன், ஒலிபெருக்கி, திரைப்படம் போன்றவற்றை-யெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்றால், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அரவணைப்பில் மற்றும் அன்பில் முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தினால் வீட்டுக்கும்..நமது நாட்டுக்கும் பெருமைதானே ?

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நாம் பிடித்த புலிவால்

எல்லாம் வல்ல ஈசனின் அருளால் ......
பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?

வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!

ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை!

வியாழன், 24 பிப்ரவரி, 2011

வருத்தம் வேண்டாம் வெற்றியருகே​!!!

வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை.

தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை.

நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை.

பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

காலம் இருக்கு கனிவது நிச்சயம்
நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!

புதன், 23 பிப்ரவரி, 2011

லாஜிக் பார்க்காம ரசிக்கணும்

தாஜ்மகாலை அசந்து போய் பார்த்து கொண்டிருந்தார் பிரெஞ்சு டூரிஸ்ட் ஒருவர்.

"தாஜ்மகால் என்னதுதான்.விலைக்கு வேணுமா?பத்து மில்லியன் ரூபாய்க்கு விற்கிறேன்" என பேச்சை துவக்கினார் ஏமாற்றுகாரர் ஒருவர்.

"என்கிட்ட ஐம்பது ரூபாய் தான் இருக்கு" டூரிஸ்ட் தலையை சொறிந்தார்.

"சரி..ஐம்பது ரூபாயை குடுங்க.இன்னைக்கு உங்க லக்கி டே" என கிடைத்ததை வாங்கிகொண்டார்.

"நான் வரட்டுமா?" என கிளம்பினார்

"இருங்க..பார்க்கிங் சார்ஜ் குடுங்க"

"என்ன பார்க்கிங் சார்ஜ்?"

"தாஜ்மகால் பார்க்கிங் லாட்ல உங்க கார் நிக்குது"

"அதுக்கு.."

"பார்க்கிங் சார்ஜ் நூறு ரூபாய்ன்னு போர்டு போட்டிருக்குல்ல?"

"நான் ஏற்கனவே பார்க்கிங் சார்ஜ் கட்டிட்டேன்"

"நீங்கதான் ஓனர்.ஓனர் எங்கே சார்ஜ்கட்டுவீங்க?நூறு ரூபாய் பார்க்கிங் சார்ஜ், ஐம்பது ரூபாய் பைனை எடுத்து வைங்க.."

தூரத்தில் போலிஸ் வருவதை பார்த்துவிட்டு காசை கொடுத்துவிட்டு தலைமறைவானார் ஏமாற்றுகாரர்.

கண்ணதாசனின் வரிகளில் சில...

"மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறான் என்பதே!"

"எதைச் சிந்திக்கிறாய் என்பதிலல்ல, எப்படி சிந்திக்கிறாய் என்பதில்தான் புதிய கருத்துக்கள் வெளிவருகின்றன."

"அமைதியைத தேடி எங்கெங்கோ அலைந்தேன்.
கால்கள் வலித்தன.
ஓரிடத்தில் அமர்ந்தேன்.
அமைதி அங்கேயே இருப்பது அப்போதுதான் தெரிந்தது."

"தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பரிசு வரப்போகிறது.
பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்: தண்டனை வரப்போகிறது.
எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது."

"நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகிவிட்டால் அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனென்றால் அதன்மூலம் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள்."

"அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்."

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை

புது யுகம் படைப்போம்!!

ஓடி மறைந்து வாழ்ந்தது போதும்
ஊர் மறந்து உறங்கியது போதும்
உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும்
பிள்ளைகளின் - சமாதிகளை கூட உடைத்தது போதும்
எம் - பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்;
வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்;
இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்!

விடுதலை விடுதலை யென்றே
உயிர்விட்ட இனமே..
சுதந்திரக் காற்றினை சுவாசிக்கவே
நாளுக்கொரு போருக்குள் வித்தான மனிதர்களே..
வாருங்கள்; உயிர்கொல்லாது உயிர்வென்று -
நம் இனம் வாழ ஓர் - யுகம் படைப்போம்!

ஒற்றுமை தீயின் சுவாலையை - நம்
எதிரி நாக்கில் தீண்டி
உயிர்பயம் கொள்ள செய்வோம்;
உயிரோடு விட்டு நம் - விடுதலையை மட்டும் வெல்வோம்!

கற்றை கற்றையாய் குண்டுகளை வீசி
பறித்துக் கொண்ட நம் உடமைகளை
நாம் வாழ்ந்த அடையாளத்தை -
நம் ஒற்றுமையால் மீட்டெடுப்போம்!

மரணத்தின் விளிம்பில் சாய்ந்த
ஒரு இனத்தின் - மிச்ச சுவாசத்தை வார்த்தெடுத்து
புதியதொரு யுகம் படைப்போம் - அதில் தமிழரின்
ஒற்றுமையை ஓங்க வைப்போம்; வாருங்கள் உறவுகளே...!!!!!!

கல்லில் அடிக்கவில்லை குண்டில் அடித்தார்
தள்ளிப் போகவில்லை எள்ளி - நகைத்தார்
முல்லை பறிக்கவில்லை முற்றும் பறித்தார்
சண்டை ஒழிந்ததென்று - சங்கினை யறுத்தார்,

வாழ்ந்த சுவடுகளை அழித்து - அந்நியரென்றார் -
தூர வந்து தமிழரென்று மார் தட்டினோமே யொழிய
பிறந்த எம் தேசத்தில் ஒரு பிடி மண்ணுக்கே -
விரோதியானோமே???!!!!!!!!!

'நாம்' என்ற ஒற்றை குறையினால்
நானென்றே ஒருமை பட்டோமே????????
இனி - வாருங்கள் உறவுகளே நாமென்றே இணைவோம் -
ஒற்றுமையின் பலத்தில் தமிழினத்தின்; புது யுகம் படைப்போம்!
-----------------------------

காதல் என்பது இதுதானா??

காதல் என்பது இதுதானா??

கொறையில மாடு மேய்க்க நாம் போவேன்!
பள்ளத்துல முள் பொறுக்க நீ வருவே!!

ஓடையில துணி தொவைக்க நீ போவே!
ஓடக்கல் பொறுக்க நான் வருவேன்!!

சங்கத்துல பால் ஊத்த நான் போவேன்!
கோயல்ல விளக்கு வெக்க நீ வருவே!!

தையக்காரன்கிட்ட துணி தெக்க நீ போவே!
தச்சங்கிட்ட வக்கீல் வாங்க நான் வருவேன்!!

கண்ணடக்கம் வாங்க நான் போவேன்!
பூவரளி பொறிக்க நீ வருவே!!

கொடுமுடித் தீர்த்தம் பாக்க நீ போவே!
நீநிக்க இடஞ் செய்ய நான் வருவேன்!!

பூளைப்பூவு வாங்க நான் போவேன்!
கோலமாவு வாங்க நீ வருவே!!

கோதும்பி அரைக்க நீ போவே!
புண்ணாக்கு வெலை கேக்க நான் வருவேன்!!

அறுவடையின்னு மக்கிரி வாங்க நான் போவேன்!
பொடைக்க மொறம் வேணுமின்னு நீ வருவே!

சுண்டப்பானை வாங்கியாற நான் போவேன்!
தீபம் வெக்க விளக்கு வாங்க நீ வருவே!!

தூரிகட்ட கயிறு வாங்க நீ போவே!
பட்டம்வுட கைநூலு வேணுமின்னு நான் வருவேன்!!

காய்ச்சலுன்னு செறகடிக்க நான் போவேன்!
கணுக்கால்ச் சுளுக்குன்னு நீவுறதுக்கு நீ வருவே!!

உன்ற வயசு பதினஞ்சு
என்ற வயசு பதினாறு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!

உள்ளத்தில் நீங்காச் சுடர்கள், எங்கிருந்தாலும் வாழ்க!

”தடுப்பான்”

நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ
பாடமாகவே அமைகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்வு

என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக
திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக
பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும்
ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு
சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி
போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் )
மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத்
தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு
சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என்
வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம்
ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண்
என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம்
முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம்
காண்பித்தீர்களா என்றேன்
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை
அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை
உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக்
கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும்
இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு
சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து
உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன்.
அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள்
என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள்.
நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு
நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள்.
பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை
அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற
பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள்
காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின்
உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க
திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை
கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள்
என்பதும் புரிந்தது.ஆனால் அந்தப் பெண் நினைத்தாற்போல திருகாணி
தொலையவில்லை,அவள்காதின் உட்புறமாக சென்று
மாட்டிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும்
வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள்
எனபது புரிந்து போயிற்று. ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த
திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி
பொறுத்துக்கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற
விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி
அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க
திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம்
சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை
விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும்
ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை
என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப்
பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி
வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக
அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு
போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து,
முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான்
திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால்
எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும்
மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும்
அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும்
மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று
முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி
அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை
அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே
இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள்
பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?

முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத்
தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது
இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே
பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து
கொடுத்திருக்கிறேன்

ஆகவே எப்போதுமே
” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப

”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ” என்று உணர்க

சனி, 12 பிப்ரவரி, 2011

ஷாப்பிங் போறீங்களா, உஷார்!

ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பார்ட்டன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.

இதை ஒரு ஆராய்ச்சி மூலம் நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடைக்குப் போய் சாமான் வாங்கப் போனால் எப்படி மலட்டுத்தன்மை வரும் என்று கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் தெரிய தொடர்ந்து படியுங்கள்.

வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது அங்குள்ள கேஷ் கவுன்டர்களில் தரப்படும் ரசீதுகளில், அதாவது அந்தத் தாள்களில் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A (BPA) என்ற ஆபத்தான பொருள் அடங்கியிருக்குமாம். அதை தொடும் ஆண்களுக்கு (பெரும்பாலும் பொருட்களை பெண்கள் வாங்கினாலும், பர்ஸைப் பறி கொடுக்கும் பொறுப்பு ஆண்களுக்குத்தானே வந்து சேருகிறது!) அந்த பொருள் நமது உடல்மூலமாக ஊடுறுவி, நமது செக்ஸ் ஹார்மோன்களை செயலிழக்க வைத்து விடுமாம்.

இந்த வேதிப் பொருளை பிரின்டர்களில் பயன்படுத்தப்படும் மையில் கலநது விடுகிறார்கள். அதாவது பளிச்சென எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிபிஏவை மையில் கலக்கிறார்கள். ஆனால் இது ஆண்களின் பர்ஸை மட்டுமல்ல, எல்லாவற்றையும் காலி செய்து விடும் ஆபத்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்த வேதிப் பொருள் அடங்கிய ரசீதை வாயில் வைப்பது, கையால் தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமாக நமது உடலுக்குள் இது போகிறதாம்.

இதுகுறித்து பெர்லினைச் சேர்ந்த பிராங் சோமர் என்பவர் கூறுகையில், இது ஆண்களின் செக்ஸ் ஹார்ன்மோன்களை காலி செய்து விடும் சக்தி படைத்தது.

ஷாப்பிங் செல்லும் பழக்கம் அதிகம் உடைய ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எழுச்சியின்மை, விறைப்புத்தன்மை குறைவு போன்றவற்றுக்கும் இது இட்டுச் செல்லும்.

இது மட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் கூட வரும் வாய்ப்பு உள்ளது. இந்த வேதிப் பொருளுக்கு அமெரிக்கா, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனவே ஆண்குலமே, ஷாப்பிங் போகும்போது ரொம்பக் கவனம். இல்லாவிட்டால் இழக்க நேரிடும் - பணத்தோடு, ஆண் குணத்தையும்

சொந்த ஊர்!!!!!

சொந்த ஊர்!!!!!









வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !



சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !



சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?


மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை

போராட்டத்தின் -
ஒவ்வொரு கிளையாய்
தாவிச் சென்றதில்;
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;

ஒரு நாளைக் கடப்பதே
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க
வருடங்களை -
சிரிக்க மறுத்து
சகித்துக் கொண்டே - கடக்கிறோம்;

எதிரே வருபவர்களை யெல்லாம்
தனக்கானவர்களாக எண்ணியும்,
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே
மடிகிறதிந்த மனித இனம்; அதில்
நானும் மாறுபட்டவனாக இல்லை;

அப்பட்டமாய் -
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்
வாழ்வதற்கான உயிர்காற்று -
தொண்டையை அடைத்துக் கொள்ள,
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,
ஆசையில் -
நம்பிக்கையில் -
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்;

இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்
எந்த நிலையிலும் -
யார் இறப்பிலும் -
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்
சில உண்டு, என்றாலும் -

மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய
மீண்டும் ஒரு புள்ளியாக -
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!

வியாழன், 10 பிப்ரவரி, 2011

திரும்பிப் பார்க்கிறேன்.......!

நிதானமாய்ச் செல்லும்
நேரான பாதையைத் தவிர்த்து...
சுற்றிச் சுழலும்
மாற்றுப் பாதையைத் தேர்ந்து...

சீரற்ற வேகத்தில்
சரேலென வளைந்து...
இடமும் வலமுமாய்
திடீரென நுழைந்து...
குறுக்கும் நெடுக்குமாய்
வேகத்துடன் விரைந்து...
திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்
திசையெல்லாம் பயணித்து.........

முடியுமிடத்தில் இருந்து
திரும்பிப் பார்க்கிறேன்

அழகாய்
உருவாகி இருந்தது
கோலம் ஒன்று......!

இந்தியாவில் கடலாய்வு

மறுபடியும் தமிழகத்தில் பாய்மர கப்பலை முழுமையாக பயன்படுத்த

நான், உலகை முழுமையாக கடலில் சுற்றிய கன்னியாகுமரி ஜஸ்டின் மற்றும் ஸ்மைல பாய் மர கப்பலின் முதலாளி ஜோய்சொன் அவர்கள் எடுத்த இரண்டு வருட முயற்சி பயன் அளிக்க தொடங்கி உள்ளது . விரைவில் தமிழக பாய் மர கப்பல்கள் இந்தியா முழுவதும் குறிப்பாக அனைத்து தீவுகளுக்கும் செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது .

நாற்பது கப்பல்களும் மற்றும கடலோர கப்பல் திட்டம் நடை முறைக்கு வந்து விட்டால் சாலையில் பொருள் ஏற்றி செல்லும் வாகனம்கள் கணிசமாக குறிந்து விடும் மற்றும் டீசல் தேவை குறைந்து விடும் என்பதால் நாட்டிற்கு நல்லது எனக்கும் மூழ்கி உள்ள நில பகுதியை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்

இந்த வகை பாய்மரக்கப்பலில் உப்பு நீரை குடி நீராக மாற்றும் வசதியும், ஆய்வுகள் செய்யவும் மற்றும் மக்கள் சென்று வரக்கூடியதாக மாற்ற முயன்று வருகிறோம்.

கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக மலைசியவின் புஜாங் சென்று வர ஏற்பாடு நடை பெறுகிறது


தூத்துக்குடி - கொழும்பு இடையே மீண்டும் தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி
தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 9ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

தோணி எனப்படும் பாய்மர கப்பல் மூலம் தூத்துக்குடி - கொழும்பு இடையே சரக்கு வர்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாளடைவில் சரக்கு பெட்டகம் மூலம் இலங்கைக்கு சரக்குகள் அனுப்பப்பட்டதால், தோணி மூலம் ஏற்றுமதி செய்வது கடந்த 1998ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தோணி உரிமையாளர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி 9ஆம் தேதி மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோணி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மெக்கன்னா, கடந்த 1998ஆம் ஆண்டுக்கு பினனர் ஒரு சில காரணங்களுக்காக இந்த தொழில் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்போது அந்த பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்படுவதையடுத்து, அனைவரும் இணைந்து வரும் 9ஆம் தேதி முதல் தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது என்றார்

திருக்கோயிலின் திருப்பணிகளுக்காக தங்களது காணிக்கையை நன்கொடையாக வழங்கலாம்

நண்பர்களே,
நெல்லையில் இருந்து திருசெந்தூர் செல்லும் வழியில் செய்துங்க நல்லூர் யென்ற ஊரில் பதஞ்சலி முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்த ஊர் பொது மக்கள் கோயில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானித்துள்ளனர். அன்றாடம் வேலைக்கு செல்லும் அந்த பொதுமக்கள் அவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு சமாளிப்பது யென்ற வண்ணம் இருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்தால் உடனடியாக கோயில் திருப்பணி சீக்கிரம் நடக்கும். நண்பர்களே தங்களால் முயன்ற உதவியை இந்த கோவிலுக்கு செய்து ஈஸ்வரனின் அருளை பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.
இந்த கோவிலின் திருப்பணி சம்பந்தமாக தொடர்பு கொள்ள விரும்புவோர்கள் கிழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்.

1 . ராஜன் 94435 07938
2. பெருமாள் 97504 69990
3. பேச்சி முத்து 99423 69777
4. ஞானவேல் 98653 89414
5. முர்த்தி என்கிற குமரன் பலவேஷம் 98655 53956

Those who are interested to pay please send their cheques to
SHRI PATHANCHALI VIYAKKHIRA PATHA ESWARAR RELIGIOUS @ CHARITABLE TRUST,
Reg,No 271/2010
6/341A Railway feeder Road, Seidunganallur, Tuticorin Dist- 628 809.
Those who are willing to send amount through bank send
UCO BANK
KARUNGULAM BRANCH
ACCOUNT NO : 05190210000069

THANK U MY FRIENDS,

ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது

ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது தாலியில்லை, புரோகிதர் இல்லை, மாலை மாற்றமோ மோதிர மாற்றமோ கிடையாது. திருமணப் பதிவு மட்டுமே. சி.வி.இராமனது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எளிய நடையில் மூன்று மணி நேரம் அறிவியல் உண்மைகளை விளக்கினார். கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு அவரது சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தோம். ஒரு மாணவர் உங்களுக்கு இறை நம்பிக்கை உண்டா என்று கேட்டபொழுது எனது புலன்களால் தொட்டு, பார்த்து அறியப்படாத ஒன்றை எப்படி நான் நம்ப முடியும். மேலும் இயற்கையின் அற்புதப் படைப்புகளைப் பற்றி ஆய்வதற்கே நேரம் இல்லாத பொழுது இந்த வீண் முயற்சிகளில் ஈடுபடுவது தேவையில்லாதது என்றார். சொற்பொழிவு முடிந்தவுடன் எல்லோரும் விருந்திற்கு அழைப்பை எதிர்பார்க்க நாயுடு அவர்கள் வந்ததிற்கு நன்றி, உங்கள் வீட்டிற்குச் Aசென்று உண்ணுங்கள் என்றார். இத்தகைய திருமண முறை என்று வருமோ

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.
அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.
துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.

"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".

கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.

"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".

முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.

"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.

என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...

கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.

கடவுளை மறுக்கும் அவர் , சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.

"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம்
பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள்
வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள்
பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம்
மகிழ்வார்கள்.
“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத்
தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன்
நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.
என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும்
விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின்
எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால்
சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை
உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.
நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை
பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம்,
சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி
முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை
ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும்
வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது
ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை
கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை,
செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி.
பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை
கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை
தெரிவித்துள்ளார்.
3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த
தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன்
முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய
நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த
படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட
ஊக்குவிப்பதில்லை.
மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என
எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால்
ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால்
கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது
தெரிய வரும்.
நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி,
நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு,
தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி,
மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு,
வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன
இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல்
நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது.
வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை
பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ
விடுகிறது.
ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட
ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு
செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு
நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது
உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட
தராதீர்கள்.
ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும்
நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை
இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக்
கொள்ள வேண்டும்.

புழுங்கல் அரிசிப் பிள்ளையார்

அது ஒரு வறட்சியான காலம். ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை இல்லாமல் வறண்டு போயிருந்தது. மக்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தனர். மீதமுள்ளவர்கள் சிறிதளவே கிடைத்த வரகரிசியை உண்டனர். இந்நிலையில் ஒரு பெரியவர், தனக்கு உணவில்லாத நிலையிலும், அங்குள்ள வில்லிப்புத்தூர் விநாயகருக்கு நைவேத்தியம் பண்ண அரிசியில்லையே என்று வருந்தினார். இதற்காக ஒவ்வொருவரிடமும் அவர் யாசகம் கேட்ட பொழுது ""பொங்கித் தின்ன வரகரிசியே கிடைக்காதபோது பிள்ளையாருக்குச் சாப்பாடு கேட்குதோ?'' என்று சிலர் கேலி செய்தனர். இதனால் மனம் சோர்ந்த பெரியவர், பிள்ளையாரின் முன் வந்தார்; அவரை வலம் செய்து வணங்கி, கண்ணீர் சிந்தினார். உடனே பிள்ளையார் பெரியவருக்காக மனம் இரங்கி, இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சந்நிதியில் வைத்தருளினார். இதைக் கண்ணுற்ற பெரியவர், அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்து வந்து சமைத்து, பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்தார்; தானும் உண்டு மகிழ்ந்தார்! இதைப் பார்த்த அனைவரும், ""உனக்கு மட்டும் புழுங்கல் அரிசி சாதம்! மற்றவர்களுக்கெல்லாம் வரகரிசியா? இந்தப் பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி எங்கிருந்து வந்தது?'' என்று அவரைக் கேள்விகளால் துளைத்தனர். பிள்ளையாரின் திருவருள் திறத்தைப் போட்டு உடைக்க விரும்பாத அந்தப் பெரியவர், மௌனம் காத்தார். இதனால் வெகுண்ட பொதுமக்கள், கோயிலின் முன் மண்டபத்தில் அவரைக் கட்டி வைத்துத் துன்புறுத்தினர். பசி வந்திடப் பத்தும் பறந்திடுமன்றோ! ஆனால் பக்தர்களை பசுபதியின் மகன் கைவிடுவாரா? அன்றைய இரவே எல்லோரின் கனவிலும் விநாயகர் தோன்றி, தானே அரிசி வழங்கியதாகவும் அந்தப் பெரியவர் மீது தப்பில்லை என்றும் கூறியருளினார். உடனே ஊர் மக்கள் மனம் வருந்தினார்கள். அந்தப் பெரியவரை விடுவித்து மன்னிப்புக் கேட்டார்கள். அவரையே அன்றாடம் விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். அவர் வம்சாவளியினரே இன்றும் பூஜை செய்கின்றனர். அன்றிலிருந்து இப்பிள்ளையார், "புழுங்கல் வாரிப் பிள்ளையார்' என்றும் "புழுங்கல் அரிசிப் பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார். ஆண்டாள் கோயிலுக்கு ஈசான்ய மூலையில் இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். புழுங்கல் அரிசிப் பிள்ளையார் கோயிலின் பிரகாரத்தில் நாகலிங்கம், ஆஞ்சநேயருடன் சேர்ந்த விநாயகர், முருகன், குருபகவான், விஷ்ணு துர்கை, நவகிரகம் என்று சந்நிதிகள் உள்ளன. புழுங்கல் அரிசிப் பிள்ளையாரை வணங்கி நம் மனப்புழுக்கங்களைப் போக்குவோம். உண்ண உணவும், இருக்க இடமும், உண்மை பக்தியும், பேரின்ப முக்தியும் பெறுவோம் வருக

இனிய காலை வணக்கம்

ஓம் நமோ நாராயணாய
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டே போகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும், உண்மையாகவும் பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல் தடுக்கியது. உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில் தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.



--


பாலாஜி
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும் பொழுது சொற்களாவது இனிய மணம் உடையதாக வெளிப்படட்டும்"

புத்தர்.

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது. இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன. விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.




இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது. இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.









இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம். இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.




மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும். இது தான் இந்திய மரபு.

இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

அவியல் ஓம்

ஓம்.

நவக்கிரஹங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரஹங்களைச் சுற்றவேண்டும். ஞாயிறே போற்றி என்று ஆரம்பித்து, திங்களே போற்றி, மங்களச் செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி என்று ஒவ்வொன்றாகக் கூறிக்கொண்டே ஏழாவது சுற்று வரை வலமாகச் சுற்றவேண்டும். ஏனெனில் இவை ஏழும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன. ஏனைய இரு கிரஹங்களான ராகு, கேது இரண்டும் வலமிருந்து இடமாகச் சுற்றுபவை. எனவே நாமும் ராகுவே போற்றி, கேதுவே போற்றி என்று கூறி இடமாகச் சுற்றவேண்டும்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=--=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

”இஞ்சி தின்ற குரங்கு போல’

என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருள் சரியாகப் பல்ருக்குத் தெரியாது. இஞ்சியின் அளவில் இஞ்சியைப் போன்றே தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கு குரங்குக்கு மிகவும் மோகம். இது, மாங்கய் இஞ்சியைப் போன்றது. அதிகம் காரம் இல்லாதது.. அதில்ருசி கண்ட குரங்கு அது போலவே தோன்றும் இஞ்சியைக் கண்டு ஏமாந்து கடித்து சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் சொல்லத் தேவை இல்லை. ஏற்க்னவே குரங்கு முகம், இப்போது கேட்கவேண்டுமா?

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கொட்டாவி

-=-=-=-=-=-=

கொட்டாவி விடும்போது வாய்க்கு எதிரே கையை வைத்துக் கொள்ள வேண்டும். கொட்டாவி சோம்பலுக்கும், நோய்க்கும், தூக்கத்திற்கும் தூதன் போன்றது. உள் இருக்கும் கெட்ட காற்று, மதகு வழியாக நீர் வெளிவருவது போல வெளியே வருகின்றது. அது பிறர்மேல் பட்டால் நோய் தொற்ற வாய்ப்புண்டு. ஒருவர் கொட்டாவி விடும் போது பார்த்தால் பார்ப்பவரையும் அது தொற்றிக் கொள்ளும். கையால் மறைப்பதாலும், விரல்களால் சிட்டிகை (சுடக்கு) போடுவதாலும் அஹ்தூய்மையற்ற காற்று நேராகப் பிறர்மேல் பரவாமல் காற்றுடன் கலந்துவிடும். ’சிவ’ ,’சிவ’, ’கிருஷ்ண’, ‘கிருஷ்ண’ என்று அச்சமயம் கூறுவர்.

பசுக்களுக்கு நடுவிலும், பெரியோர்களுக்கு நடுவிலும்,, அக்னி- பந்தணர் இவர்களுக்கு இடையிலும், தம்பதிகளுகு இடையிலும், குரு- சீடர்களுக்கு நடுவிலும், அண்ணந்தம்பி இடையிலும், அக்காள்- தங்கை இடையிலும், குழந்தை- தாய், பசு- கன்று இடையிலும் போகக் கூட்டாது. நந்தி-சிவன், சிவன்- பார்வதி,, பெருமாள்- பிராட்டி, பெருமாள்- கருடன் இவர்களுக்கு இடையில் சென்றால் முன்னர் நாம் செய்த புண்ணியம் அனைத்தும் அகன்றுவிடும். அவர்களைப் பிரதக்ஷிணமாகச் சென்றால் புண்ணியம் உண்டாகும்.

உபவாஸம் என்பது, சரீர சுத்திக்காகவும், மன சுத்திக்காகவும், தெய்வப் பிரஸாதம் பெறுவதற்காகவும் ஏற்பட்ட கர்மா. நினைத்தபடி சாஸ்திரமில்லாமல் உபவாஸமிருக்கக் கூடாது. ‘உபவாஸம் இரு என்று சாஸ்த்திரம் விதித்த காலத்தில் உண்ணக் கூடாது.

மனஹு ஒருமைப் படுவதற்கு உபவாஸம் ஓர் உயர்ந்த சாதனம். உடலே தர்மத்திற்கு முதல் சாதனமாதலால் நோய்வாப் படும்படி கடினமான உபவாஸத்தைக் கைக்கொள்ளலாகாது.கலியில் அன்னத்தை ஆசரயித்தே ஜீவனிருப்பதால், அடிக்கடி அனாவசியமான உபவாஸத்தால் உடலைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது.

நன்றி சங்கர சாஸ்த்ரிகள்.`

-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=--

ஓம்.

இந்தக் கொட்டாவியினால் ஒரு அவஸ்தையடைந்த ஒரு ஜீவன் இலக்குவன்.

ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தின் போது ரகுவம்ஸ குலகொழுந்து ஸ்ரீ ராமபிரான் மங்கள ஸ்நானம் செய்து, புனிதப் புத்தாடைகள் புனைந்து , அணிகலன்கள் அரசருக்குரியனவற்றை அணிந்து, ஏவலர் வெண்சாமரம் வீச, மகனீயர்களும் ரிஷி புங்கவர்களும், வேத விற்பன்னர்களும் மறையோத, வெண்கொற்றக் குடை தாங்கி ராஜ நடை பயின்று வர, தாய்மார்களும் உடன் பிறப்புகளும் அனுமனும் சீதா பிராட்டியும் புளகாங்கிதம் எய்தி, அரசபரம்பரை உறவுகள் குழுமியிருக்க, மக்கள் மன்னர்மன்னனின் பட்டாபிஷேகக் காட்சியை எதிர்நோகியிருக்க பெருங் கொட்டாவியின் திடர் திணிப்பால் நைந்த இலக்குவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலி இலக்குவனின் இருக்கையினின்றும் வெளிப்போந்து அவையெங்கும் சுற்றிச்சுழன்று அகில் மணத்துடன் கலந்து சம்பிரதாய அமைதியான வாத்திய ஒழுங்கு தாண்டி ரகுவம்ஸதிலகம் உட்பட அனைவருக்கும் கேட்டு அனைத்து மக்களும் பிராட்டியுட்பட ஒருகணம் ஒலி எழுந்த பக்கம் நோக்கினர். அவையடக்கமின்றி ஒலியின் பிறப்புக்கு யாது காரணம்? என விழிகள் அனைத்தும் இலக்குவனின் இருக்கையில் தஞ்சமடைய, அவரவர் மனதில் தோன்றியவாறு காரணம் கற்பித்துக் கொண்டு வாளாவிருந்தனர். அவையின் செயற்பாடுகள் ஒருகணம் நின்று மீண்டும் செயற்பட்டன. எனினும் அனைவரையும் ஈர்த்த சிரிப்பொலியின் காரணத்தை உண்மையில் அறிய அனைவரும் விரும்பினர். இலக்குவனிடம் நேரடியாக எவரும் கேட்க முன்வராதபோது சபையின் நிகழ்வுகள் பழுதின்றி நிறைவேறின.

சீதா பிராட்டி இலக்குவனிடம் நாசுக்காக காரணம் விசாரித்தார். இலக்குவன் சொன்னான்,” யாசித்துப் பெற்றேன் ஒருவரம். அந்தக் காலக் கெடு முடிந்தவகையால், வரம் தந்தவர் என்னை நெருக்க வேறு எதுவும் செய்யவியலாத நிலையில், கெஞ்சினேன், கால்பிடித்தேன், மேலும் ஒருகணம் அந்த வரத்தை நீட்டிக்க வேண்டினேன். இரக்கமற்ற அவர் என்பால் கருணை கொள்ளாமல், என் கோரிக்கையை ஏற்காமல் என்னை பெரிதும் ஆள்படுத்தி , என் வலிமை எல்லாம் சோதித்து என்னைப் பலவீனன் ஆக்கி, நொந்துபோய் அவர் காலடியில் விழுமாறு செய்துவிட்டார். என்னை மீறிய அந்த நடவடிக்கையின் செயற்பாடு என்னை வெகுள வைத்தாலும் எதுவும் செய்யவியலாதவனானேன். கையறு நிலையில் அவரிடம் மன்னிப்பு கோரிய நிலையினை நினைந்தேன். என் இயலாமை என்னை உறக்கச் சிரிக்கச் செய்துவிட்டது. பிழை பொறுக்க வேண்டுகிறேன்” என்றான்.

யார் அந்த வரமளித்தவர்? அவர் ஏன் நெருக்கினார்? என்று பிராட்டி வினவ,

இலக்குவன் சொன்னான்,” பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ராமனைப் பின்தொடர்ந்து பாதுகாக்கவும் உடன் உறையவும் வேண்டி நித்திராதேவியிடம் வனவாசம் முடியும் வரை தூக்கம் துறக்க வரம் கேட்டேன். அவள் ஒரு நிபந்தனையின் பேரில் வரம் தந்தாள். வனவாசம் முடிந்தகையுடன் உன்னை ஆக்கிரமித்துக் கொள்வேன்; அரைக் கணமும் பொறுக்கமாட்டேன், சம்மதமா?” என்று விதித்து நான் உளமாற அறுதியிட்டுச் சொன்னமையால் ஏற்றுக் கொண்டு வரம் ஈந்தாள்.

இன்றைய பட்டாபிஷேகம் காண எனக்கு மட்டும் ஆசையில்லையா? என்னமன்றாடியும் விடாப்பிடியாக என்னை ஆக்கிரமிக்க வந்தவளைக்கண்டு, அவருடைய அசையா உறுதியைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். அதனால் சிரித்துவிட்டேன்” என்றான்.

-=-=-

கீரை- சிறுகீரை

மருத்துவ குணம் கொண்ட சிறுகீரை.
சிறு கீரைக்குச் சில்லி, சாகினி, மேகநாதம் என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவர இயல் பெயர் (Amaranthus Polygonoides) இது தண்டுக் கீரை இனத்தைச் சேர்ந்தது என்றாலும் கீரைத்தண்டைப்போன்று உயர்ந்து வளராது. இது எந்தக் காலத்திலும் கிடைக்கும் கீரை. சீக்கிரமாக வளரும் தன்மையுடையது. கோடை காலத்திலும் பயிரிட ஏற்றது. இதைத் தினந்தோறும் சாப்பிட்டுவந்தால் ரத்த விருத்தி ஏற்படும். இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புத்திக் கூர்மையும் நினைவாற்றலும் பெருகும்.

நூறு கிராம் சிறு கீரையில் புரதம் 2.8 கி, கொழுப்பு 0.3 கி, மாவுப் பொருள் 4.8 கி., கால்சியம் 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் 55 மில்லி கிராம், இரும்புச்சத்து 27.3 மில்லி கிராம் உள்ளன இதிலுள்ள சக்தி 33 கிலோ கலோரிகள்.

சிறு கீரை நமது உடலில சேர்ந்துள்ள நச்சுக்களை முறிக்கும் தன்மை கொண்டது. இன்றைய நச்சு மயமான நவீன வாழ்க்கையில் உணவு, உடை, தொழில், சுற்றுப் புறச் சூழல் என அனைத்துமே நச்சு நிறைந்துள்ளன. இதன் காரணமாக நமது உடலில் சேரும் நச்சுத் தன்மையை மாற்ற சிறு கீரை பெரிதும் உதவுகிறது. இக்கீரை சீரான குளிர்ச்சியைத் தருவதால், உடல் நோய்களுக்கு நாம் சாப்பிடும் மருந்துகளினால் ஏற்படும் உடல் எரிச்சல், சூடு ஆகியவற்றைத் தணிக்கும்.

சிறுகீரையின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து சமைத்து உண்பதால் உடல் வலிமைபெறும். முகம் பொலிவடையும். உடல் வனப்பை கூட்டும். பித்தம், வாத நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிர்க்கு மிகுந்த நன்மை தரும். எலும்புகள் வளர்ச்சியடைய உதவும். மூத்திரப் பை கோளாறுகளை நீக்கும். மது குடிப்பதால் உண்டாகும் குடல், மூத்திரப்பை சம்பந்தப்பட்ட உபாதைகளைக் குணமாக்கும். சோகையைப் போக்கும். காச நோயைப் போக்க உதவும். உடலில் ஏற்பட்ட புண்களை விரைவில் குணமடையச் செய்யும். வீக்கம் குறைய உதவும்.

சிறுகீரையைப் பருப்போடு சேர்த்து சமைத்து உண்டால் சிறு நீர் சீராக வெளியேறும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

வாரம் ஒருமுறை சிறுகீரையை உணவில் சேர்த்துவந்தால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம், கண்கட்டிகள் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கல் தீர இக்கீரை அற்புதமான மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோய் குணமாகவும் இது உதவுகிறது. தொடர்ந்து சிறுகீரையை உட்கொண்டுவருவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதால் சிறுநீரிலும் ரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும்.

சிறு கீரையின் வேரை ஒரு பிடி அளவு எடுத்து நீர்விட்டுக் கஷாயமாக்கி கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம், ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்து நெய் விட்டுத் தாளித்து சூப் தயாரித்து அருந்திவந்தால் சிறு நீரக நோய்கள் குணமாகும்.

சிறு கீரையில் கால்சியம் சத்து அதிகமிருப்பதால் எலும்பைப் பலப்படுத்தும் சக்தி இதற்கு அதிகம் உண்டு.

வாழ்க்கைப் பாடம்

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.

பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன.

விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.
அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?” அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்” ”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே
போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது.

இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

தமிழக முதல்வருக்கு ஓட்டாண்டியின் கடிதம்

கோடாணு கோடி மக்களுக்கு இலவசமா தாரை வார்த்து தரும் தர்ம வள்ளலயே அப்படின்னு போஸ்ட்ர் அடிக்கும் ஏழை மக்கள் இருக்கும் வரை இலவசம் தந்தே தீருவேண்ணு பிடிவாதம் செய்யறீகளே....உங்களுக்குத்தாங்க இந்த கடிதம்.ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய் போன ஓட்டாண்டிங்க நாங்க... எல்லா கட்சிக்காரங்களுக்கும்.



இலவசம் இலவசம்னு தர்றீங்க சரி. ஒரு படி மேலேயே போய் அரிசி ஒரு ரூபாய்ங்கறிங்க.

ஆனா தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசாங்க கழிப்பிடங்களில் கூட ஏனய்யா டீசல், பெட்ரோல் விலையாட்டும் ஏத்திட்டீங்க....அத அரசாங்கம் உற்பத்தி பண்ணலையே , ஆசாமிதானே உற்பத்தி பண்ணறான்.... இதுக்கெல்லாம் கூடவா விலை ஏத்தறது , வரும்காலத்துல டேக்ஸ் ஏதும்போட்ற மாட்டீங்களே.....

.....லோடிங் ஒரு ருபாய். அன்லோடிங் 4 ரூபாய்.

எந்த ஊர் நியாயம்யா இது... அப்படியாவது அந்த கழிப்பிடம் நல்லாவா இருக்குது....

உங்களுக்கு விளக்கி சொல்றதுக்குகாக ஒரு சின்ன குட்டிக்கதைங்க..



.பஞ்ச பாண்டவர்களின் முதல்வரான தர்மர் பற்றி உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.

உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்னு எல்லாம் சொல்லுவாங்க. அவரை தவிர இவ்வுலகித்தலயே அதிக தர்மமும், தானமும் செய்பவர்கள் யாரும் இருக்கமுடியாதுங்கிறது அவரு எண்ணம். இதுவே அவருக்கு அகந்தையாக மாறக்கூடாதுன்னு என்று நினைத்த கண்ணபிரான் தர்மரை மலைநாட்டு மன்னர் மகாபலி சக்கரவர்த்தியின் நாட்டுக்கு அவரை அழைத்து சென்றார்.அங்குள்ள ஒரு வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கும்போது அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். அவர்கள் குடித்து முடித்ததும் தங்க செம்பை வீசி ஏறிந்துவிட்டார்.

தர்மர் அந்த பெண்மணியிடம் அம்மா தங்கச் செம்பை பத்திரமா வைத்திருக்கவேண்டுமே? நீங்கள் வெளியில் எறிந்துவீட்டீர்களே என்று ஆச்சர்யமாக கேட்டார்.அந்த பெண்மணியோ எங்கள் வீட்டில் நாங்கள் ஒரு முறை பயன்படுத்தியை மறுமுறை பயன்படுத்துவதில்லை என்று அலட்சியமாக பதில் கூறினார்.பின் மகாபலியின் அரசவைக்கு சென்ற கண்ணபிரான் மகாபலியிடம் தர்மரை அறிமுகப்படுத்தும்போது இவர்தான் தர்மர், இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர் என்ற சொன்னாருங்க.

தர்மரின் முகத்தில் கூட விழிக்காமல் கிருஷ்ணனிடம் பேசிய மகாபலி.,கண்ணபிரானே என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. ஆகையால் எல்லாரிடமும் செல்வம் குவிந்துள்ளது. எனவே பிச்சை என்ற சொல்லுக்கும் தர்மம் என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெறவேண்டியதும் அவசியமில்லை.. இவரது நாட்டில்தான் ஏழைகள் அதிகமாக உள்ளார்கள் போலும், எனவேத்தான் எல்லாரும் தானம் கேட்டுவருகின்றனர்.இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த அரசரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன் என்றார்.

மேல உள்ள வரிகளும் உங்களுக்கு தானுங்க.... நீங்களும், இலவசம் இலவசம்னு அள்ளித்தர்றதுக்குபதிலா விவசாயத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் வளர்த்துவிடுங்க. இதுபற்றி உங்க மக்களட்ட கேட்டா பசிக்கு மீன கொடுக்கிறதுக்கு பதிலா, மீன பிடிக்க கத்துக்கொடுங்கன்னு சொல்றாங்க....அதுக்காக சட்டுபுட்டுனு வெளிநாட்டு காரன கூட்டிட்டு வந்துடாதிங்க. உலக நாட்டில் இருந்து ஆள கூட்டிட்டு வந்து பண்றது ஒரு வியாபாரம்னாலும் உள்ளூர் வியாபாரமும் பெருகணுமுங்க...நீங்க நாலும் தெரிஞ்சவர்... புரிஞ்சுப்பீங்ன்னு நம்பறேனுங்க......



இப்படிக்கு

ஓட்டாண்டி...