பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

கொட்டை வகை உணவுகளின் இரகசியம்.

பறங்கிக்காயையும் அதன் விதைகளையும் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். பறங்கி விதையில் உள்ள குகர்பெட் டாசின்ஸ் என்ற பைட்டோ-நியூட்ரியண்ட் வயதாக வயதாக விந்துச் சுரப்பி விரைந்து பெரிதாக வளர்வதைத் தடை செய்துவிடு கிறது. பிராஸ்டேட் சுரப்பி என்றும் சொல்லப்படும் இந்த சுரப்பியை பெரிதாகாமல் பார்த்துக் கொள்வதுடன் எலும்பு மண்டலம், கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கும் படு தாராளமாக துத்தநாக உப்பு பறங்கி விதைகளில் உள்ளது. மேலும் ஒமேகா-6 என்ற முக்கியமான கொழுப்பு அமிலம், மாங்கனீஸ் தாது உப்பும் இந்த விதைகளில் உள்ளன. தினமும் 20, 25 பறங்கிவிதைகளையே சாப்பிட்டு வந்தால் பிராஸ்டேட் சுரப்பி மெதுவாக வளர உதவி செய்து நீண்ட நாள்கள் வாழலாம்.

காலையில் எழுந்ததும் ஒரு கோப்பை கறுப்பு காபி அருந்தினால் நேற்றைய கவலை எல்லாம் உடனே ம(¬)றந்து புத்துணர்வு ஏற்படும். அதிகபட்சம் (பால் கலவாத) மூன்று வேளை காபி அருந்திவந்தால்போதும். நாள் முழுவதும் புத்துணர்வுடன் வாழலாம். நான்காவது முறையாக இன்னொரு வேளை (Black Coffee) காபி அருந்தினால் இதே காபி உடலில் நீர்க்கூறை அகற்றுவதுடன் மனக்கவலையையும் அதிகரித்துவிடும். எனவே, தமிழர்கள், அளவுடன் தண்ணீர்விடாத பாலில் புது டிக்காஷன் காபியை அருந்தி (இரு வேளை மட்டும்) வாருங்கள். ஒருவேளை கறுப்பு காபி அருந்துங்கள். இதனால் உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் உற்சாகமாக வாழவைக்கும். ஹார்வார்டு பல்கலைக்கழகம் 51 ஆயிரம் பெண்களை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் மிகவும் படபடப்பும் டென்ஷனும் ஆன பெண்கள் தினமும் மூன்று வேளை கறுப்பு காபி அருந்தி வந்ததன் மூலம் உற்சாகமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இத்துடன் குறிப்பிட்ட அமினோ அமிலத்தின் மூலம் செரோட் டனின் என்ற உற்சாகத்தைப் புதுப்பிக்கும் பொருளும் நன்கு சுரந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஒரு தடவை கறுப்பு காபி அருந்தினால் நான்கு மணி நேரம் மன இறுக்கம் இன்றி நம் வேலைகளைச் செய்ய முடியும் என்கிறார் மைக்கேல் லூகாஸ். இவர் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் டாக்டர் ஆவார். மொத்த த்தில் காபியில் உள்ள காஃபின் உண்மையில் ஓர் ஆரோக்கிய மருந்து பானம் என்கிறார் இவர். எனவே, இரண்டு வேளை கறுப்பு காபி, ஒரு வேளை கறுப்பு தேநீர் என்றும்கூட நீங்கள் அருந்தி வரலாம். பால் கலக்காமல் காபி, தேநீர் அருந்த முடிந் தவரை முயற்சி செய்யுங்கள்.


கொட்டை வகை உணவுகள் உண்மையில் நல்லதா?

வாரத்திற்கு 5 முறை ஒரு கைப்பிடி அளவு ஏதாவது ஒரு கொட்டை வகை உணவைச் சாப்பிட்டு வந்தால் 5 முதல் 15 ஆ ண்டுகள் வரை கூடுதலாக வாழலாம். லோமா லிண்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இப்படிச் சாப்பிடுகிறவர்களின் ஆயுள் 1லு முதல் 2லு ஆண்டுகள் வரை அதிகரிப்பதைக் கண்டுபிடித்தனர். நீண்ட நாள்கள் இந்த அளவு கூடாமல் குறையாமல் சாப்பிட்டு வந்தால் 15 ஆண்டுகள் கூடுதலாக உங்கள் உடல்நலம், ஜாதகநலன் போன்றவற்றைத் தாண்டி உறுதியாக வாழலாம். கொட்டை வகை (பாதாம், வேர்க்கடலை, வால்நட், பிஸ்தா போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை மாற்றி மாற்றி சாப்பிடலாம்) உணவு சாப்பிட்டு வரும்போது இதயநோய், மாரடைப்பு போன்றவை தாக்குவது 35% முதல் 50% வரை உடனடியாக கு றைகிறது. இதனால் மற்றவகை ஆரோக்கிய உணவுகளும் சாப்பிடுவரும்போது இதய நோய் முற்றிலும் குணமாகி வாழ்நாள் நீடிக்கிறது. இதுவே நீண்ட ஆயுளைத் தரும் கொட்டை வகை உணவுகளின் இரகசியம்.

‘எய்ட்ஸ்’ நோய்

உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நோய் ‘எய்ட்ஸ்'.

‘எய்ட்ஸ்’ என்றால் என்ன? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த ‘எய்ட்ஸ்’ எவ்வாறு ஏற்படுகிறது? எதன் மூலம் ஏற்படுகிறது? என்பது குறித்து அறிவியல் அறிஞர்களும், மருத்துவர்களும் மிகவும் குழம்பிப் போய் விட்டார்கள். அமெரிக்காவில் இளம் வயதினர் சிலர் மிகவும் அபூர்வமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து இறப்பது மருத்துவர்கள் மனதில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. எதனால் இவர்களுக்கு இவ்வித புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் உடலில் எதிர்ப்புத்திறன் ஏன் குறைகிறது என்றும் மருத்துவர்கள் ஆராயத் தொடங்கிய போது தான் இது ஒரு வைரஸால் ஏற்படும் பாதிப்பு என்பது தெரியத் தொடங்கியது. இனி ‘எய்ட்ஸ்’ எப்படி படிப்படியாக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து இன்றளவு வந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

எய்ட்ஸுக்கு வரலாறு உண்டு 1978-ல் கடுமையான ‘புற்றுநோய்’ மற்றும் ஓர் அரிய தொற்று நோய் முதன் முதலில் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தென்பட்டது. 1981-ல் அமெரிக்காவில் ‘ஓரினச் சேர்க்கை’ கொண்டவர்களுக்கு உடலுறவின் மூலமாக கழுத்துப் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 1982 இரத்தம் செலுத்துகின்ற போதும், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கும் ‘எய்ட்ஸ்’ வருவதாக கண்டறியப்பட்டது. இப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் இருப்பது அறியப்பட்டது. 1983 அமெரிக்காவில் 2500 எய்ட்ஸ் நோயாளிகளிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ‘எய்ட்ஸ்’ நிலையங்கள் துவங்கப்பட்டன. 1984 ஆப்பிரிக்காவில் உடலுறவு மூலமாக எய்ட்ஸ் பரவுவது ஆய்வின் மூலம் அறியப்பட்டது. 1985 தென் கிழக்கு ஆசியாவில் எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். உலகம் முழுவதும் 24,424 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறியப்பட்டது.

1986 உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள சிபாரிசு செய்தது. இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில் ‘எய்ட்ஸ்’ நோயாளி இருப்பது கண்டறியப்பட்டது. 1987 எய்ட்ஸ் நோய் 120 நாடு களில் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அங்கு மொத்தம் 73,747 பேர் இந்த நோய்க்குப் பலியாகி இ ருக்கிறார்கள். 1989 இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயாளி என உறுதி செய்யப்பட்டவர்கள் 40 பேர். 1990 இந்தியாவில் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகள் 2054 பேர். இதில் உறுதி செய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் 41 பேர். 1992 இந்தியாவில் ‘தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு’ துவங்கப்பட்டது. 1993 சென்னையில் ‘மாநில எய்ட்ஸ் தடுப்பு மையம்’ புதிய கட்டடத்தில் துவங்கப்பட்டது. தமிழக அரசு இவ்வலுவலகத்திற்கு நிதி மற்றும் நிர்வாக அலுவல்களில் உதவி புரிய பல்வேறு குழுக்களை அமைத்தது.

‘மாநில எய்ட்ஸ் தடுப்பு மையம்’ தமிழகமெங்கும் துண்டு காகிதங்கள், விளக்கப்படம், ஒலிநாடா போன்றவற்றின் மூலமாக சிறப்பாக, எய்ட்ஸை நாட்டில் மேலும் பெருகவிடாமல்... தடுத்து நிறுத்தப் பணியாற்றி வருகிறது.

எய்ட்ஸ் ஒரு வகை வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. இது ‘ரிட்ரோவைரஸ்’ இனத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸாகும். இந்த வைரஸ் மனித உடலில் நுழைந்து தன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு மனித உடல் செல்களை குறிப்பாக வெள்ளையணுக்களை அழிக்கிறது.

‘எய்ட்ஸ்’ எவ்வாறு பரவுகிறது?

எய்ட்ஸ் பரவும் வழிகள் :

எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் மனித உடலைப் பல வழிகளிலும் வந்தடையும்.

உடலுறவின் மூலமாக :

உடலுறவின் மூலமாக இந்த வைரஸ் கிருமிகள் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இவ்வாறான உடலு றவு இயல்பான, இயற்கையான ஆண் பெண் உடலுறவாக இருக்கலாம். ஓரினச் சேர்க்கையாகவும் இருக்கலாம்.

இரத்தத்தின் மூலமாக :

இரத்தத்தில் இந்த வைரஸ் கிருமிகள் மிகுந்திருப்பதால் ஒருவருக்கு ‘இரத்தம்’ செலுத்தும் போது அதில் இந்த வைரஸ் கிரு மிகள் இருந்தால், செலுத்தப்படும் இரத்தத்தின் மூலமாகவும் ஒருவருக்கு ‘எய்ட்ஸ் ஏற்படலாம்.

ஊசிகளின் மூலமாக :

ஊசிகள் மூலமாகவும், ‘எய்ட்ஸ்’ கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு. இந்த வகையில் ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றொரு நோயாளிக்குப் பயன்படுத்தும் போது ‘எய்ட்ஸ்’ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிலும்கூட, இரத்த நாளங்களில் ஊசி போட்ட பிறகு, அதே ஊசியைப் பயன்படுத்துவதால், இக்கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வகையில், கு றிப்பாக, போதை மருந்துகளுக்கு அடிமையாகி ‘போதை மருந்துகளை ஊசி மூலமாக இரத்த நாளத்தில் செலுத்தும் நபர்களுக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் பெரும்பாலும், ஒருவர் பயன்படுத்திய ஊசியை வைத்தே மற்றவருக்கு போதை மருந்து போடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால், இவர்களில் ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ இருந்தாலும் போதை ஊசிகளின் மூலமாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.

தாய் மூலமாக :

கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு ‘எய்ட்ஸ்’ இருந்தால், அவள் மூலமாக, அவள் கருப்பையில் வளரும் சிசுவிற்கும் இக்கிருமிகள் பரவிவிடும். இதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ‘எய்ட்ஸ்’ நோய், பிறக்கும்போதே ஏற்பட்டிருக்கும்.

பிற வழிகள் :

நோயாளிகளின் உடல் திரவங்கள்- விந்து, நீர், இரத்தம் போன்றவை உடல் காயங்களின் மூலமாகவும் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

‘எய்ட்ஸ்’ எந்த வழிகளில் பரவாது?

‘எய்ட்ஸ்’ நோய் எந்தெந்த வழிகளின் மூலமாகப் பரவும் என்று எழுதியிருப்பதிலிருந்தே மற்ற வழிகளின் மூலமாக பரவாது என்று தான் அர்த்தம். என்றாலும் ‘எய்ட்ஸ்’ குறித்து மக்களிடம் பல்வேறு ஐயங்களும், பயங்களும், பீதியும் இருப்பதால் எந் தெந்த வகைகளில் பரவாது என்பதைக் குறித்தும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டியுள்ளது. கொசுக்களாலும், மூட்டைப் பூச்சிகளாலும் எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் பரவுவது இல்லை. உணவு உண்பதற்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள், பண் டங்களின் மூலமாகவும் எய்ட்ஸ் கிருமிகள் பரவுவது இல்லை. கழிவறைகள், குளியலறைகள் மூலமாகவும் எய்ட்ஸ் கிருமிகள் பரவுவது இல்லை. ஆடைகள், அணிகலன்கள் மூலமாகவும் இக்கிருமிகள் பரவுவது இல்லை. நோயாளியுடன் பேசுவதாலோ, தொடுவதாலோ, ஒன்றாக உறங்குவதாலோ, கை குலுக்குவதாலோ இக்கிருமிகள் பரவுவது இல்லை.
வைரஸ் கிருமி உடலில் நுழைந்த பிறகு எவ்வளவு காலம் கழித்து ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்படும்?

வைரஸ் கிருமி மனித உடலில் நுழைந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக சிடி 4 என்ற வெள்ளையணுக்களை அழித்து, உடலின் எதிர்ப்புத்திறனைக் குறைத்து விடும். எதிர்ப்புத் திறன் குன்றிய பிறகுதான் உடலில் பல்வேறு நோய்களும் ஏற்படும். தொந்தரவுகளும் உண்டாகும். இவ்வாறு ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் மனித உடலில் நுழைந்து ‘தொந்தரவுகள்’ ஏற்படுவதற்கு ஆகும் காலம் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடும். அது இந்த வைரஸ் எந்த வகையில் உடலில் நுழைந்தது என்பதைப் பொறுத்து அமையும். இரத்தம் செலுத்தியதன் மூலமாக ஒரு நபருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டால் அவருக்கு மிக விரைவில் உடல் பாதித்து பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படும். உடலுறவின் மூலமாக ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டால், அதனால் ஏற்படும் தொந்தரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலைப் பாதித்து நீண்ட காலம் கழித்துத்தான் தொந்தரவுகள் ஏற்படும். பெரும்பாலும் ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்தது முதல், தொந்தரவுகள் ஏற்படும் வரை ஆகும் காலம் சுமார் 6 மாதத்திலி ருந்து 10 வருடம் வரை கூட இருக்கும்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

‘எய்ட்ஸ்’ நோயின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. அதாவது, நோய் ஏற்பட்டவுடனே எல்லாருக்கும் தொந்தரவுகள் ஏற்ப ட்டு விடுவதில்லை. ஆரம்பத்தில் ‘எய்ட்ஸ்’ நோய் உள்ளவர்களும் ஆரோக்கியமாகவே இருப்பது போல் இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகவே உடல் பாதிப்படையத் தொடங்கும். இதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்தும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும், உடலின் எதிர்ப்புத் திறனைப் பொறுத்தும் இது வித்தியாசப்படும். மேலும், எந்த வழியில் ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டது என்பதைப் பொறுத்தும் இதன் பாதிப்பு ஏற்படும் காலம் மாறும். ஒருவருக்கு இரத்தம் செலுத்தி ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டிருந்தால், அவருக்கு உடற்பாதிப்புகள் வேகமாக ஏற்பட்டு விடும். ஏனெனில், ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் நேரடியாக இரத்தத்தை அடைந்த பிறகு, இரத்த அணுக்களை விரைவாக பாதிப்படையச் செய்வதால், இந்நோய் இவர்களுக்கு விரைவாக ஏற்பட்டு விடும். அதே நேரம் உடலு றவினால் ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு இரத்த அணுக்கள் பாதிப்படைந்து நோய் ஏற்படத் தாமதமா கும். எப்படியிருந்தாலும், ‘எய்ட்ஸ்’ வைரஸின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். ஏற்பட கொஞ் சம் முன் பின் ஆகலாம்.

நோய் ஏற்படும் காலம் :

இவ்வாறு ஒருவருக்கு வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து ‘எய்ட்ஸ்’ ஏற்பட சுமார் 6 மாதங்கள் தொடங்கி 10 வருடங்கள் வரை கூட ஆகலாம். இந்தக் காலகட்டத்தில்தான் ‘எய்ட்ஸ்’ கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலைப் பாதிப்படையச் செய்து, இரத்த வெள்ளையணுக்களை அழித்து உடலின் எதிர்ப்புத் திறனை பெரிதும் குறைத்துவிடும். உடலின் எதிர்ப்புத் திறன் நன்கு குறையும்
போது, அந்த நபர் பல்வேறு தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகிறது. அப்போதுதான் நோயாளிக்குப் பல்வேறு நோய் அறிகுறிகளும் ஏற்படுகின்றன.

முக்கிய அறிகுறிகள் :

‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டவர்களுக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் ஏற்படும்.

1. உடலின் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும். மருத்துவப் பரிசோதனையில் சமீபகாலமாகக் குறைந்தபட்சம் நோயாளிக்கு 10% உடல் எடை குறைந்திருக்கும்.

2. நோயாளிகளுக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படும். சாதாரண வயிற்றுப் போக்கிற்கான மருந்துகளால் இது கட்டு ப்படாது. இந்தத் தொந்தரவு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும்.
3. இந்த நோயாளிகளுக்கும் பல்வேறு தொற்றுக் கிருமிகளின் பாதிப்பால் காய்ச்சல் / ஜுரம் ஏற்படும். அதுவும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் காணப்படும். சாதாரண காய்ச்சல் மருந்துகளுக்கு இக்காய்ச்சல் குறையாது. மேலும் உடலின் எதிர்ப்புத்திறன் குன்றி விடுவதால், நோயாளிகளுக்குப் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும்.
காசநோய் பாதிப்பு :

குறிப்பாக இவர்களுக்கு காசநோயின் பாதிப்பு ஏற்படும். இதனால் இவர்களது நுரையீரல் பாதிக்கப்படும். மேலும், சாதாரண மனிதர்களுக்கு ஏற்படாத காசநோயை ஒத்த பிற கிருமிகளால் கூட இவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும். மேலும், ப ல்வேறு தொற்று நோய்க் கிருமிகளால் இவர்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டு ‘நிமோனியா’ பாதிப்பும் ஏற்படும். இதன் காரணமாக இவர்களுக்கு இருமல், சளி வெளிப்படுதல், சளியில் இரத்தம் கலந்திருத்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இவர்களுக்கு பூஞ்சைக்காளான் கிருமிகளாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த நோயாளிகளுக்கு உடலின் எதிர்ப்புத் திறன் குறைவதாலும், வாய்ப்பகுதிகளின் பூஞ்சைக் காளான்களின் பாதிப்பு ஏற்படும்.

தோல் பாதிப்புகள் :

இந்த நோயாளிகளுக்கு, வைரஸ் கிருமிகளாலும், பிற நுண் கிருமிகளாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, தோலில் இவர்களுக்கு ‘அக்கி’ பாதிப்பு ஏற்படும். இது ஏற்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் இருக்கும். அக்கி ஏற்பட்ட இடத்தில் எரிச்சல், வலி இருக்கும்.
நரம்பு மண்டல பாதிப்பு :

இந்த நோயாளிகளுக்கு சில வகை புற்றுநோய்களின் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, தோலில் இணைப்புத் திசுக்களில் ஏற்படக்கூடிய, அபூர்வ புற்றுநோயான ‘சார்கோமா’ ஏற்படும். மேலும் இந்த நோயாளிகளுக்கு தோல் பாதிக்கப்பட்டு உடலெங்கும் தாங்க முடியாத ‘அரிப்பு’ ஏற்படும். உடலிலுள்ள பல்வேறு கழலைகளிலும் வீக்கமும் ஏற்படும். இந்த நோயாளிகள் பலருக்கு தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும்.
எய்ட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் :
‘எய்ட்ஸ்’ நோயை நோயாளியின் பல்வேறு உடல் பாதிப்புகளின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ளலாம் என்றாலும், இந்த நோயை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை செய்தாக வேண்டும். இதற்கான பல்வேறு இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. இந்த நோயாளிகளுக்கு சில பொதுவான இரத்தப் பரிசோதனைகளுடன், சில விசேஷ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

பொதுவான பரிசோதனைகள் :

பொதுவான பரிசோதனையில் இரத்தத்தின் மொத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வெள்ளையணுவின் தனிப்பட்ட எண்ணிக்கை, இரத்த ஹீமோகுளோபின் போன்றவைகள் செய்யப்படும். இந்த நோயாளிகளுக்குப் பொதுவாக, இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். குறிப்பாக, ‘லிம்போசைட்’ வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்திருக்கும். இத்துடன், ‘ஹீமோகுளோபினின்’ அளவும் குறைந்தே காணப்படும்.

‘எலிசா’ பரிசோதனை

‘எலிசா’ பரிசோதனையின் மூலம் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி. வைரஸ் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இது ஒரு எளிய பரிசோதனையாகும். இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு அரசாங்க மருத் துவமனைகள் மற்றும், தன்னார்வ நிறுவனங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

‘வெஸ்ட்டன் பிளாட்’ பரிசோதனை :

இவ்வாறு ‘எலிசா’வில் வந்த நபருக்கு ‘எய்ட்ஸ்’ கிருமியின் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய ‘வெஸ்ட்டன் பிளாட்’ என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இது, இந்த வைரஸிற்கு எதிராக உண்டான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனையாகும். இதன் மூலம், ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பி.ஸி.ஆர். பரிசோதனை :

‘எய்ட்ஸ்’ வைரஸின் பாதிப்பை அறிந்து கொள்ள மிகவும் நுட்பமான பரிசோதனையாகும் இது. இந்த ‘பி.ஸி.ஆர்.’ பரிசோதனையை, ‘பாலி மரேஸ் செயின் ரியாக்ஷன்’ என்று கூறுவார்கள். இப்பரிசோதனை மூலம், ‘எய்ட்ஸ்’ கிருமி உடலில் இருப்பதை உறுதி செய்வதுடன், எந்த அளவிற்கு இந்த வைரஸ் இரத்தத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்த வைரஸ் உடலில் உட்புகுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்பரிசோதனையின் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முடியும்.

சிடி4 ‘லிம்போசைட்ஸ்’ வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அறிதல் :
இரத்தத்தில் ‘லிம்போசைட்ஸ்’ எனப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, குறிப்பாக சிடி4 என்ற வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும். உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் உண்டாகும். சிடி4 செல்களின் எண்ணிக்கையைக் கொண்டு எய்ட்ஸ் நோயின் தன்மையையும் அறியலாம்.

24 ஆன்டிஜின் பரிசோதனை :

எய்ட்ஸ் நோயை உறுதி செய்ய 24 என்ற ஆன்டிஜின் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆன்டிஜின், எய்ட்ஸ் வைரஸின் உடலிலுள்ள முக்கிய ஆன்டிஜினாகும்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் :

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏதோ பிற நோய்களைப் போலே இந்த நோய்க்கு சிகிச்சை செய்ய முடியாது. ‘எய்ட்ஸ்’ நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதில் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மிகவும் பிரத்தியேக வழிமுறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மூலம் நோயை உறுதி செய்ய வேண்டும். நோயை உறுதி செய்த பிறகு, அந்த நோய் இருப்பது குறித்து நோயாளியின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நோயாளிக்கும் அவருக்கு ஏற்பட்ட நோயைக் கூற வேண்டும். இதற்காக அவர் மனதைத் தேற்றுவது மிகவும் அவசியமாகும். அவரது மனதைத் திடப்ப டுத்தினால்தான் முதலில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்பதையே அவர்களால் தாங்க முடியும். இதில் சிலர் பயத்திலேயே உயிரை விட்டு விடவும் கூடும். அது சாதாரண பயமல்ல... மரண பயம்! ஏனென்றால், ‘எய்ட்ஸ்’ வந்தால் விரைவில் சாகப் போகிறோமே என்ற பயத்திலேயே இவர்கள் வாழ்க்கை வெறுத்து, விரக்தியுடன் வாழ ஆரம்பித்து விடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிடித்தமும் இருக்காது.





உணவுகளைத் தவிர்த்து விடுவார்கள். முறையாக உறங்க மாட்டார்கள். தினமும் பயத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்வார்கள்.

எனவே தான் இப்படியொரு மோசமான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத் தை அவர்களுக்கு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

இரண்டாவது, இந் நோய்க்கு, தற்சமயம் சில மருந்துகள் உள்ளன. அதை உட்கொண்டால் உடல் நிலையில் மு ன்னேற்றம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி அவற்றை உட்கொள்ளச் சொல்ல வேண்டும். இவர்களைப் போல உள்ள பிற நோயாளிகள் சிகிச்சை பெறுவதை யும், அவர்கள் வாழக்கையைப் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதையும் இவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். இந்த நோயாளிகளுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரணமாக இருந்தால், இவர்களை வீ ட்டிலேயே வைத்துசிகிச்சை அளிக்கலாம். மிகவும் முடியாமல் வயிற் றோட்டம், காய்ச்சல் ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்ப ட்டிருந்தால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெரும்பாலும், ‘எய்ட்ஸ்’ நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. எய்ட்ஸ் நோயாளிகளை அன்புடனும், ஆதரவுடனும் கனிவான மனத்தோடும் கவனித்துக் கொள்ள அவர்கள் குடும்பத்தில் கண்டிப்பாக ஒருவராவது இருக்க வேண்டும். எய்ட்ஸ் நோயாளி தினமும் பிற நோயாளிகளைப்போல குளித்து, சுத்தமாக உடலைப் பாது காக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதனுடன் வைட்டமி ன்களும், பிற சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குப் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவை சிறந்த உணவுகளாகும்.

இந்த நோயாளியைப் போல உள்ள நோயாளியுடன் இவர்கள் இருந்தால், ஒரு நட்பும், நேசமும் ஏற்படும்; ஓரளவு விரக்தி மனப்பான்மை குறைந்து விடும். எனவே, இது போன்ற சூழ்நிலையை உருவாக்குவதும் சிறந்ததாகும். இத்துடன் இந்த நோயாளிகளுக்கு, தற்சமயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வைரஸிற்கு எதிராகச் செயல்படும் மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.

மேலும், உடலில் எதிர்ப்புத்திறன் குறைவதால் ஏற்படும் காசநோய், நிமோனியா, தோல் நோய்கள், நரம்பு பாதிப்புகள் ஆகியவற்றிற்கும் முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் :

‘எய்ட்ஸ்’ நோய்க்கு மருந்தில்லை என்று கூறிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று இந்த வைரஸிற்கு எதிராகச் செயல்படும் பல்வேறு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை மருந்துகள் முழுமையாக இந்த வைரஸை அழிப்பதில்லை என்றாலும், அவற்றின் பெருக்கத்தை ஓரளவு குறைத்து, நோய் விரைவில் தீவிரமடைந்து உடலைப் பாதிக்காமலிருக்க உதவுகின்றன.

மருந்துகளின் வகைகள் :

எய்ட்ஸிற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. ‘நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ்’ என்ற நொதியைத் தடை செய்யும் மருந்துகள்.

2. ‘நான் நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான் கிரிப்டேஸ்’ என்ற மருந்துகள்.

3. ‘புரோட்டீயேஸ்’ நொதியைத் தடை செய்யும் மருந்துகள்.

நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியைத் தடை செய்யும் மருந்துகள் :

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இந்த வைரஸ் மனித உடலை அடைந்தவுடன், இரத்தத்தை அடைந்து அங்குள்ள வெள்ளை யணுக்களைத் தாக்க ஆரம்பிக்கும். இவ்வாறு வெள்ளை அணுக்களைத் தாக்குவதற்கு வைரஸிற்கு ‘ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ்’ என்ற நொதி தான் உதவுகிறது. இதன் மூலமாகத்தான் இந்த வைரஸ் வெள்ளையணுவிலுள்ள கருவின் உட்பொருளை தன் னுடைய பெருக்கத்திற்காகப் பயன்படுத்தத் தொடங்குகிறது. எனவே, இந்த நொதியைத் தடை செய்வதன் மூலம், இந்த வைரஸின் பெருக்கம் கட்டுப்படும்.

இந்த வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளில் சில :

ஸ்டோவிடீன், லேமிவிடீன், ஸ்டூவிடீன், டைடேனோசின், ஸால் ஸிட்டாபீன், அபாக்காவீர் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியை தடை செய்யாமல் செயல்படும் மருந்துகளில் முக்கியமானவை :

நெவீரப்பைன், எஃப்பாரென்ஸ், டெலாவீருடீன் ஆகியவையாகும்.

புரோட்டீயேஸ் நொதியைத் தடை செய்யும் மருந்துகளில் முக்கியமானவை :

இன்று எய்ட்ஸ் நோய்க்கு மேற்கூறிய பல்வேறு மருந்துகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அலோபதி மருத்துவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை முறையாகக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். காசநோய்க்குக் கொடுப்பது போன்றே இந்த நோய்க்கும் ஒரே ஒரு மருந்து மட்டும் கொடுத்தால் போதாது. பல மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த மருந்துகளை நீண்ட காலமாகத் தொடர்ந்தும் கொடுக்க வேண்டும். அப்போது தான், நோயின் தீவிரம் ஓரளவு கட்டுப்படும்.

எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பூசி

எய்ட்ஸ் நோயை வராமல் தடுக்க தடுப்பூசிகள் கண்டறிவதுதான் இன்றைய மருத்துவ உலகத்தின் தலையாய பணியாக உள்ள து. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து உலகின் பல்வேறு வளரும் நாடுகளிலும் நடைபெறுகின்றன. தற்சமயம் இந்த ஆராய்ச்சியில் அறிஞர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். இவர்கள் தயாரித்த சில தடுப்பூசிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரு கிறது. இருந்தாலும், முழுமையாக இந்த நோயைத் தடுக்க வல்ல தடுப்பூசிகள் இன்னும் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. விரைவில் அந்த நிலை ஏற்பட்டுவிடுமென அறிஞர்கள் நம்பிக்கை கொண்டு முயன்று வருகிறார்கள். மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். விரைவில் ‘அந்த நல்ல நாள்’ உதயமாகட்டும்!

எய்ட்ஸ் வராமல் பரவாமல் எப்படித் தடுக்கலாம்?

எய்ட்ஸ் நோயும் ஓர் உடலுறவினால் பரவும் நோய் என்பதால் பிற உடலுறவு நோய்களுக்கு செய்யும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளையே பின்பற்றுவதன் மூலமாக எய்ட்ஸ் நோயைத் தடுக்க முடியும்.
இந்த நோய், முதற் காரணமாய், பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகப் பரவுவதால் ‘உடலுறவு’ விஷயத்தில் பருவமடைந்த ஆண், பெண் இரு பாலினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சபலங்கள், சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் இ ருக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பாக எந்த ஓர் ஆணும் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. இது பெண்ணிற்கும் பொருந்தும். அதேபோலவே, திருமணத்திற்குப் பிறகு, மனைவி அல்லாது பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து விட வேண்டும். இதே நிலை பெண்களுக்கும் பொருந்தும். முறையான உடலுறவு பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளாதவர்கள் குறைந்தபட்சம் உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்தி ‘எய்ட்ஸ்’ நோய் மேலும் பரவாமலிருக்க உதவ வேண்டும்.

போதை மருந்துகளுக்கு ஆட்பட்டவர்கள் போதையின் பிடியிலிருந்து மீள வேண்டும். எந்தவொரு நோயாளியும் ஒருமுறை ஒரு நபர் பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தற்சமயம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிள £ஸ்டிக் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. இதனைப் பயன்படுத்தலாம். கண்ணாடி சிரிஞ்சுகளைப் பயன்படுத்தினால் அவற்றை ஒருவ ருக்குப் பயன்படுத்திய பிறகு முறையாக சுத்தம் செய்து, வெந்நீரில் கொதிக்க வைத்து, கிருமி நீக்கம் செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும். இதே போன்றே, அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் இதர உபகரணங்களையும் ஒரு நோயாளிக்குப் பயன்படுத்தி விட்டு மற்றவருக்குப் பயன்படுத்தும் முன்பாக, முறையாக கிருமி நீக்கம் செய்வது அவசியமாகும்.

இரத்த தானம் பெறும்போதும், சேமிக்கும் போதும், ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் போதும் இரத்தத்தை நன்கு பரிசோதனை செய்து அதில் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும். எய்ட்ஸ் மற்றும் பிற கிருமிகளின் பாதிப்புள்ள இரத்தத்தை ஏற்கக்கூடாது. எய்ட்ஸ் கிருமியின் தாக்கமில்லை என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்த பின்னரே அந்த இரத்தத்தைப் பெற வேண்டும், ஒரு நபருக்குச் செலுத்தவும் வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் அவர்களுக்கு அறுவை செய்யும் போதும், பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கும்போது, அவர்களது, சளி, விந்து, இரத்தம் ஆகியவற்றைப் பரிசோதனை செய்யும் போதும் மிகவும் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதே தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கைகளும் ஆய் வுக்கூட வல்லுநர்களுக்கும் ஆராய்ச்சி களுக்கும் பொருந்தும்.

மாரடைப்பு

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்காமல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு என்பது என்ன?

இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்புக் காரணங்கள்
1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9. குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிக அளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது
மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :
1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்
3. தலைச்சுற்றல் 4. படபடப்பு 5. வாந்தி
6. நினைவு தடுமாற்றம் 7. நீலம்பூரி த்தல்
மாரடைப்பு நோயின் வகைகள் :
1. மிதமான மாரடைப்பு (Unstable Angina)
2. தீவிரமான மாரடைப்பு (Myocardial Infarction)
3. அறிகுறியற்ற மாரடைப்பு (Silent Myocardial Infarction)
மாரடைப்பு நோயை நிர்ணயிக்க உதவும் ஆய்வுக் கூடச் சோத¬கைள் :
1. மின் இருதய வரைபடம் (ECG)
2. நொதிச் சோதனைகள் (Enzyme Study)
3. உயிர்வேதியியல் சோதனைகள் (Biochemical Test)
4. மார்பு எக்ஸ்ரே (XrayChest)
5. இருதய இரத்தக் குழாய்க்குள் இரசாயனப் பொருளைச் செலுத்தி இரத்தக் குழாய்களின் அமைப்பைக் கண் டறிதல் (Angiogram)
6. மிக நவீன சோதனையான கலர் இருதய ஸ்கேன் (Echocardiogram)
7. இருதய வேலைப்பளு சோதனை (Cardiac Stress Analysis)
8. ஐசோடோப் ஸ்கேன் இருதய பைபாஸ் ஆப்ரேஷன் (Bypass Operation
) என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு நோய் ஏற்படும் போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும், மறுபடியும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னால் இருதய இரத்தக் குழாயினுள் ஒரு மருந்தை செலுத்தி கிஸீரீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் என்ற பரிசோதனை செய்கிறார்கள். இந்த பரிசோதனையில் இரத்தக் குழாய் அடைப்பட்ட இடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். அதன் பின்பு காலிலிருந்து சிறிய சிரை களை எடுத்து இந்த அடைப்பு களை இணைக் கிறார்கள். இதன் மூலம் அடைபட்ட இடத் தைத் தாண்டி இரத்த ஓட்டம் இருதயத் திற்குக் கிடைக்கிறது. இருதயம் பலன் பெற்று அதிக ஆயுளைப் பெறுகிறது.

இருதய நோயாளிகள் உணவு வகைகள் :



உணவில் சிறிது காரம், புளி, உப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தேங்காய், தேங்காய் எண்ணை, நெய் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.

சாப்பிடக்கூடியவை :

வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த பால், இட்லி, தோசை (எண்ணை குறைவாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச்சாறு, பயறுவகை (பாசிப்பயறு) சிறிதளவு மாமிசம் அல்லது கோழி, சிறிய மீன் வகைகள்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி, முந்திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.

இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பது மாரடைப்பிற்கு முக்கிய காரணம். ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

ஈரல், மூளை, சிறுநீரகம், முட்டை மஞ்சள் கரு, கோழி தொடைப்பகுதி, கொழுப்புள்ள கறி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, நண்டு வகைகள்.
சைவம் :

பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்கள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள் ஐஸ்கிரீம்கள், பேக்கர் உணவுகள், குல்பி எனும் இனிப்பு.

கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு

வகைகள் :

சிறிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு பாசிப்பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள் :

இரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோயாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ, வேண்டியதி ருக்கும். கீழ்கண்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

கருவாடு, மீன், ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி
சைவம் :

இட்லிப்பொடி, ஊறுகாய், அப்பளம், வடகம், சீஸ், வெண்ணெய், ரொட்டி, உப்பு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சோடா உப்பு, தக்காளி, பட்டாணி, பீட்ரூட், வறுத்த முந்திரிப் பருப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

எந்த எண்ணெய் உபயோகிப்பது :

தாவர எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் சோயா பீன்ஸ் எண்ணெய் நல்லது மாமிசம் சாப்பிடலாமா?

மாமிச வகைகளைத் தவிர்த்து நல்ல சைவ உணவு சாப்பிடுவது மிகவும் நல்லது. கண்டிப்பாக மாமிச வகைகள் வேண்டு மெ ன்றால் சிக்கன் அல்லது மீன் வாரம் இரண்டு முறை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், அதிக நார்ச்சத்து அடங்கிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகள் கவனிக்க வேண்டியவை :
1. இரத்த அழுத்தத்தில் கட்டுப்பாடு


2.நீரிழிவு நோய் கட்டுப்பாடு

3. உடல் எடை குறைத்தல்

4. குடி, புகை பிடித்தல் பழக்கங்களை விட்டொழித்தல்

5. குறிப்பிட்ட உடற் பயிற்சி

6. குனிந்து நிமிரும் வேலைகள் செய்யாமை

7. கனமான பொருட்களைத் தூக்கிக் கொண்டு நடக்கக்கூடாது

8. பலமாக முயற்சி செய்து மலங்கழிக்கக் கூடாது

9. ஒழுங்காக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளுதல்

10. மருத்துவப் பரிசோதனை ஒரே சீரான இடைவெளியில்.

உடல் பருமன்

இருதய நோயுள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது அவசியம். உடல்பருமன் ஒருவருடைய பாரம்பரியத்தைப் பொருத்து உண்டாகலாம், ஆனால் அதிக அளவு உணவினாலும், உடற்பயிற்சி இல்லாத
தாலும், மதுபானங்களை அதிகமாக அருந்து வதாலுமே உடல் பருமன் அடைகிறது.

வரவும் செலவும் கணக்கிடப்பட வேண்டும். இந்த கணக்கில் செலவு அதிகமானால் உடல் மெலியும், வரவு அதிகமானால் உடல் பருமனடையும், நாம் செய்யும் வேலைக்கும் உடற்பயிற்சிக்கும் தகுந்த அளவு அதிகமாக உண்ணும்பொழுது உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அடைகிறது.

சில நாளமில்லாச் சுரப்பிகளின் வியாதியால் அதிக எடை ஒருவருக்கு உண்டாகலாம். ஆனால் அது ஆயிரத்தில் ஒன்றாக இருக்கும். உதாரணம் தைராய்டு சுரப்பி.

ஒரு பவுண்டு கொழுப்புப் பொருள் உணவு 3500 (சிணீறீஷீக்ஷீவீமீ). அதாவது ஒரு வாரத்தில் ஒரு பவுண்டு இழக்க தினமும் உணவில் 500 கலோரிகளைக் குறைக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரை 25 (Calorie)
ஒரு அவுன்ஸ் முந்திரிக் கொட்டை 162 (Calorie)
ஒரு அவுன்ஸ் அரிசி 420 (Calorie)
31/2 அவுன்ஸ் கேக் 420 (Calorie)
கலோரி இல்லாது உணவுகள் :

உணவைக் கட்டுப்படுத்தும் போது இடையிடையே பசிக்கும். அதற்கு நாம் முட்டைக்கோஸ், தக்காளிச்சாறு, வெண்ணெய் இல் லாத மோர், காய்கறி சூப், எலுமிச்சை சாறு, காரட், வெள்ளரிக்காய், காலிஃபிளவர், கீரை வகைகள் போன்றவைகளை உண்பது நல்லது.

எடையை அதிகரிப்பதில் உப்பு பெரும்பங்கு வகிக்கிறது. ஏனெனில் உப்பு தான் உடலில் நீரைத் தேக்கி வைக்கிறது. எனவே உணவில் உப்பைக் குறைத்து விட்டால் உடலில் நீர்த்தேக்கம் குறைகிறது. உடல் எடையைக் குறைக்க நம் பிரியம் போல் ம ருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை உட்கொள்ளலாம்.

அனுமதிக்கப்பட்ட பொருட்கள் :

சிறிய மீன், கிழங்குகள் அற்ற காய்கறிகள், சாலட்டுகள், பருப்பு, தேயிலை, காபி, சோடாபானம் பால், மோர், பழங்கள் (மா, பலா, தவிர)

குறைந்த அளவில் அனுமதிக்கப்படுபவை :

முட்டை வெள்ளைக்கரு, உருளைக் கிழங்கு, ரொட்டி, சப்பாத்தி, துண்டு மீன்கள், கோழிக்கறி.

தவிர்க்க வேண்டியவை :

வெண்ணெய், க்ரீம், ஐஸ்கிரீம், நெய், சர்க்கரை, ஜாம், தேன், எண்ணெய்கள், சாக்லெட்டுகள், இனிப்புப் பொருட்கள், உலர்ந்த புட்டியில் அடைக்கப்பட்ட பழங்கள், கொட்டைகள், பிஸ்கோத்துகள், கேக்குகள், மதுபானங்கள், ஈரல், சிறுநீரகம், மூளை, பன்றி, மாடு இறைச்சிகள், கிழங்கு வகைகள்.


இருதய, நலத்திற்கு இதமான ஆலோசனைகள் :

ஸீ மன நிறைவு, மன அமைதி மிகவும் தேவை. எதிலும் திருப்தியான வாழ்க்கை அவசியம். அதிவிரைவில் வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற கொள்கை இதயம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை விரைவில் கொண்டு வரும்.

ஸீ ஷிtக்ஷீமீss மன அழுத்தத்தை, உளைச்சலை குறைக்க, இளைப்பாறக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்ந்து இளைப்பாறுதல், ஆழ்ந்து சுவாசித்தல், இசையில் இன்புறுதல், மனம் விட்டுப் பேசுதல், இறைவனோடு ஆன்மீக வழிபாடு, ஐக்கியம் மிக முக்கியம்.

ஒரு ஆசானின் உதவியுடன் தியானம் மூலம் ஷிtக்ஷீமீssஐக் குறைக்கலாம்.

தேகப் பயிற்சி ணிஜ்மீக்ஷீநீவீsமீ டாக்டர் ஆலோசனைப்படி செய்யவும். மிதவேகமான நடை அல்லது சைக்கிளிங். ஒரு நாளைக்கு 20 நிமிடம் 2 வேளை பண்ணலாம். எடை தூக்குதல், தள்ளுவது, இழுப்பது தவிர்க்கவும்.

ஒரு நாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரை இதய தாக்குதலைத் தவிர்க்கிறது.

குளிர்காலத்தில் வெளியில் நடை (walking) போவது நல்லதல்ல. குளிர்ந்த நீரை குடிக்கவும், குளிக்கவும் உபயோகிப்பது நல்லதல்ல.

முழு வயிற்றிற்கு திருப்தியாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அரை
அல்லது முக்கால் வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகாரம் சாப்பிட்டவுடன் நடப்பது, தேகப்பயிற்சி செய்வது கூடாது. அப்படி சூழ்நிலை ஏற்பட்டால் நாக்கின் அடியில் Sorbitrate (or) Isordil
மாத்திரை வைக்க வேண்டும்.

ஸீ உணவில் உப்பு, கொழுப்பு, இனிப்பு குறைத்தோ, இல்லாமலோ உண்பது நலம்.

ஸீ தினம் அமைதியான எட்டு மணிநேரம் தூக்கம் அவசியம்.

ஸீ மாரடைப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு வைத்தியம் சிறிது நாட்களுடன் முடிவதில்லை. வைத்தியம் நீண் டதொரு முறையாகும். வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் ஒன்று, மருந்துகள் ஒழுங்காக சாப்பிட வேண்டும்.

ஸீ இதய தாக்குதல், இரத்த அழுத்த நோய்கள் வராதபடி தடுத்து வாழ்வது மேலானது. வந்து விட்டாலும் நல் ஆலோசனைகளாலும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையின் படியும் மீண்டும் இதய தாக்குதலுக்கு வழிவகுத்து விடாதபடி வாழ்ந்து, நீண்ட ஆயுளுடன், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பிரயோஜனமான வாழ்க்கை நடத்துவது சாத்தியம். அது உங்கள் கையில் இருக்கிறது.


Health Diet இதய நோய்களைத் தடுக்கும்
உணவுத் தயாரிப்பு
கோதுமை ரவா பொங்கல்
தேவையான பொருள்கள்:
கோதுமை (உடைத்தது) 2 கோப்பை
பயத்தம் பருப்பு லு கோப்பை
சீரகம் லு தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 சிட்டிகை
கடுகு ரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு வேண்டிய அளவு

செய்முறை:

2 கோப்பை உடைத்த கோதுமையை வேகவிடவும். (4லு கப் தண்ணீர் மற்றும் லு கோப்பை பயத்தம் பருப்புடன்) வறுத்த கடுகு, கறிவேப்பிலை, சீரகம் கொண்டு தாளிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சத்து மதிப்பீடு
(கால் தட்டிற்கு (Quarter plate) )
சக்தி (energy) 139 கலோரி
மாவுப் பொருள்
(Carbohydrate) 27.26 கிராம்
புரதம் (Protein) 5.6 கிராம்
கொழுப்பு (Fat) 0.57 கிராம்

குடிதண்ணீர் குணப்படுத்தும் நோய்கள்

குடிதண்ணீர் குணப்படுத்தும் நோய்கள்
1. தலைவலி 2. ரத்த அழுத்தம் 3. சோகை 4. கீல்வாதம் 5. பொதுவான பக்கவாதம் 6. ஊளைச்சதை 7. மூட்டுவலி 8. காதில் இரைச்சல் 9. இருதயத் துடிப்பு 10. மயக்கம் 11. இருமல் 12. ஆஸ்துமா 13. சளி 14. காச நோய் 15. மூளைக் காய்ச்சல் 16. க ல்லீரல் நோய்கள் 17. சிறு நீரகக் குழாய் 18. பித்தக் கோளாறுகள் 19. வயிற்றுப் பொருமல் 20. ரத்தக்கடுப்பு 21. மூலம் 22. மலச்சிக்கல் 23. உதிரப் போக்கு 24. நீரழிவு 25. கண் நோய்கள் 26. கண் சிவப்பு 27. ஒழுங்கற்ற மாதவிடாய் 28. வெள்ளை 29. கருப்பை புற்று நோய் 30. மார்புப் புற்றுநோய் 31. தொண்டை சம்பந்தமான நோய்கள் நம்ப முடியவில்லையா?

மீண்டும் சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? ஜப்பான் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தியே. அங்குதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பானில் உள்ள நோயாளிகள் சங்கம்தான் இதை வெளியிட்டிருக்கிறது. சரியான முறையில் சாதாரண குடிநீரைக் குடிப்பதால் அது மனித உடலைச் சுத்தம் செய் கிறது. அது உடலை வலு வாக்குகிறது. மருத் துவத் தொழிலில் ‘‘ஹெமடோ பைசீஸ்’’ என்று சொல் லப்படும் முறைப்படி அது புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் பகுதி முழு வதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையின் மூலம் குடலின் பகுதியிலுள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்னும் உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. குடல் பகுதியிலுள்ள இந்தத் திசு மடிப்புகளால் சாப்பிட்ட அன்ன ரசத்தின் சாரமானது உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் இதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

குடல் சுத்தமாக வைக்கப்படும்போது தினந்தோறும் பல தடவை சாப்பிடும் ஆகார வகைகளின் காரமானது இந்தத் திசு மடிப்புகளால் உறிஞ்சப்பட்டு அது புது ரத்தமாக மாற்றப்படுகிறது. இப்புது ரத்தமானது நோய்களைக் குணப்படுத்தி மீண்டும் புது ஆரோக்கிய நிலையைக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் அதிமுக்கியமானது. அதற்காகத்தான் தண்ணீரை முறையாக அ ருந்துவது அவசியம் ஆகிறது.

தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி?

காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி, தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு, சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது. இரவிலேயே பல்துலக்கிக் கொள்வது நல்லது.

ஒரே சமயத்தில் 1.20 லிட்டரா?

நடக்க முடியாத அளவு பலவீனமாகப் படுக்கையில் உள்ளவர்கள் சுவாசத்தை வேகமாக வயிற்றுப் பகுதியின் மூலம் சில தடவை இழுத்துவிட்டு எஞ்சியுள்ள தண்ணீரைக் குடித்துவிடலாம். இம் மாதிரி குடித்த தண்ணீர் குடற்பகுதிக்குச் சென்று மு ன்னர் விளக்கியுள்ளபடி பழைய ரத்தத்தைச் சுத்தம் செய்து, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. தொடக்கத் தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

சோதனைகள் மூலமாகவும், அனுபவ பூர்வமாகவும் பின்வரும் நோய்கள் குறிப்பிட்டுள்ள காலத்தில் குணமாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மலச்சிக்கல் 1 நாள்; வயிற்றில் பித்தம் மற்றும் வாயு பொருமல் 2 நாட்கள்; சர்க்கரை வியாதி - 7 நாட் கள்; ரத்த அழுத்தம் வாரங்கள். புற்று - 4 வாரங்கள், காச கல்லீரல் நோய் - 3 மாதங்கள்.

முக்கிய குறிப்பு

மூட்டு வாதம், வாயுப் பிடிப்பு முதலிய நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை மற்றும் மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீர் சிகிச்சையைச் செய்து வர வேண்டும். ஒரு வாரங்கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து, பிறகுதான் தண்ணீர் அருந்த வேண்டும்.

படுக்கைக்குச் செல் லும் முன்பு காபி, தேநீர், போன்ற பானங்களையோ வேறு எவ்வித நொறுக்குத் தீனிகளையோ சாப்பிடக் கூடாது.

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்லாரோக்கியத்துக்கான ரகசியமாகும்.

* உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.

* காலையிலும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன், நாக்கை வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும்.

* காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

* தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.

* ஜலநேத்தி, சூத்ரநேர்த்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.

* நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.

* காலையில் பூண்டு ரசம் அருந்துங்கள்.

* நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளவும். கோதுமை, அரிசி தவிடு நீங்காதது நல்லது. சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப்பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து சாப்பிடவும்.

* சாப்பாட்டிற்கு இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்போ, சாப்பிட்ட ஒரு மணிநேரம் கழித்தோ தண்ணீர் அருந்தவும். இதனால் ஜீரண சக்தி பாதிக்கப்படாது.

* துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.

* சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.

* வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ, பழச்சாறோ அருந்தவும்.

* உங்கள் உடல் நிலையை கண்காணித்து வரவும்.

* சோர்வு ஏற்படும் போது போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

* டீ, காபி, பான், புகையிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொருள் களைத் தவிர்க்கவும்.

* புகை பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இதனால் மனம் பேதலிப்பதுடன், பல தீராத நோய்களும் ஏற்பட்டு அவதியுற நேரிடும். பலனை எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக, சரியாகச் செய்யுங்கள். பலன் தருவது இறைவன்.

* பாதி வயிறு உணவு, பாதி அளவு தண்ணீர், மும்மடங்கு உடற்பயிற்சி, வாய்விட்டுச் சிரிப்பது, அதிக நேரம் தியானப் பயிற்சி உங்களை முழு ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.

* மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

* அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.

* நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.

* சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இரு ப்பதே சிறப்பு.

* சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளி யேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.

* சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.

* எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

* எதைச் செய்தாலும், அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வீர்களானால், உங்கள் வாழ்வில் நிறைவு ஏற்படும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.

* அன்றாடம் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

* பசும்பால் அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

* தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.

* பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

* பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல் நீக்காமல் பயன்படுத்தவும்.

* 40 வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. குறைத்துக் கொள்வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு வகைகளைத் தவிர்க்கவும்.

* முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக்கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.

* தினசரி சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.

* கோரைப்பாயின் மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து உறங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைகள், தலையணைகள் வேண்டாம்.

* பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை காலை உணவாகக் கொள்ளவும்.

* அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்

எல்லோரும் மிகவும் விரும்பிக் கொய்யும் பழமாக (கொய்யும் -பறிக்கும்) விளங்கும் இப்பழத்தைக் கொய்யா(த) பழம் என்று அழைக்கக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொய்யாப்பழத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கொய்யாப்பழத்தின் உள்ளே சிவப்பு வண்ணத்திலும், சில பழங்களில் வெள்ளை வண்ணத்திலும் காணப்படும். இரண்டுக்கும் குணத்தில் ஒரே தன்மைதான்! கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்காதானே! வெப்பம் மிகுந்த நாடுகளில் கொய்யாப்பழம் மிகுந்த அளவில் விளைகின்றன.

ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை உள்ளன. உங்கள் முகம் பொலிவோடு விளங்க வேண்டுமென்றால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்! நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. காலையில் உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள். ஒரு மணிநேரம் கழித்து உணவருந்தலாம். ஆனால் மதியம் வரை நீங்கள் காபி, தேநீர் எதுவும் குடிக்கக்கூடாது. பால், பூஸ்ட், ராகி மால்ட் பருகலாம். மாலை வேளையில் காபி, தேநீர் குடிக்கலாம்.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. இரத்தத்தைப் பெருகச் செய்யும்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது

உணவு செரிக்கின்ற உறுப்புகளிலேயே பெரியது இரைப்பை

நமது உணவு செரிக்கின்ற உறுப்புகளிலேயே பெரியது இரைப்பை. இந்த இரைப்பை, குடல் இவற்றில் பல்வேறு காரணங்களால் புண்கள் ஏற்படும். இரைப்பையில் ஏற்பட்ட புண் இரைப்பைப்புண் எனவும், குடல் பகுதியில் ஏற்பட்ட புண், குடல் புண் என வும் பெயர் பெறும். இந்தப் புண்கள் ஏன் ஏற்படுகின்றன?

1. எளிதில் சீரணமாகாத உணவுப் பொருட் களை அளவுக்கு அதிகமாக உண்பதால்.

2. குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள் ளாமல் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால்.

3. அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள் வது, பட்டினி இருப்பது முதலியவற்றால்.

4. மிகச் சூடான பானங்களைப் பருகுவதால் சூடான உணவுப் பொருட்களை உண்பதால்... காரசாரமான மசாலா கலந்த உணவுகளை உண்பதால்...

5. சத்தான உணவு உண்ணாதவர்கள், புரதச் சத்து, கொழுப்புச்சத்து காய்கறிகள், முதலியவற்றை அதிக அள வில் உணவில் சேர்க்காதவர்களுக்கும் குடலில் கிருமி உடையவர்களுக்கும் வயிற்றில் புண் ஏற்படலாம்.

6. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால்...

7. சில வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக மருத்துவரின் ஆலோசனையின்றி, உண்பதால்.

8. காயங்கள், தொற்றுக்கள் முதலியவை களினால்...

9. கல், மண், உமி, தூசு, மற்ற கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பதால்.

கிராமங்களிலே ‘‘ஒரு சாண் வயிற்றுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாய்’’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். ஆனால், தற்போது கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் ஒரு சாண் வயிற்றைப் பற்றி கவலைப்படவும் நேரம் இருப்பதில்லை. இதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்குத்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்?

டி.வி. பார்க்க நேரம் இருக்கிறது. சினிமா பார்க்க நேரம் இருக்கிறது. மற்ற வகைகளில் பொழுதுபோக்க நேரம் இருக்கிறது. ஆனால் ஆற, அமர உட்கார்ந்து அமைதியான முறையில் உணவு உட்கொள்ள நேரமில்லை. வேலைக்குச் செல்வோர் அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதைப் பார்க்கிறோம்.

‘நொறுங்கத் தின்பவனுக்கு நூறு வயது’ என்பார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று சாப்பிடுகிறார்கள்?

மற்றொன்று, யாரும் நேரத்தில் உணவு உண்ப தில்லை, நேரங்கெட்ட நேரத்தில் உண்கிறார்கள். இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இரவுக்கடைகளில் உணவு உண்பவர்களை நாம் பார்க்கிறோம். நாம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் வயிற்றுக்கு? ஓயாத தொல்லைதான். ஆகவே அதற்கு ஓயாத தொல்லை கொடுக்கும்போது வயிறும் நமக்கு ஓயாத தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது புண்மூலம்!

மற்றும் சிலர் வயிற்றைக் குப்பைக் கூடை என நினைத்து ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்தோபாவம் அந்த வயிறு!! இவைகளைத் தவிர கந்தக அமிலம் முதலிய அமில வகைகள், சுண்ணாம்பு போன்ற காரவகைகள் வயிற்றை ஒட்டிய பகுதிகளில் கட்டிகள் ஏற்படுதல், இவற்றால் தீவிரமான திடீர் புண்கள் தோன்றும்.

இரைப்பைப்புண் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி உண்டாகும். ஆகவே இவர்கள் வலியிலிருந்து விடுபட தாங்களே முயற்சித்து வாந்தி எடுப்பார்கள். ஆகவே சாப்பிடாமல் இருப்பதால்... சாப்பிட்ட உணவை வாந்தி எடுக்க வைப்பதால் இவர்களுக்கு உடலில் சத்து சேராமல் உடல் மெலிந்து போவார்கள். இதன் காரணமாக உடலில் ரத்த சோகையும் பலகீனமும் ஏற்பட்டு தொடர்ந்து பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

சிறுகுடலில் புண் இருந்தால் மேல் வயிற்றில் வலி இருக்கும். இரைப்பையில் உணவில்லாமல் காலியாக இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். சாப்பிட்டவுடன் வலி குறைந்துவிடும். மேலும், குடல் புண் உள்ளவர்களுக்கு குமட்டல், வாந்தி, புளிப்பு, நீரூறல், நெஞ்சு எரிச்சல் ஆகிய அறி குறி குணங்கள் இருக்கும்.

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படுகிறது. அமைதியும், ஆனந்தமும் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தில் கோப - கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந் தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம்.

இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் கேட்கும் மாடுகள் அதிகம் பால் சுரப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இவையெல்லாம் நமக்குத் தெரிந்த தகவல்கள் தான். இசை கேட்டால் நோயும் குணமாகும் என்பது ஒரு புதிய செய்தி. சங்கீத த்தைப் பயன்படுத்திப் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்திருப்பதாக நமது இலக்கியங்களில் கூறப்படும் செய்தியை நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இசையைக் கேட்கும்போது, நல்ல ஆரோக்கியத்துடன் வளர்கின்றனவாம். கு றைப்பிரசவக் குழந்தைகளுக்கு இசைச் சிகிச்சை ஓர் அரிய வரப்பிரசாதமாகும்.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைச் சிறிது காலம் இன்குபேட்டர் என்ற சாதனத்தில் வைத்துப் பராமரித்து வரு கிறார்கள். தாயின் கருவறையில் உள்ள குழந்தை எப்படிப் பாதுகாப்பாக இருக்குமோ, அதுபோன்ற ஏற்பாடுதான் இன்குபேட்டர் சாதனம். இந்தச் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள சில பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் குழந்தைகளுக்குத் தேவை யான உணவு செலுத்தப்படுகிறது.

தாயின் கருவில் உள்ள குழந்தை அனுபவிக்கும் ஓர் அமைதியான சூழ்நிலையை இன்குபேட்டர் எழுப்பும் ஒருவித ஒலியால் அடையும். அதோடு குழந்தை மெல்லிய ஒலியைக் கேட்கும் போது அதன் உடலில் ஓர் இன்ப அதிர்வு உண்டாகும். அந்த ஒலியைக் கேட்கும் குழந்தை சட்டென விழித்துக் கொள்ளும். இன்குபேட்டரிலுள்ள குழந்தையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தியே குழந்தைகள் நன்கு தூங்கவும், மூச்சு விடவும் தோதாகக் கம்பி வாத்தியங்களை மெல்ல மீட்டி மென்மையான இசையை ஒலிக்கச் செய்வார்கள். அந்த இனிமையான ஒலியைக் கேட் கும் குழந்தை நன்கு தூங்கும்.

சில காலம் இப்படி இசைச் சிகிச்சை அளித் துவர, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் சிரமமில்லாமல் மூச்சு விடு வதையும் அதன் உடல் இயக்கங்கள் சீராவதையும் கண்டறிந் துள்ளனர்.இன்று பல மருத்துவமனைகளில் குறைப் பிரசவக் குழந்தைகளுக்கு இவ்வாறு இசைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் என சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க உதவும் நல்லதோர் சிகிச்சை இசைச் சிகிச்சை (Music Therapy) ஆகும். இது நல்ல பலனைத் தருகிறது என்று கடந்த சில ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பணியில் ஈ டுபட்டு வந்த ஒரு பெண்மணிக்கு மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல இல்லை. இதனை வளர்ப்பது சற்றுச் சிரமம் என்று டாக்டர்கள் கூறியதும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண் மணியும் அவரது கணவரும் இக்குழந்தை பிறந்த சில மாதங்களில் பராமரிக்க முடியாமல் துயருற்றனர்.

இந்தக் குழந்தையை இனி எதுவும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிட்ட நிலையில், புகழ்பெற்ற அப்பல்லோ மருத் துவமனை நேசக்கரம் நீட்டியது. அங்கு இசைச் சிகிச்சை மூலம் பல நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்ப ட்டு அம்மருத்துவமனையை நாடினர்.

அக்குழந்தைக்கு இசைச் சிகிச்சையை மேற்கொண்ட சில மாதங்களில் குழந்தை நோய் நீங்கி, நலம் பெற்றதுடன் பள்ளியிலும் படித்து வருகிறது. அக்குழந்தை எதையும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அதன் வளர்ச்சி மேம் பட்டது.

குஜராத்தில் ஒரு பெண் மணிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அது பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கைவிட்ட நிலையில், அப்பெண்மணி யார் மூலமாகவோ அப்பல்லோ மருத்துவமனையில் இசைச் சிகிச்சை அளிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு, அச்சிகிச்சை எடுத்துக் கொண்டதில் அந்தப் பெண் குழந்தை இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது.

இருதய அறுவை சிகிச்சை மேற்கொள் பவர்களுக்கும் இசைச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது. 56 வயதுப் பெண் ஒரு வருக்கு அண்மையில் இதய இரத்தக்குழாயில் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் கூட என்ன ஆகுமோ என்று பயந்தபடியே இருந்தனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த மூன்றாவது நாளிலேயே அவருக்கு இசைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்த காயம் வழக்கத்தைவிட முன்னதாகவே ஆறி நோயாளி கு ணமடைந்தார்.

இசைச் சிகிச்சையின் ரகசியம் வேறு ஒன்றுமில்லை. மென்மையான, இதமான இசையைக் கேட்கும்போது, அது மனதை இதமாக வருடுகிறது. ஓர் இன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த இசையின் மெல்லிய அதிர்வுகள் உடலெங்கும் பரவி, ஒரு பு த்துணர்ச்சியைத் தருகின்றது. இது ஒரு டானிக் போல வேலை செய்து நோயைக் குணப்படுத்துகிறது.

வயிற்றுவலி, தலை வலி என்றால், உடனே அதற்கான மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். உடனே மூளையிலிருந்து ஒரு சிக்னல் வலி ஏற்பட்டுள்ள பகுதிக்குச் சென்று வலியைக் குணப்படுத்துகிறது. ஆனால், இசையைக் கேட்டதும் மூளையில் ஏற்படும் மென்மையான அதிர்வுகள் உடனே பலன் தருகின்றது. வலி மாத்திரைகளால் பக்கவிளைவுகள் உண்டு.

ஆனால், இசைச் சிகிச்சையில் அந்தச் சங்கடமெல்லாம் இல்லை. நோயும் முழுமையாகக் குணமாகிறது.

இந்த சிகிச்சை முறை மிகவும் எளிது. இரண்டு விதங்களில் இதைக் கையாள்கிறார்கள். முதலில் வெறுமனே இசையைக் கே ட்பது. இதை றிணீssவீஸ்மீ விஷீபீமீ என்று சொல்கிறார்கள். மற்றொன்று அந்த இசையோடு நாமும் லயித்து அந்த இசையோடு இசையாக இரண்டறக் கலந்து விடுகிறோம். இதை கிநீtவீஸ்மீ விஷீபீமீ என்கிறார்கள்.

இந்த இரண்டு வழிகளாலும் மூளையிலுள்ள நரம்பு மண்டலங்களைத் தூண்டிவிட்டு ஓர் இன்ப அதிர்ச்சியை இசை ஏற்ப டுத்துகிறது. 90 சதவிகித நோய்கள் பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக ஏற்படுவதால், அந்த அழுத்தத்தைக் குறைத்து பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுகிறது.

நமது மூளையில் மூன்று விதமான திரவங்கள் சுரக்கின்றன. இவற்றில் முக்கியமானது. செரோடின். இந்த செரோடின் கு றைவாகச் சுரந்தால், சரியான தூக்கம் இருக்காது. தொடர்ந்து தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

செரோடின் குறைபாட்டை இந்த இசைச் சிகிச்சை சரி செய்கிறது. இதற்கென்றே இருக்கும் ராகத்தில் கம்போஸ் செய்த பாடல் களைக் கேட்கும் போது, மூளையில் நல்ல அதிர்வு கள் ஏற்பட்டு செரோடின் சரி யாகச் சுரக்கிறது. அதேபோல் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை வியாதி இவை யாவற்றையும் இசையின் மூலம் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தலாம். பெண்களில் பலருக்கு மூளையில் சரியான ரத்த ஓட்டம் இல்லாததால் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படு கிறார்கள். இதற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இந்தத் தலைவலியால் துடித்துப் போகிறார்கள். இசைச் சிகிச்சை இவர்களுக்குப் பெரிதும் நிவாரணம் தருகிறது.

விபத்தில் சிக்கி அடிபட்டவர்களின் காயங்கள் ஆற, சரியாகச் சுரக்க வேண்டிய திரவம், சர்க்கரை நோயாளிகளுக்குச் சரியாகச் செயல்பட வேண்டிய பீட்டா கரோட்டின் செல்கள் ஆகியவற்றின் குறைபாடுகளை இசைச் சிகிச்சை சரி செய்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை போன்று வேறு சில நவீன மருத்துவமனைகளிலும் தற்போது இந்த இனிய இசைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் படுத்திருக்கும் வார்டுகளில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தூங்கும்போது செவிப்புலன் மட்டும் வேலை செய்வதால், மயக்க மருந்து காரணமாக உறங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகள்கூட இசை ஒலியை நன்கு கேட்கி றார்கள். அதனால் அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து விரைவில் கு ணமடை கிறார்கள்.

மனச் சோர்வு, மன இறுக்கம் முதலிய தொந் தரவுகளால் பாதிக்கப் பட்டவர்கள் கூட மென்மையான இசையைக் கேட்கும் போது அவர் களிடம் அதிசயிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்படு கின்றன.

சமீப காலமாக இசையை சிகிச்சை முறையாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்களைப் பற்றி நிறைய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு மருத்துவ ரீதியாகப் பல மருத்துவமனைகளில் இசைச் சிகிச்சையைப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை களுடன் இசைச் சிகிச்சையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால், விரைவில் நல்ல பயன் கிடைக்கிறது. மன அழுத்தமும், உடல் வலியும் குறைவதோடு ஒரு மகிழ்ச்சியான, அமைதியான, இன்பகரமான உணர்வுகளும் ஏற்படுவதால், இசைச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

இந்தியா, கிரீஸ், சீனா முதலிய நாடுகளில் கம்பி இசைக் கருவிகளில் ஒலிக்கப்படும் பாடல்களுடன் நோயாளி களின் உடலில் மென்மையான அதிர்வு களை உண்டாக்கி நோயைக் குணப் படுத்தும் ஏற்பாடு களைச் சில மருத்துவ மனைகளில் செய்துள் ளனர். மென்மையான இசையைக் கேட்கும் போது, நோயாளியின் உடலில் ஹார்மோன் சுரப்பிகள் நன்கு வேலை செய்வதாகவும், நமது மூச்சை, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குவதாக வும் கண்டறிந்து ள்ளனர்.

நமக்குப் பதட்டமாக இருக்கும் போது இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இயங்குவதில்லை. மெல்லிய இசை அதனை ஒழு ங்குபடுத்துவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. பதட்டம் குறைந்து நல்ல தூக்கம் வருகிறது.

நோயாளிகளுக்கு மட்டுமின்றி, மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஆயாக்கள் இந்த இன்னிசையைக் கே ட்கும்போது நோயாளிகளிடம் எரிந்துவிழாமல் மென்மையாக, அமைதியாக அன்பும், பரிவும் காட்டி நோயாளிகளின் மனம் குதூகலிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். பணியிடங்களில் இசையைக் கேட்கும் தொழிலாளர்கள் உற்சாகமாக, சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகள் காரணமாக உடல் இயக்கத்திலும் மாறுபாடு ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். நவீன வாழ்க்கையில் பதற்றம், பரபரப்பு, கவலை, நோய் என்று அவதிப்படுகிறோம். இதை மாற்ற, மற்ற சிகிச்சைகளுடன் இசைச் சிகிச்சையையும் மேற்கொள்ளலாம்.

உடலைப் பேணிப் பாதுகாக்க

நம் உடலைப் பேணிப் பாதுகாக்க முதலில் நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதேயாகும். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கும் கவசமாக, அரணாக உள்ளது. அடுத்தபடி தான் உணவும், மருந்தும். உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலே பலவித நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவேதான் உணவே ம ருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல, நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான். இந்த வெள்ளை அணுக்கள் தாம், உடலில் நோய் தாக்கும்போது, அதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த் துப் போராடும் ஆற்றல் மிக்கது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பிலும் தனியாகத் தோன்றுவதில் லை. நம் மூளை, ரத்தம், கல்லீரல், மண்ணீரல், எலும்பு, நிணநீர், ரத்தக் குழாய்கள், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படும் போதுதான் நோய் எதிர்ப்பு நம் உடலில் வளருகிறது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்படும்போதுதான் நோய் உண்டாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடலில் சாதாரண காய்ச்சல் முதல், தொற்றுநோய், புற்றுநோய், சளித்தொந்தரவு, ஆஸ்து மா என்றெல்லாம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது, நோயிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதற்கு ஆதாரமானது நல்ல, சமச்சீரான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகும்.

மூலிகைகள் பல, அத்தனையையும் நாம் பயன்படுத்த முடியாது. இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமே இந்த மூலிகைகள்தான். சித்தர்கள் இதைக் கண்டறிந்து, நாம் நோய் நீங்கி நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பலவித மூலிகைகளையும், அதன் பலன்களையும், அதனைப் பயன்படுத்தும் விதத்தையும் நமக்குக் கூறியுள்ளனர். இந்த மூலிகைகளில் சிலவற்றையாவது நாம் அன்றாடம்
அருந்துவதால் நோய் நீங்கி நாம் நலமுடன் வாழலாம். இதனை ஆதாரமாகக் கொண்டே நம் ஆலயங்களில் பல தலவிருக்ஷங்கள் நமது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மூலிகைப் பிரசாதங்களை அருந்தும் போது, மூலிகைகளின் மருத்துவ குணத்தாலும், இறையருளாலும் நமது நோய் நீங்குகிறது. இதனைத் தெய்வீக மூலிகைகள் என்கிறோம்.

தெய்வீக மூலிகைகளாக மாரியம்மன் கோயில்களில் பயன்படுத்தப்படும் வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி, விநாயகருக்கு உரிய அறுகம்புல், பிரம்மாவுக்கு உரிய அத்தி இலை, கங்கைக்குரிய மாவிலை அடங்கும். மற்றும் அரசனிலை, ஆலயிலை கரிசலாங்கண்ணி, தூதுவளை, கண்டங்கத்திரி, நெல்லி, தும்பைப்பூ, குப்பைமேனி, கீழாநெல்லி, ஜாதிக்காய், தான்றிக்காய், அதிமதுரம் ஆகியவை. இவற்றை சிறிது, சிறிதாக பொடித்து வெயிலில் காயவைத்து,
உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இரண்டு தேக்கரண்டி தண் ணீரில் கலந்து அருந்த நோய் குணமாகும்.

இந்த மூலிகைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பாக்டீரியாக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடெ ண்டுகள், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஃபங்கஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவன.

சமச்சீரான, சத்துள்ள வைட்டமின்கள், தாது உப்புகள், கொழுப்பு, இரும்புச் சத்து, புரதம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற உடல்நல ஊக்கிகள் கொண்ட உணவு வகைகள் நோயைக் குணப்படுத்தும். இவற்றை வகை அறிந்து உண்பதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சில முக்கியமான உணவுகள்:

கேரட்: இது எல்லா நோய்களையும் குணப்படுத்தும். கேரட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், பீட்டா கரோடின் என்ற சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்திகள் காரணமாக வைரஸ், பாக்டீரியா கிருமிகளை ஒழித்து, நோய் எதிர்ப்புச் செல்களை உரு வாக்கி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோயிலிருந்து நாம் விடுதலை பெற உதவுகின்றன.

தினமும் 5 முதல் 10 கேரட்டுகளை பச்சையாகவே சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். இதனால் 30 மி.கி. முதல் 60 மி.கி. வரை நமக்கு கரோட்டின் சத்து கிடைக்கிறது. இவை நமது உடல் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.
கேரட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பீட்டா கரோட்டின் அளவு குறைந்து நோய் நம்மைத் தாக்குகிறது. கேரட் மற்றும் மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, வெண்பூசணி, தர்பூசணி, கீரை வகைகள், வெள்ளரிப்பிஞ்சு, தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளதால் அது மிகுந்த பலன்தரும்.

தயிர்: தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் செல்கள் உள்ளன. உடலில் கட்டிகள் ஏற்படுத்தும் செல்களை அழித்து நோயைப் போக்குகிறது. தினமும் ஒரு கப் தயிர் வீதம் 2 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, பல நோய்களிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

ஜெர்மன் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து அதிகம் மாமிசம் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வெள்ளை அணுக்கள் 100% தேவை என்றும், பழங்கள், காய்கறிகள் போன்ற சைவ உணவை சாப்பிடு பவர்களுக்கு 50% வெள்ளை அணுக்கள் இருந்தால் போதும் என்றும் கண்டறிந்துள்ளனர். பழங்கள், காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளதே இதற்குக் காரணம்.

வெள்ளைப்பூண்டு: பூண்டு ஒரு அருமையான நோய் நிவாரணி. சிலருக்கு அதன் சுவை பிடிக்காததால் பூண்டு சாப்பிடுவதில் லை. பொதுவாக மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் கசப்புச் சுவை மருந்துகளே நோயைத் தீர்க்கும். பூண்டில் ஆன் ட்டி பாக்டீரியாக்கள், ஆன்ட்டி வைரஸ், கேன்ஸர் ஆக்டிவிட்டி சக்திகள் உள்ளதால் வைரஸ், பாக்டீரியாக்களையும், புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான செல்களை எதிர்த்துப் போராடுவதால் பூண்டு நமது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டும். மற்றும் கொழுப்புச் சத்துக் குறைவானதும், துத்த
நாகச் சத்துக்கள் அதிகம் உள்ளதுமான உணவுகள் பலன் தரும்.

கீரைகள்: எல்லாவிதமான கீரைகளும் நல்லது. அவற்றில் பச்சையம், வைட்டமின் ஏ, இரும்புச் சத்து இருப்பதே காரணம். முக்கியமாக வெந்தயக் கீரை, புதினா கீரை, மணத்தக்காளிக் கீரை வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. புதினா கீரைத் து வையல் ஜீரண சக்தியைத் தூண்டும். கறிவேப்பிலை மல்லியும் ஜீரணசக்தியைத் தூண்டும். பாசிப்பருப்புடன் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து கீரைகளைச் சமைத்து உண்பதால் சுவையும், உடல்நலமும் கிடைக்கிறது.

அஞ்சறைப் பெட்டியில் உள்ள கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு, பெருங்காயம் போன்றவை உணவில் சுவைகூட்ட மட்டு
மல்ல மருந்துப் பொருளுமாகும். அதில் குறிப்பாக வெந்தயம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பொங்கல், உப்புமா, இட்லி, தோசை மாவில் வெந்தயமும் சேர்த்து செய்தால் அவை மிருதுவாக இருப்பதுடன் உட லுக்கும் நல்லது.

வெந்தயத்தில் அதிகள வில் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க் கரை, கொலஸ்ட்ரால் அளவைப் பொறுத்து 50 கிராம் வரை வெந்தயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

வெந்தயத்தை தினசரி சேர்த்து வருவதுடன் தினமும் சற்று நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்துவர சர்க்கரை நோய் க ட்டுப்படுகிறது. உடல் எடையைக் குறைப்பதன் மூலமும் இன்சுலின் சத்தைக் குறைப்பதன் மூலமும் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதற்கு வெந்தயம் உதவுகிறது.

வயிற்றுப்போக்கு, குடலில் ஏற்படும் வாயுத்தொந்தரவு முதலியன வெந்தயம் சாப்பிடுவதால் நீங்குகிறது.

கொத்தவரங்காய்

பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையை சரிப்படு த்தும்.பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. பசியைத்தூண்டும். சர்க்கரை நோயின் கடுமையைக் குறைக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண் டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.

சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. வயிற்றில் உள்ள புழுக்கள் கொல்லப்படும்.

வெண்டைக்காய்: ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. நினைவாற்றலைப் பெருக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலை நீக்கும்.

கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம் ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூலநோய் போன்றவை நீங்கும்.

கேரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தூண்டும்.

குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து ஆகியன கணிசமாக உள்ளன. அஜீரணக்கோள £றை நீக்கி செரிமான சக்தியைத் தூண்டும்.

கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

முதியோருக்கு என்று ஒரு தனி சமையல்

‘‘முதியோருக்கு என்று ஒரு தனி சமையல்... இளையோருக்கு என்று ஒரு சமையல், குழந்தைகளுக்கு என்று ஒரு எளிய சத் தான சமையல்... அப்பப்பா... முடியலைடா சாமி’’ என்று அங்கலாய்த்து அவஸ்தைப்படும் தாய்மார்கள் நிறைய பேர். அத்தனை வயசுக்காரர்களுக்கும் ஏற்ற சத்தான,
சுவையான சமையல் குறிப்பு களைக் கொடுங்களேன் என்று பல விண்ணப்பங்கள். இதோ, அவர்களின் ஆதங்கத்தைத் தீர்க்க ஒரு முழுமையான குடும்பத்துக்கும் நிறைவைத் தரக்கூடிய சமையல் குறிப்புகள். அத் தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை. தயாரிக்க எளிமையானவை. மிகவும் விலை மலிவான பொருட்களைக் கொண்டே தயாரிக்கக்கூடிய சிக்கன சமையலும்கூட.

சம்பா சங்க் உப்புமா

தேவை

உடைத்த சம்பா கோதுமை - 1 கப்
சோயா சங்க் (அல்லது வேக வைத்து உதிர்த்த மீல் மேக்கர்) - லு கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - லு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - லு கப்
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
பெருஞ்சீரகம் - ரு தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
(பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பிடிக்காதவர்கள் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம்.) உப்பு - ருசிக்கேற்ப
சன் பிளவர் ஆயில் - ரு கப்
செய்முறை
சோயா சங்க்கை அல்லது சோயா மீல் மேக்கரை வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு வெளியே எடுத்து பச்சைத் தண்ணீரில் முக்கி உடனடியாகப் பிழிந்து உதிர்த்து நீர்ப் பதம் போக உலரவிடவும்.
உடைத்த சம்பா கோதுமையை சுத்தப்படுத்தி லேசாக வறுத்து வைக்கவும். குக்கர் பேனில் எண்ணெயை விட்டு சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு மற்றும் பெருஞ்சீரகம் போட்டு வதக்கி, கிள்ளிய கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்
கவும்.
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அதன்
பின் தக்காளியையும் ஒரு துளி உப்பையும் சேர்த்து வதக்கவும்.
கோதுமையின் தன்மைக்கு ஏற்ப நீர் சேர்த்து கொதிக்கும்போது, அத்துடன் உடைத்த கோதுமை, உதிர்த்த சோயா மீல் மேக்கர் ஆகியவைகளை சேர்த்து உப்பு கூட்டி மூடி போட்டு மூன்று விசில் வந்தபின் இறக்கி சூடாக சுவைக்கவும்.
மாறுபட்ட சுவையுடன் சத்தான உப்புமா ரெடி.
புதினா சட்னி இதற்கு மிகவும் தோதாக
இருக்கும்.

வாழைப்பூ அடை

தேவை
ஆய்ந்த வாழைப் பூ - 1 கப்
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - லு கப்
மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு... கால் தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ரு தேக்கரண்டி
சர்க்கரை - லு தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
நெய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ரு கப்
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்... தாளிதம் செய்ய.

செய்முறை

அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து பின் சுத்தப்படுத்தி கரகரப்பாக அரைக்கவும்.
வாழைப்பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மிருதுவாக வேக வைத்து எடுத்து ஈரத் தன்மை போக உலரவிடவும். அரைத்த மாவுடன் வாழைப்பூவைச் சேர்த்து உப்பு கூட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதை மாவுக் கலவையுடன் சேர்த்துப் பிசறி தோசைக் கல் லில் சிறு சிறு அடைகளாக வார்த்து முறுகலாக சுட்டு எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும். விருப்பப்படுவோர் தேங்காய் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம்.

அகத்தி பால்ஸ்

தேவை
மைதா மாவு - அரை கப்
சிரோட்டி ரவை - 1 தேக்கரண்டி
அகத்திக்கீரை - 1 கப்
உதிர்த்த சோயா (மீல் மேக்கர்) - லு கப்
உடைத்த கடலை - 1 கப்
தேங்காய்த் துருவல் - லு கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
(கார சுவைக்கு ஏற்ப அளவு மாறலாம்)
கசகசா - 1 மேஜைக்கரண்டி
வெல்லப் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்பொடி - ரு தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரித்து எடுக்க.

செய்முறை

கீரையைப் பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி வைக்கவும். கசகசாவை சிவக்க வறுத்து எடுக்கவும்;
பொடிக்கவும். தேங்காய்த் துருவலை வெறும் வாணலியில் வதக்கவும். சோயா (மீல்மேக்கரை) வெண்ணீரில் ஒரு நிமிடம் போட்டு வெளியே எடுத்து உடனடியாக தண்ணீரில் முக்கி எடுத்து ஒட்டப் பிழிந்து உதிர்த்து ஈரம் போக உலரவிடவும். மிக்சியில் இட்டு கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

இத்துடன் உடைத்த கடலை, கசகசா, வெங்காயம், பச்சைமிளகாய், வெல்லப் பொடி, உப்பு ஆகியவைகளை சேர்த்து அரைத்து, வதக்கிய கீரை மற்றும் கொத்துமல்லி இலைகளைச் சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

மைதா, சிரோட்டி ரவை அதற்குத் தேவையான உப்பு ஆகியவைகளோடு போதுமான தண்ணீர் சேர்த்து (தோசை மாவு பதத் தில்) மேல் மாவு தயாரித்து வைக்கவும்.

பிடித்து வைத்த உருண்டைகளை, மைதாவில் முக்கி எடுத்து வாணலியில் காயும் எண்ணெயில் விட்டு, சிவக்க வெந்ததும் எ டுத்து காரச் சட்னியுடன் சுவைத்து சாப்பிடவும். வெல்லம் சேர்ப்பதால் கசப்புச் சுவை மறைந்துவிடும். இரும்புச் சத்தும்கூட.

இதுவரை அகத்தியைத் தொட்டுப் பார்க்காதவர்கள்கூட ‘கொண்டா... இன்னமும் கொண்டா’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவர். குறிப்பாக இளவயதினரை வெகுவாகக் கவரும் ஒரு நவீன சுவை மிகுந்த பண்டம்.
வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கு அகத்தி ஒரு அற்புத மூலிகை.

மல்லி சாலாட்

தேவை
கொத்துமல்லி (இலைகள் மட்டும்)... 1 கப்
புளிக்காத கட்டித் தயிர்... வு கப்
துருவிய கேரட்... லு கப்
துருவிய நூல்கோல்... ரு கப்
மிளகுத்தூள் மற்றும் உப்பு... ருசிக்கேற்ப
சாலட் ஆயில்... லு தேக்கரண்டி

செய்முறை :

தயிருடன் சாலட் ஆயிலை நன்கு கலக்கவும். கொத்துமல்லி இலைகள், துருவிய கேரட், நூல்கோல் ஆகியவைகள் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி குளிர வைத்து சுவைக்கவும்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள்

ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவக் குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள், கருத்துக் கணிப்பு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வு சொல்லும் தகவல்கள் வரு மாறு:

உடல் எடையை உயரத் தின் இருமடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ. (பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப் படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 25-30 இருப்பது அதிக எடை என்றும் 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு. 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ. அதிகமாக இருந்தது.பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர். அவர்களது உடலில் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகள் சரியான அளவில் இ ருந்தது. இந்த நிலை ‘மெடபாலிகலி ஹெல்தி ஓபீஸ்’ (எம்ஹெச்) எனப்படுகிறது. அதாவது, வளர்சிதை மாற்றம் காரணமாக எடை அதிகரித்தவர்கள். பருமனாக இருப்பவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

167 பேர் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்றவர்களாக இருந்தனர். இதை ‘மெடிகலி அன்ஹெல்தி ஓபீஸ்’ (எம்யுஒ) என்கிறோம். இதுதான் ஆபத்தானது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, உப்பு அளவு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் முக்கியம். உடல் பருமனாக இருந்தால்கூட இவற்றை கட்டுக்குள் வைக்க முடியும்.

கரிசலாங்கண்ணிக் கீரை

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் செரிமான சக்தியை மேம்படுத்து கின்றன. மலச்சிக்கலைக் குணப்படுத்து கின்றன. நமது உட லுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன. கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. வள்ளலார் இக் கீரையைத் தலை சிறந்த கீரை என்று குறிப்பிடுகிறார். இக் கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும். இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும். கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும். கண்ணொளியைத் தரும். இக் கீரையைச் சாப்பிட்டுவந்தால் முக்தி அடையலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கரிசலாங்கண்ணிக் கீரையில் அநேக நன்மைகள் உள்ளன. எனினும் பல கருத்துக்கள் சித்தர்களின் மூலம் அறியப்படாமல் உள்ளது. சித்தர்களும், முனிவர்களும், இந்த கரிசலாங்கண்ணியை உண்டுதான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய் த்தோமானால் மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அப்பொழுதே வெளிவந்துவிடும். பித்தப்பை கெட்டுப்போய் பித்தம் அதிகமாக இருந்தால் அப்பொழுதே பித்தம் வாந்தி மூலமாக அல்லது மலத்தோடு வெளியேறும். அன்றைக்கே மலம் தடங்கல் இல்லாமல் கழியும். சிறுநீர் நன்றாகப் பிரியும். கபநீர், பித்தநீர் வெளியேறி, மலமும் வெளியேறுவதால் பெருங்குடலும், சிறுநீரகங்களும் தூய்மை அடைகின்றன. கல்லீரல் சுத்தமடைவதால் மற்ற ஜீரண உறுப்புகளாகிய மண்ணீரல், கணையம் போன்றவையும் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு பணியாற்றும் போது நீரிழிவு நோய் நம்மை அண்டுவதில்லை. மலச்சிக்கல் அகன்றுவிடுகிறது. மண்ணீரல் வீக்கத்தை கரிசலாங்கண்ணிக் கீரை குறைக்கிறது. உடலைப் பொன்னிறமாக்கும். சுவாசப் பைகளில் கபமும், கல்லீரலில் பித்தமும், பெருங்குடலில் கிருமிகள், விஷங்கள் கலந்த மலமும், மூத்திரப் பைகளில் யூரியா, யூரிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் கலந்த சிறுநீரும் தேங்கி உறுப்புகள் கெட்டுப் போகின்றன. கல்லீரல், பெரு ங்குடல், மூத்திரப் பை போன்ற உறுப்புக்களை நாம் சுத்தம் செய்ய வேண்டாமா? பேதிக்கு மருந்து சாப்பிட்டுப் பெருங்கு டலைச் சுத்தம் செய்ய வேண்டும். சுவாசப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவற்றைச் சுத்தம் செய்யும் ஒரே மூலிகை கரிசலாங்கண்ணிதான். கரிசலாங்கண்ணியின் பலன் அன்றைக்கே தெரிந்துவிடும். எனவேதான் கரிசலாங்கண்ணிக் கீரையை வள்ளலார் அவ்வளவு சிறப்பாகக் கூறியிருக்கிறார். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.

தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். யாளி என்ற மிருகத்திற்குச் சமமான பலம் உண்டாகும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம், பாண்டு ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

உரமாக்கி, பலகாரி, உடல் தேற்றி, வாந்தி உண்டாக்கி, நீர், மலம் போக்கி, வீக்கம் உருக்கி, ஈரல் தேற்றி, பித்த நீர்ப் பெருக்கி என்று பல சிறப்பியல்புகளைக் கொண்ட இக் கீரையை மதியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக் கீரையைப் பரு ப்புக் கலந்த கீரைக் குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்.

நமது உள்ளுறுப்புகளில் முக்கியமானவை கல்லீரல், இருதயம், சுவாசப்பை. (மிகவும் முக்கியம் கல்லீரல்). சுத்த இரத்தத்தை உடல் முழுவதும் விநியோகித்துக் கெட்ட இரத் தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப்பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்!

இருதயத்திற்கு, ‘‘பம்பிங் ஸ்டேஷனாக’’ வேலை செய்கிறது. அது போல சுவாசப் பைக்கும் ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப் பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வது.
ஆனால் கல்லீரலுக்குப் பல வேலைகள், கல்லீரலின் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது கரிசலாங்கண்ணியின் வேலையாகும்.

கல்லீரலில் ஒரு கோளாறு ஏற்பட்டால் அதன் வேலைகள் பாதிக்கப்படும். ஏதேனும் ஒரு நோய் வந்து உடலைத் தாக்கும்.

1. அஜீரணம், 2. வயிற்று வலி, 3. குடற் புண் (அல்சர்) 4. காய்ச்சல் 5. இரத்த சோகை 6. மஞ்சள் காமாலை 7. பாண்டு 8. மலச்சிக்கலும் அதனால் வரும் நோய்களும் 9. கொழுப்பு அதிகமாக உடலில் சேருவதால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு நோய் 10 இருதய நோய் 11. இரத்த வாந்தி, பித்தப்பையையும், கல்லீரலையும் சீராக வைத்துக் கொள்ள கரிசலாங்கண்ணி போன்ற ஒரு மருந்து எதிலும் இல்லை என்றே கூறலாம்.

கால்சியம் இல்லாமல் இருதயத்தின் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக நடக்காது. கைகால்களை அசை விக்கும் தசை நார்கள் சரியாகச் சுருங்கி விரியாது. இரத்தம் உறையாது. இந்த மாதிரி உடம்பில் நடக்கும் பல ரசாயன மாறுதல்களுக்கும் முக்கியத் தேவையாக இருப்பது கால்சியம்.
நரம்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக இருப்பதற்கு கால்சியம் உயிர்நாடியாக இருக்கிறது. கால்சியம் சத்தின் குறைவின் காரணமாக இருதய நோய், இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் உண்டா கின்றன.

உடம்பின் உள்ளுறுப்பு கள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை.

கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இ ல்லையென்றே கூறலாம். இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். இது சஞ் சீவி மருந்தாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.

1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கர்ப்ப கால உணவுகள்...

'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி!

''ஆம், அதுதான் உண்மை... அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், 'டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்... ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யாக்நி.

அந்த ஆராய்ச்சி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்த டாக்டர், ''தாய் வழி ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளை புனே நகரில் 1993-ம் ஆண்டு தொடங்கினோம். என் தலைமையிலான குழு, எண்ணூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கண்காணித்தோம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே இப்பெண்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறைந்த அளவு வைட்டமின் பி-12 மற்றும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்களுடன் இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். இக்குழந்தைகள்... எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண் டோம்.

கர்ப்பிணிகளின் ரத்தத்தில் வைட்டமின் பி-12 அளவை அதிகரித்தும், ஃபோலிக் அமிலத்தின் அளவைக் குறைத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி செய்து பரிசோதித்துப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதை யும்... நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்ததையும் கண்டறிந்தோம்.

இப்படி, 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 'குழந்தை கருவாவதற்கு முன்னரும், கருவான பின்னரும் தாய் எடுத்துக் கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளே, குழந்தைக்கு எதிர் காலத்தில் நீண்ட கால நோய்கள் பலவும் வராமல் தடுக்கும்!’ என்கிற உண்மையை உறுதிபடுத்திக் கொண்டோம்'' என்று சொன்ன சித்தரஞ்சன் தொடர்ந்தார்...

''தேவைக்கும் குறைவான எடை உள்ள தாய்மார் களுக்குப் பிறக்கும் குழந்தை களின் தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் கொழுப்பு அதிக அளவு மறைந்திருக் கிறது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர் பான பிரச்னைகள் வரக் காரணமாக இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்தியக் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டாலும்... கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் சரிவிகித அளவில் இல்லாததுதான் காரணம். கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தை 9 மாதம் வயிற்றில் வளர்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது என்பதை உணர்ந்து சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் 3 கப் பால் அல்லது அதற்கு இணையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. 'பால் மூன்று கப் குடித்து விட்டோமே' என்று தண்ணீர் அளவைக் குறைத் துக் கொள்ளக் கூடாது'' என்ற டாக்டர்...



''நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் இதற்கென உள்ள ஃபிட்னெஸ் ஆலோசகர்களிடம் கலந்து பேசி என்ன மாதிரி யான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்த வழி!'' என்றார் அழுத்தமாக!


--------------------------------------------------------------------------------

தவிர்க்க வேண்டிய உணவுகள்!



கர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம்... இதுபோன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

நல்லன தரும் நல்லெண்ணெய் குளியல்

தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு... 'கங்கா ஸ்நானம்’ எனப்படுகிற எண்ணெய்க் குளியல்! திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஜீவா சேகருக்கு, அதைப் பற்றிப் பேசுவதில் அத்தனை ஆர்வம்!

''அதிகாலை குளியல் என்பது உடம்புக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும். கடவுளின் பெயரால்



சொல்லி வைத்தால், தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதற்காகத்தான் அதிகாலை எண்ணெய்க் குளியலுக்கு ஆன்மிக காரணத்தைச் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்'' என்று அடிப்படையைப் புரிய வைத்த ஜீவா சேகர்,

''தீபாவளி மட்டுமில்லை... கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பது, பஜனை செய்வது, கோலம் போடுவது போன்ற சடங்குகளும், அதற்காக அதிகாலை குளியல் போடுவதும் என எல்லாமே உடல் நலத்துக்கு உகந்த விஷயங்களே! முந்தைய காலங்களில் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நல்ல உடல் நலம் கிடைக்கப் பெற்றனர்!'' என்றவர், அதன் நன்மைகளை விரிவாகவே விளக்கினார்.



''எண்ணெய்க் குளியல் கிட்டத்தட்ட மசாஜ் போலத்தான். அன்றைய ஆயுர்வேத மருத்துவப் பிதாமகன் சுஸ்ருதா துவங்கி, இன்றைய நவீன 'ஸ்பா’க்கள் வரை... அனைவரும் ஏற்றுக்கொண்ட, உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான உடல் நலக்குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. உடல் சூடு தணியும், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, எலும்புகளும் மூட்டுகளும் லகுவாகும். உடலின் இறந்த தோல் செல்கள் நீங்கி, சருமம் மிருதுவாகி, போஷாக்கும் பெறும்.

கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு கண் எரிந்து கிடப்பவர்கள் மற்றும் தூசு, புகை என சுற்றுப்புறச் சீர்கேட்டால் அவதிப்படும் எல்லோருக்குமே நல்லெண்ணெய் குளியல் புத்துயிர் தரும். இன்றைய இளம்தலைமுறை, தீபாவளியை முன்னிறுத்தியாவது ஒரே ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும், உடல் புத்துணர்ச்சி, உள்ளத்திலும் பிரதிபலிக்க உள்ளமும் தீபமாய் சுடர்விடும். பாரம்பரிய பெருமையையும் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்!'' என்று அழகாக அடுக்கினார் ஜீவா சேகர்.

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தைச் சேர்ந்த, தமிழாசிரியை சௌந்தரம்மாள், தீபாவளி எண்ணெய்க் குளியல் பற்றிய நம்பிக்கைகளைப் பகிர்ந்தபோது... ''முதல்நாள் இரவே தண்ணீரில் ஆல், அரசு, அத்தி, மற்றும் மாவிலைகளைப் போட்டு வைத்திருந்து, காலையில் அவற்றை அகற்றிவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பொறுக்கிற சூட்டில் வெந்நீர் தயாராகும். அதேபோல், தேய்த்துக் கொள்ளும் நல்லெண்ணையைத் தயார் செய்வதிலும் தனிக்கவனம் உண்டு. இஞ்சித் துண்டு, பூண்டுப் பற்கள், மிளகு, விரலிமஞ்சள், சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறியதும், வீட்டின் மூத்தவர்கள் கையால், எல்லார் தலையிலும் சில சொட்டுகள் வைத்துத் தொடங்கிவைக்க, எண்ணெய் குளியல் உற்சவம் இனிதே ஆரம்பிக்கும்!

பல சந்தர்ப்பங்களில் முட்டல், மோதல் வர வாய்ப்புள்ள மாமன் - மச்சான் உறவை... துவக்கத்திலேயே இனிமையாக்க, தீபாவளி எண்ணெய் தேய்ப்பை மச்சான்கள் வசம் ஒப்படைத்துவிடுவார்கள். அப்படித் தேய்த்துவிடும் போது மாப்பிள்ளையின் அவயங்களில் சங்கடமேற்படும் குறிப்புகளை வைத்து, எதிர்காலத்தில் அவருக்கு வரப்போகும் நோய்க்குறிப்புகளை அனுமானித்து, சகோ தரியின் தாலிக்கு தடங்கல் இல்லாதிருக்க முன்னேற்பாடுகளும் சத்தமின்றி மேற் கொள்ளப் படும்'' என்று சௌந்திரம்மாள் சொன்ன தகவல், சுவாரஸ்யம்!

நலமும், நன்மகிழ்ச்சியும் தரட்டும் நல்லெண்ணெய் குளியல் !

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன், தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது. அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்கப் புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகி விட்டது.

இதுகுறித்து, சென்னை குளோபல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் பி.சண்முகம் நம்மிடம் பேசினார். ''நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. நாம் உட்கொள்ளும் உணவானது செரிக்கப்பட்டு, ஊட்டச் சத்தாக ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த இந்த ஊட்டச் சத்துக்கள் கல்லீரலுக்கு கொண்டுசெல்லப்படும். பின்பு அவை சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இப்படி உடைக்கப்பட்ட சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம், கொழுப்பு போன்றவை உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இப்படி இவை மாற்றப்படுவதற்கு என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது ஒரு என்ஸைம் குறைந்தால்கூட ஊட்டச்சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும். இதை மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் என்று கூறுவோம்.

உணவில் உள்ள சத்துக்களை உடைத்து ஊட்டச் சத்துகளாக மாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஸைம்கள் நம் உடலில் இருக்கின்றன. ஒரு என்ஸைம் குறைந்தாலும் பிரச்னைதான். அதனால் நூற்றுக்கணக்கான மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் ஒரு சில நோய்கள் மட்டும் மிக அரிதாக இருக்கும். உதாரணமாக புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை உற்பத்தி செய்யும். அமோனியா என்பது மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அது மூளையைப் பாதிக்கக்கூடியது. எனவே, கல்லீரல் அந்த அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. அமோனியாவை யூரியாவாக மாற்றுவதை யூரியா சைக்கிள் என்று கூறுவோம். ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நடைபெறும். இதற்கு ஐந்து என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் என்ஸைம் இல்லாமல் போய்விட்டால், இந்தப் பணி தடைபட்டு அமோனியா உடலில் தங்கிவிடும். இது மூளையைத் தாக்கி கடைசியில் உயிரிழப்பில் கொண்டுபோய்விடும்.

அதிக அளவில் பரம்பரை ரீதியாக குழந்தைக்கு இந்த நோய் கடத்தப்படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாடு தெரியாது. அவர்கள் குறிப்பிட்ட ஏதாவது ஓர் உணவை உட்கொள்ளும்போதுதான், பிரச்னை இருப்பது தெரிய வரும். உதாரணத்துக்கு ஹெரிடிட்டி ஃப்ராக்டோஸ் இன்டாலரன்ஸ் என்ற ஒரு வியாதி உள்ளது. சில குறிப்பிட்ட பழங்களை உண்ணும்போது அதில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போய்விடும். அதனால், வயிற்றுப் போக்கு அல்லது கல்லீரல் செயலிழப்பில் கொண்டு போய்விடும். குழந்தைக்கு காய்கறி அல்லது பழங்களைப் புகட்ட ஆரம்பிக்கும்போதுதான் இந்தப் பிரச்னையே பெற்றோருக்குத் தெரிய வரும். கல்லீரலை மாற்றினால்தான் இவர்களால் உயிர் வாழ முடியும். சிலருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் கிருமித் தொற்று காரணமாகவும் கல்லீரல் தோல்விப் பிரச்னை வரலாம்.

சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிஸிஸ் செய்யப்படு வதுபோல, இவ ர்களின் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட நஞ்சை அகற்றும் டயாலிஸிஸ் முறை வந்தது. ஆனால், அந்த சிகிச்சையால் எல்லாவிதமான நஞ்சையும் அகற்ற முடியவில்லை.மேலு ம், இதற்கான சிகிச்சைக் கட்டணமும் மிக அதிகம்.

இந்த நிலையில்தான் ஆக்ஸிலரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வந்துள்ளது. இதில், தானமாகப் பெறப்படும் கல்லீரலை, ஏற்கெனவே உள்ள கல்லீரலுடன் சேர்த்துப் பொருத்துவோம். இதனால் நோயாளியின் கல்லீரல் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். கூடுதலாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், அந்தக் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் கையாளும். இதனால் நோயாளி தன் வாழ் நாள் இறுதி வரை இது தொடர்பான எந்த பிரச்னையும் இன்றி வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றது.

இந்த சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. தானமாகப் பெறப்படும் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட திசுவை மட்டும் தனியே பிரித்து எடுத்து, பதப்படுத்திப் பாதுகாத்துவைக்கப்படும். தேவைப்படும்போது, கல்லீரலுக்குச் செல்லும் ரத்தத்தில் அந்த கல்லீரல் திசுவைச் செலுத்துவோம். அது நோயாளியின் கல்லீரலில் சென்று சேர்ந்து, செயல்பட ஆரம்பிக்கும். லண்டன் கிங்ஸ் காலேஜில் பணியாற்றும்போது, இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினோம். சென்னையில் இதுபோன்று சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வகம் உள்ளிட்டவை நிறுவும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மெட்டபாலிக் டிஸார்டருக்கான சிகிச்சை முறை என்பது ஓப்பன் சர்ஜரி முறையில் இருந்து மாறி சிறு துளை திசு செலுத்தும் முறைக்கு மாறிவிடும்!'' என்றார் நம்பிக்கையாக.

மருத்துவப் புரட்சிதான்!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

மறதியை வழி அனுப்புவோம்

மறதி நோய் மேலை நாடுகளில்தான் அதிகம் காணப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நம் நாட்டிலும் முதியவர்களை இந்நோய் தாக்குகிறதா?

நம் நாட்டில் உள்ள மொத்த ஜனத்தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியாகும். இதில் 21 லட்சம் மக்கள் (3%) டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2050வது ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட் டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் முதியவர்கள் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புண்டு.

முதுமையில் சிலருக்கு குறைந்த அளவு ஞாபக மறதி மட்டுமே இருக்கும். (Mild Cognitive Impairment). மற்றபடி அவர்களுடைய பேச்சுத்திறன், செயல்திறன் மற்ற நடை, உடை, பாவனைகள் எல்லாமே சரியாகவே இருக்கும். இவர்களில் சரிபாதி மக்களுக்கு, அடுத்த 3 5 வருடங்களில் டிமென்ஷியா நோயின் மற்ற அறிகுறிகளும் தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. (உ.ம்) பேச்சுத் திறன் குறைதல், உரையாடல் மாற்றம் தெரிதல், செய்யும் செயலில் குறைகள் ஏற்படுதல், மறதிக் குறைவோடு இதுபோன்ற குறைகளும் அவர்களுக்கு ஏற்படும்.

வயதான காலத்தில் மறதி ஏற்படுவது முதுமையின் விளைவா? அல்லது நோயின் அறிகுறியா?

வயதான ஆண்களைவிட பெண்களே டிமென்ஷியாவினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!

டிமென்சியா நோய் முதுமையினால் வருவது அல்ல!

நம் நாட்டில் மக்களின் வாழும் நாட்கள் அதிகரிக்க முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. முதியவர்கள் அதிகம் ஆக, ஆக டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் ஆகிறார்கள். இது நீண்ட ஆயுட்காலத்திற்குக் கிடைத்த ஒரு தண்டணையா?

சுமார் 60 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று ஞாபகமறதி ஏற்படுவது சகஜம். மிகவும் பழக்கமானவர்களின் பெயர் மறந்து வி டும். புதிதாக டெலிபோன் எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். பணத்தை பல முறை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். இப்படி பல ஞாபக மறதி சம்பவங்கள் தினமும் நடப்பது சகஜம். இது முதுமையின் விளைவு. ஆனால் பல நோய்களினாலும் ஞாபக மறதி ஏற்படலாம். முதுமையில் எந்தக் காரணமுமின்றி ஞாபக மறதி ஏற்படுவதை அறிவுத் திறன் வீழ்ச்சி (ஞிமீனீமீஸீtவீணீ) என்று கூறுவதுண்டு. மறதி உள்ளவர்கள் எல்லாம் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அதே சமயம் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு ஞாபகமறதி கட்டாயம் இருக்கும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதிக்கும், அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படிக் கண்டு கொள்வது?

ஆரம்ப நிலையில் இரண்டிற்கும் வித்தியாசம் கண்டறிவது மிகவும் கடினமே. இருந்தாலும் கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் வித்தியாசம் கண்டு கொள்ள முடியும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி மூளையிலுள்ள நரம்புச் செல்கள் மெதுவாக செயல்படுவதால் ஏற்படுகிறது. (Slowing of Neural Processes)
தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலை அடைந்து, அவரே டாக்டரிடம் செல்வார்.



ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக் கொள்வார். (உ.ம்) பேனாவை கத்தி என்பார். ஆனால் அது தவறு, இது எழுதுவதற்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருள் என்று சொன்னால், அவர் புரிந்து, ‘‘ஆம் அது பேனாதான். நான் தவறாக கத்தி என்று கருதிவிட்டேன்" என்று தன்னைத் திருத்திக் கொள்வார்.

டிமென்ஷியா ஒரு சில நாட்களிலோ
அல்லது வாரங்களிலோ வரும் நோயல்ல!
பல மாதங்களாக அல்லது வருடங்களாக உள்ளிருந்து
மறதி மூலம் வெளிப்படுகிற நோய்.

விவிஷிணி ஜிமீst மனநோயைக் கண்டறியும் பரிசோதனை. இதில் மாற்றம் ஏதும் இருக்காது.
MRI & PET Brain Scan இதிலும் மாற்றம் ஏதும் இருக்காது.

அறிவுத் திறன் வீழ்ச்சி மூளையிலுள்ள இரசாயனப் பொருட்கள் குறைவதாலும் திசுக்கள் அழிவதாலும் ஏற்படுதல்.

தனக்கு ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே டாக்டரிடம் செல்ல மாட்டார். ஆகையால், அவரை குடும்பத்தினர்தான் டாக்டரிடம் அழைத்து வருவர்.

போனாவை கத்தி என்று தான் அடித்துக் கூறுவார். தன்னைத் திருத்திக் கொள்ளத் தெரியாது.

MMSE Test இச்சோதனையில் மிக்க மாற்றம் இருக்கும்.
MRI & PET Brain Scan இப்பரிசோதனைகளில் மாற்றம் தெரியும்.

டிமென்ஷியா எதனால் வருகிறது?

டாக்டர் அலோசிஸ் அல்சியமியர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர், இந்நோயை 1906 ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடித்தார். இது முதுமையைத் தாக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய்க்கான காரணம் இன்னமும் சரியாக கண் டறியப்படவில்லை. இந்நோய் எவரையும் தாக்கலாம்.

உதாரணம் : அமெரிக்க ஜனாதிபதி ரெனால்டு ரீகன் அவர்களுக்கும் மற்றும் பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இந்நோய் வந்துள்ளது. மூளையிலுள்ள நரம்புச் செல்கள் சரியாக செயல்படாததால் மறதி ஏற்படுகிறது. இந்த செல்கள் சரியாக செயல்பட ஆசிடைல்கொலின் (Acetylcholine) என்ற திரவம் தேவைப்படுகிறது. இந்த இராசாயனப் பொருள் நரம்புத் திசுக்களை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட மிகவும் உதவுகிறது (Neurotransmitter). இது ஞாபகசக்தி, படிக்கும் திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரி தும் உதவுகிறது. இந்தக் குறைந்த திரவத்தை மருந்துகள் மூலம் சற்று அதிகப்படுத்தினால் மறதியை சற்று குறைக்க முடியும்.

டிமென்ஷியாவில் பல வகைகள் உண்டு என்கிறார்களே அதைப் பற்றி சில விவரங்கள் தேவை?

டிமென்ஷியா என்பது முதுமையில் கட்டாயம் வருமென்பது அவசியமில்லை, பல முதியவர்கள் நூறு வயதில் கூட டிமென் ஷியா இல்லாமல் நல்ல மனநலத்துடன் வாழ்கிறார்கள். டிமென்ஷியாவில் பல வகைகள் உண்டு. டிமென்ஷியா வருவதற்கான காரணத்தைக் கொண்டு அவைகளைப் பிரிக்கலாம்.

1. அல்சியமியர் நோய் காரணம் கண்டறியாத டிமென்ஷியா (Aizheimer‘s dieseas). மரபுப் பண்பும் (Gene) சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் மாற்றமும் (Environment) ஒரு காரணமாக இருக்கலாம்.

2. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படும் டிமென்ஷியா உதாரணம் : பக்க வாதம் (Vascular Dementia).

3. அல்சியமியர் டிமென்ஷியாவும் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பால் ஏற்படும் டிமென்ஷியாவும் சேர்ந்து வருதல் (Mixed Dementia).

4. சில குடும்பங்களில் மிக அரிதாக பாரம்பரியமாகவும் வர வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் டிமென்ஷியா நோய் சற்று கு றைந்த வயதிலேயே தோன்ற ஆரம்பிக்கும். (50 60 வயது).

5.நோய்களினால் ஏற்படும் டிமென்ஷியா.

முதுமையில் எந்தவித நோய்களினால் டிமென்ஷியா வரலாம்?
சுமார் 15 20% முதியவர்களின் ஞாபக மறதிக்கு நோய்களும் ஒரு காரணமாகும் அவைகள் :

மூளைக்கு இரத்த ஓட்டம் குறைதல். இது முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வர வாய்ப்புண்டு. இரத்த அழுத்தத்திற்கு தக்க சிகிச்சை அளித்து ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளைக் கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இரத்தக் கட்டி ஏற்படுதல், முக்கியமாகக் கீழே விழுதல் மற்றும் விபத்து போன்ற காரணங்களினல் ஏற்படுதல். இதை மூளை ஸ்கேன் மூலம் எளிதில் கண்டு, தக்க சிகிச்சை அளித்து பூரண குணமளிக்க முடியும்.

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது. மதுவை நிறுத்தினால் நினைவாற்றல் திரும்பும்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தாலும் மிகுந்த ஞாபகமறதி ஏற்படும். இதற்கு தக்க சிகிச்சையின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உதறுவாதம், மனச்சோர்வு உயிர்க்கொல்லி நோயினாலும் டிமென்ஷியா வரலாம்.

வைட்டமின் சத்துக்கும் டிமென்ஷியாவுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
இரத்தத்தில் ஓமோசிஸ்டின் (Hymocysteine) அளவு அதிகம் உள்ளவர்களுக்கு அறிவுத் திறன் வீழ்ச்சி வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கு 21 முதியவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆரம்ப நிலையில் அறிவுத் திறன் வீழ்ச்சி இருப்பது தெரிந்தது. அவர்களில் 9 (21) பேருக்கு ஓமோசிஸ்டின் அளவு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் வைட்டமின் ஙி6 பொலிக் ஆசிட் (Folic Acid) மற்றும் ஙி12 (Mecobalamin) கலந்த மாத்திரையை, ஒரு நாளுக்கு இரண்டு என்று 6 மாதத்திற்குக் கொடுக்கப்பட்டது. 6 மாதத் திற்குப் பின்பு ஓமோசிஸ்டின் அளவு 5/9 நபர்களுக்கு சரியான அளவுக்கு வந்துள்ளது. மேலும் அவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சியிலும் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இரத்தத்தில் ஓமோசிஸ்டின் அளவு அதிகம் உள்ளவர்களை வைட்டமின் சத்து மாத்திரைகள் மூலம் அறிவுத் திறன் வீழ்ச்சியில் இருந்து தடுக்க முடியும்.

அறிவுத் திறன் வீழ்ச்சி நோயின் (Dementia) முக்கிய அறிகுறிகள் என்ன?
இந்நோய் சுமார் 7075 ஆண்டுகள் கடந்த முதியவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய அறிவுத் திறன் முதலில் வீழ்ச்சி அடைகிறது. இதனால் நினைவாற்றல், ஒரு முகக் கவனம், இட இயல் அறியும் தன்மை ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஒரு பொருளை பகுத்தறியும் தன்மையும், புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்ளும் தன்மையும் குறைகின்றன. இதனால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. (உ.ம்) கவனக்குறைவு, எதையும் மனதில் பதிய வைக்க முடியாத நிலை.

முக்கியமாக அண்மைக்கால நினைவு (Recent memory) பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால், அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மை நினைவுகள் அற்றுப் போய் விடுகின்றன. யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? நேற்று என்ன நடந்தது? என்பது கூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால், கடந்த கால நினைவுகள் (Past memory) நிலைத்திருக்கும். அதனால் அதைப் பற்றியே பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவார்கள். கடைசியில் தம்மையும் மறந்துவிடுவார்கள். தம்மையும் மறந்து ஒரு தாவர வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்களுடைய தேவைகளை பிறர் செய்ய வேண்டிய நிலையில் இருப்பார்கள். அதாவது சுருக்கமாக சொன்னால், மனதளவில் இறந்து உடலளவில் வாழும் மனிதர்களாக இருப்பார்கள்!
முதுமையில் ஏற்படும் மறதியைக் கண்டறிய ஏதாவது சுலபமான வழிமுறைகள் உண்டா?

முதுமையில் மறதியைக் கண்டறியும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள கட்டங்களில் ஏதேனும் ஒன்றை டிக் செய்து இருந்தால் உங்களுக்கு மறதி நோய் அல்லது வேறு மருத்துவ பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. தயவு செய்து உங்கள் குடும்ப டாக்டரிடம் உடனே கலந்து ஆலோசிக்கவும்.

முதுமை மறதியை கண்டறியும் வழி
நினைவு இழப்பு (சந்திப்புகளை மறந்து விடுதல், சமீப நிகழ்வுகளை அல்லது உரையாடல்களை நினைவு கூற முடியாமை)
பொருள்களை இடம் தவறி வைத்துவிடுதல் மற்றும் அவற்றை யாராவது திருடிவிட்டதாக எண்ணுதல்.

திசை தடுமாற்றம் (பழக்கமற்ற இடங்களில் குழப்பமடைதல், நேர காலம் அல்லது ஆண்டு என்னவென்பதறியாமை, தன் னுடைய வீட்டிற்கு வழியறியாமை) பேசுதல் (எளிய நன்கு அறிந்த பொருள்களின் பெயர்களை மறந்து போதல், பொருத்தமற்ற வார்த்தைகளை உபயோகித்தல், சொன்ன வார்த்தைகளையும், வாசகங்களையும் திரும்பத் திரும்ப சொல்லுதல்)
பொழுதுபோக்குகளில் மற்றும் சொந்த செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை, தான் அனுபவித்து வந்த செயல்பாடுகளை தவிர் த்தல்
நண்பர்கள், சக பணியாளர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காணல் (பேரக் குழந்தைகளை மறந்து போதல், நண்பர்களை அயலார்களாக எண்ணுதல்)
சிக்கலான வேலைகளில் ஈடுபடுதல் (செக் புக்கை வைத்திருத்தல், பணத்தை எண்ணுதல், தொலைபேசியை உபயோகித்தல்)
தொந்தரவுமிக்க நடவடிக்கை (இரவில் வெளியே செல்லுதல், வன்முறையில் ஈடுபடுதல்)

மோசமான சுகாதாரம் (பல் துலக்க மறந்து போதல், மெதுவாக ஆடை அணிதல் அல்லது பொருத்தமற்ற ஆடை அணிதல்)

ஒருவருக்கு டிமென்ஷியா இருப்பதை எப்படி கண்டறிவது?

முதுமையில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டால் அது முதுமையின் விளைவே என்று எண்ணி டாக்டரிடம் செல்ல மாட்டார். அக்குடும்பத்திலுள்ள உறவினர்கள் தான் அவரைக் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அந்த முதியவரின் ஞாபகமறதி மற்றும் அவருடைய செயல்திறனை அறிய, தேவையான தகவல்களை முதியவரிடம் டாக்டர் கேட்டு அறிவார். இதைவிட மிகவும் முக்கியம், அம்முதியவரைப் பற்றி உறவினர்கள் கொடுக்கும் தகவல்கள்.

பின்பு அம்முதியவரை டாக்டர் முழுமையாக பரிசோதனை செய்வார். (உ.ம்.) இரத்த அழுத்தம், அவருடைய நடை, கண் பார்வை, காது கேட்கும் திறன்.

முதியவரின் மறதியைக் கண்டறிய MMSE TEST (Mini Mental Staus Examination) என்ற பரிசோதனை செய்யப்படும்.

இரத்தப் பரிசோதனை, மார்புப் படம் (Xray chev) ஈ.சி.ஜி (E.C.G.) தைராய்டு பரிசோதனை (Thyroid), உயிர்க்கொல்லி நோய் (HIV) அறிய போன்ற சில பரிசோதனைகள் செய்யப்படும். தேவையானவர்களுக்கு மட்டுமே மூளை ஸ்கேன் எடுக்கப்படும். PET ஸ்கேன் மற்றும் SPECT ஸ்கேன் மூலம் ஒருவருக்கு அல்சிமியர் நோய் இருப்பது கண் டறியப்படும்.

மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் ஒருவருக்கு டிமென்ஷியா இருக்கிறதா என்பதை (80%) ஓரளவிற்கு கண்டறிய முடியும்.

டிமென்ஷியாவுக்குத் தக்க சிகிச்சை உண்டா?

இந்நோய்க்கு இன்னும் தக்க மருந்து கண்டறியப்படவில்லை. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்குத் தக்க சிகிச்சையளித்து நோயின் வீரியத்தைக் குறைக்க முடியும்.

டிமென்ஷியா வருவதற்கு ஏதாவது காரணம் கண்டறியப்பட்டால் அதற்கு தக்க சிகிச்சை அளித்தால் ஞாபக மறதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். (உ.ம்.) டிமென்ஷியாவுடன் மனச்சோர்வு உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்குண்டான சிகிச்சையளித்தால் டிமென்ஷியாவில் சற்று குணம் தெரியும்.

மதுவை நிறுத்தினாலும் நினைவாற்றல் திரும்பும்.
மருந்துகள் - தூக்க மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கும் மாத்திரை இவைகளை குறைப்பது அல்லது நிறுத்துவதின் மூலம் நினைவாற்றலை மீண்டும் பெறலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் தைராய்டு மாத்திரை மூலம் மறதியை மீண்டும் பெறலாம்.

டிமென்ஷியா நோய்க்கான மருந்துகள்
இந்நோயை பூரணமாக குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இன்னமும் கண்டறியப்படவில்லை, இருப்பினும் அதன் வீரியத்தைக் குறைக்க ஒரு சில மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் நரம்பு மண்டலங்களை (neuroprotectives) பாதுகாக்கும் தன்மைகள் கொண்டவை. இவைகள் மூலம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம்.

1. வைட்டமின் ணி, சி போன்ற மாத்திரைகள் (antioxidants).
2. வைட்டமின் ஙி6, ஙி12 மற்றும் பொலிக் ஆசிட் (திஷீறீவீநீ கிநீவீபீ) போன்ற மாத்திரைகள் இரத்தத்திலுள்ள ஓமோசிஸ்டினின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு, ஓமோசிஸ்டின் அளவைக் குறைத்து ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.

3. இரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய Statin போன்ற மாத்திரைகளும் சிறிது பயன் தரலாம்.

4. Ginkgobiloba என்ற தாவர சிகிச்சையும் ஒரு சிலருக்குப் பயன் அளிக்கும்.

5. Donepezil, Rivastigmine, Galantamine போன்ற மாத்திரைகள் ஆரம்ப நிலையிலுள்ள டிமென்ஷியா நோயாளிகளுக்கு மறதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இம்மருந்தினால் சில பின் னடைவுகளும் உண்டு.

அறிவுத்திறன் வீழ்ச்சியோடு மற்ற தொல்லைகளுக்கும் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல் மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை மலச்சிக்கலுக்கான மாத்திரை ஞாபகப் பயிற்சிகள் மூளையிலுள்ள திசுக்களுக்கு (Cells) தவறாமல் தூண்டுதலை அளிப்பதின் மூலம் முதுமையில் மறதியை ஏற்படுவதை மெதுவாகக் குறைக்கக் கூடும்.

கண்பார்வை

வயது முதிர்ச்சி அல்லது நீரழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களினால் கண்பார்வை குறைகிறது. கண் பார்வை குறையக் குறைய, மூளை செயல்படும் சக்தியும் குறைய மறதி வர வாய்ப்பு அதிகமாகிறது. இவர்களுக்கு தக்க சிகிச்சையின் மூலம் கண் பார்வை கிடைக்கப்பெற்றால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

காது கேட்கும் திறனை அதிகரித்தல் முதுமையில் மறதி உள்ளவர்களுக்கு காது கேளாமை பிரச்னையும் இருக்கலாம். அவர்களுக்கு தக்க மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று காது கேட்கும் திறனை அதிகப்படுத்தினால் மறதியின் அளவு சற்று குறையலாம்.

தொடுதல்

முதுமையில் மறதியுடையவர்களுக்கு தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டும் பயிற்சிகளை அளிக்க வேண்டும். (உ.ம்.) கண்களை மூடிக் கொண்டு பொருட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வேறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருகளை என்னவென்று யூகிக்க வேண்டும்.

நுகர்தல் மற்றும் ருசித்தல் ஒருவருடைய ருசியையும், நுகரும் தன்மையையும் அடிக்கடி தூண்டுவதற்கான பயிற்சியைக் கொடுக்கவும், (உ.ம்.) ஒரு கு றிப்பிட்ட உணவின் ருசி, அதன் நறுமணம் ஆகியவற்றை கூறச் சொல்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். முதுமையில் மறதி அதிகரிக்க ருசி மற்றும் மணத்தின் உணர்வுகள் மாறுபடலாம். ஆகவே, ருசி அரும்புகள், மற்றும் நுகர்தலை மீண்டும் தூண் டுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

முதுமையில் மறதியைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் உண்டா?

கீழ்காணும் குறிப்புகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால், மறதியை தவிர்க்க முடியும்.

உடற்பயிற்சி : தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம், மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

பொழுதுபோக்கு : தோட்டக்கலை, சொற்பொழிவு கேட்பது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது, எதாவது ஒரு பொழுதுபோக்கு சங்கத்தில் உறுப்பினராகுதல் முதலியன.

தியானம் : நல்ல மனநலத்திற்கு முதுமையில் தியானம் ஒரு சிறந்த மருந்து. ‘‘உறங்கிக் கிடக்கும் மூளையில் உள்ள திசுக்களை உசுப்பிவிடும் சக்தி தியானத்திற்கு உண்டு’’ என்று பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி கூறியுள்ளார். ஆகையால் தினமும் தியானத்தைக் கடைப்பிடித்து வந்தால், மறதியை வெல்லமுடியும்.

மூளைக்கேற்ற சத்துணவு : சத்தான உணவு முக்கியமாகும். புரதச்சத்து அதிகமுள்ள உணவு மனநலத்திற்கு நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

தனிமையைத் தவிர்த்தல் : தனிமையில் உள்ளவர்களுக்கு மனச்சோர்வும், ஞாபக மறதியும் வர வாய்ப்புகள் அதிகம். தனிமையைத் தவிர்த்து, மற்றவர்களுடன் கலகலப்புடன் இருந்தால், முதுமையில் மனநலம் சீராக இருக்கும்.

டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வேறு எந்த வகைகளில் உதவலாம்?

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் உள்ளவர்கள் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெ ன்றால், அம்முதியவருக்கு தான் ஒரு மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அவருக்கே தெரியாது! ஆகையால் அதைப் புரிந்து கொண்டு வீட்டிலுள்ள உறவினர்கள் அவரை அனுசரித்துப் போக வேண்டும். இவரைப் பராமரிப்பதில், நோயாளியை விட அதிகம் கஷ்டப்படுபவர்கள் அவருடைய உறவினர்களே. (Caregivers) (உம்) வீட்டிலுள்ள பொருட்களை இடம் மாறி வைப்பது, கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது, அடிக்கடி உடைகளைக் களைந்து விடுவது, சாப்பிட மறுப்பது அல்லது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது.

டிமென்ஷியா நோயாளியை கவனிக்க உறவினர்களுக்கு மிகவும் சகிப்புத்தன்மை தேவை. மேலும், செய்யும் உதவிகளை பாசம் கலந்த உள்ளுணர்வோடு செய்வது நல்லது. முதியவரை அடிக்கடி தொட்டுப் பேசிப் பழகுவது அவருக்கு மனதில் ஒரு தன் னம்பிக்கையை ஊட்டும். முதியவரின் தனிமையைத் தவிர்க்க வீட்டிலுள்ள உறவினர்கள் அவரவர் பங்குக்காக சிறிது நேரமாவது முதியவரிடம் பேசுதல் அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவருடைய அன்றாடத் தேவைகளை சிறிதும் குறைவில்லாமல் செய்ய வேண்டும். (உம்) குளிப்பது, உடை உடுத்துவது.
அவருடைய உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவருக்குப் பிடித்த, அதே சமயத்தில் சத்தான உணவை உறவினர்கள்தான் காலமறிந்து கொடுக்க வேண்டும். அவரை ஒரு போதும் அலட்சியப்படுத்தி விடக்கூடாது. இதில் உறவினர்கள் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ளவேண்டும். முதியவரை முடிந்தளவிற்கு தனிமைப்படுத்தக்கூடாது. உறவினர்கள் உண்ணும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவரும் கூடவே இருக்கட்டும். அவருடைய அன்றாடத் தேவைகளுக்கு முடிந்தளவிற்கு உறவினர்கள் உதவி செய்யவேண்டும். இதை உறவினர்கள் ஒரு பாரமாக எண்ணக்கூடாது. முதியவர்களை கவனிப்பது தமக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரும் புண்ணியமாக எண்ணி செயல்பட வேண்டும்.

மறதியுள்ள முதியவர்களை கவனித்துக் கொள்பவர்கள் (சிணீக்ஷீமீ ரீவீஸ்மீக்ஷீs) பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியி ருக்கும். இரவில் கண் விழிப்பதால் தூக்கம் கெடும். முதியவரோடு இருந்து அவர்களின் தேவைகளை கவனித்துக் கொள்ளும்பொழுது உறவினர்களுக்கு உடல் சோர்வும், மனச்சோர்வும் ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.

நிதி வசதியும் பாதிக்கப்படலாம்.இதனால் உறவினர்களிடையே மனக்கசப்பும், சண்டைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் இதைத் தவிர்க்க மறதியுள்ள முதியவரின் நிலையை நன்கு புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாக வீட்டிலுள்ள உறவினர்கள் பெருந்தன்மையோடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முதியோர் மருத்துவ நிபுணர்களும், மனநல மருத்துவ நிபுணர்களும் இத்தகைய உறவினர்களை அழைத்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மனதில் ஒரு தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.

அன்பே மருந்து

அறிவுத்திறன் வீழ்ச்சிக்கு இன்னமும் தக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்குத் தக்க உணவு. அன்பான பராமரிப்பு, தக்க பொழுதுபோக்கு இவற்றை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு மனதாக தாராளமாகத் தர முன் வரவேண்டும். ஆகவே இந்நோய்க்கு தற்பொழுதிற்கு அன்பே மருந்து!

சிந்திப்பீர்!

டிமென்ஷியா வருவதை இரண்டு ஆண்டுகள் தள்ளிவைத்தால் அந்நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வாக குறைய வாய்ப்புண்டு.

டிமென்ஷியா வருவதை சுமார் 10 ஆண்டு களுக்குத் தள்ளிப் போட முடிந்தால் கடைசிக் காலத்தில் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று கூட கூறலாம்.

இது மேலை நாடுகளின் புள்ளிவிவரம் என்றாலும் நம் நாட்டிற்கும் ஓரளவுக்குப் பொருந்தும்சிந்திப்போம்! செயல்படுவோம்!