பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

‘எய்ட்ஸ்’ நோய்

உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நோய் ‘எய்ட்ஸ்'.

‘எய்ட்ஸ்’ என்றால் என்ன? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த ‘எய்ட்ஸ்’ எவ்வாறு ஏற்படுகிறது? எதன் மூலம் ஏற்படுகிறது? என்பது குறித்து அறிவியல் அறிஞர்களும், மருத்துவர்களும் மிகவும் குழம்பிப் போய் விட்டார்கள். அமெரிக்காவில் இளம் வயதினர் சிலர் மிகவும் அபூர்வமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து இறப்பது மருத்துவர்கள் மனதில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. எதனால் இவர்களுக்கு இவ்வித புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் உடலில் எதிர்ப்புத்திறன் ஏன் குறைகிறது என்றும் மருத்துவர்கள் ஆராயத் தொடங்கிய போது தான் இது ஒரு வைரஸால் ஏற்படும் பாதிப்பு என்பது தெரியத் தொடங்கியது. இனி ‘எய்ட்ஸ்’ எப்படி படிப்படியாக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து இன்றளவு வந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

எய்ட்ஸுக்கு வரலாறு உண்டு 1978-ல் கடுமையான ‘புற்றுநோய்’ மற்றும் ஓர் அரிய தொற்று நோய் முதன் முதலில் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தென்பட்டது. 1981-ல் அமெரிக்காவில் ‘ஓரினச் சேர்க்கை’ கொண்டவர்களுக்கு உடலுறவின் மூலமாக கழுத்துப் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 1982 இரத்தம் செலுத்துகின்ற போதும், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கும் ‘எய்ட்ஸ்’ வருவதாக கண்டறியப்பட்டது. இப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் இருப்பது அறியப்பட்டது. 1983 அமெரிக்காவில் 2500 எய்ட்ஸ் நோயாளிகளிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ‘எய்ட்ஸ்’ நிலையங்கள் துவங்கப்பட்டன. 1984 ஆப்பிரிக்காவில் உடலுறவு மூலமாக எய்ட்ஸ் பரவுவது ஆய்வின் மூலம் அறியப்பட்டது. 1985 தென் கிழக்கு ஆசியாவில் எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். உலகம் முழுவதும் 24,424 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறியப்பட்டது.

1986 உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள சிபாரிசு செய்தது. இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில் ‘எய்ட்ஸ்’ நோயாளி இருப்பது கண்டறியப்பட்டது. 1987 எய்ட்ஸ் நோய் 120 நாடு களில் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அங்கு மொத்தம் 73,747 பேர் இந்த நோய்க்குப் பலியாகி இ ருக்கிறார்கள். 1989 இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயாளி என உறுதி செய்யப்பட்டவர்கள் 40 பேர். 1990 இந்தியாவில் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகள் 2054 பேர். இதில் உறுதி செய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் 41 பேர். 1992 இந்தியாவில் ‘தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு’ துவங்கப்பட்டது. 1993 சென்னையில் ‘மாநில எய்ட்ஸ் தடுப்பு மையம்’ புதிய கட்டடத்தில் துவங்கப்பட்டது. தமிழக அரசு இவ்வலுவலகத்திற்கு நிதி மற்றும் நிர்வாக அலுவல்களில் உதவி புரிய பல்வேறு குழுக்களை அமைத்தது.

‘மாநில எய்ட்ஸ் தடுப்பு மையம்’ தமிழகமெங்கும் துண்டு காகிதங்கள், விளக்கப்படம், ஒலிநாடா போன்றவற்றின் மூலமாக சிறப்பாக, எய்ட்ஸை நாட்டில் மேலும் பெருகவிடாமல்... தடுத்து நிறுத்தப் பணியாற்றி வருகிறது.

எய்ட்ஸ் ஒரு வகை வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. இது ‘ரிட்ரோவைரஸ்’ இனத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸாகும். இந்த வைரஸ் மனித உடலில் நுழைந்து தன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு மனித உடல் செல்களை குறிப்பாக வெள்ளையணுக்களை அழிக்கிறது.

‘எய்ட்ஸ்’ எவ்வாறு பரவுகிறது?

எய்ட்ஸ் பரவும் வழிகள் :

எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் மனித உடலைப் பல வழிகளிலும் வந்தடையும்.

உடலுறவின் மூலமாக :

உடலுறவின் மூலமாக இந்த வைரஸ் கிருமிகள் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இவ்வாறான உடலு றவு இயல்பான, இயற்கையான ஆண் பெண் உடலுறவாக இருக்கலாம். ஓரினச் சேர்க்கையாகவும் இருக்கலாம்.

இரத்தத்தின் மூலமாக :

இரத்தத்தில் இந்த வைரஸ் கிருமிகள் மிகுந்திருப்பதால் ஒருவருக்கு ‘இரத்தம்’ செலுத்தும் போது அதில் இந்த வைரஸ் கிரு மிகள் இருந்தால், செலுத்தப்படும் இரத்தத்தின் மூலமாகவும் ஒருவருக்கு ‘எய்ட்ஸ் ஏற்படலாம்.

ஊசிகளின் மூலமாக :

ஊசிகள் மூலமாகவும், ‘எய்ட்ஸ்’ கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு. இந்த வகையில் ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றொரு நோயாளிக்குப் பயன்படுத்தும் போது ‘எய்ட்ஸ்’ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிலும்கூட, இரத்த நாளங்களில் ஊசி போட்ட பிறகு, அதே ஊசியைப் பயன்படுத்துவதால், இக்கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வகையில், கு றிப்பாக, போதை மருந்துகளுக்கு அடிமையாகி ‘போதை மருந்துகளை ஊசி மூலமாக இரத்த நாளத்தில் செலுத்தும் நபர்களுக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் பெரும்பாலும், ஒருவர் பயன்படுத்திய ஊசியை வைத்தே மற்றவருக்கு போதை மருந்து போடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால், இவர்களில் ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ இருந்தாலும் போதை ஊசிகளின் மூலமாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.

தாய் மூலமாக :

கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு ‘எய்ட்ஸ்’ இருந்தால், அவள் மூலமாக, அவள் கருப்பையில் வளரும் சிசுவிற்கும் இக்கிருமிகள் பரவிவிடும். இதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ‘எய்ட்ஸ்’ நோய், பிறக்கும்போதே ஏற்பட்டிருக்கும்.

பிற வழிகள் :

நோயாளிகளின் உடல் திரவங்கள்- விந்து, நீர், இரத்தம் போன்றவை உடல் காயங்களின் மூலமாகவும் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

‘எய்ட்ஸ்’ எந்த வழிகளில் பரவாது?

‘எய்ட்ஸ்’ நோய் எந்தெந்த வழிகளின் மூலமாகப் பரவும் என்று எழுதியிருப்பதிலிருந்தே மற்ற வழிகளின் மூலமாக பரவாது என்று தான் அர்த்தம். என்றாலும் ‘எய்ட்ஸ்’ குறித்து மக்களிடம் பல்வேறு ஐயங்களும், பயங்களும், பீதியும் இருப்பதால் எந் தெந்த வகைகளில் பரவாது என்பதைக் குறித்தும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டியுள்ளது. கொசுக்களாலும், மூட்டைப் பூச்சிகளாலும் எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் பரவுவது இல்லை. உணவு உண்பதற்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள், பண் டங்களின் மூலமாகவும் எய்ட்ஸ் கிருமிகள் பரவுவது இல்லை. கழிவறைகள், குளியலறைகள் மூலமாகவும் எய்ட்ஸ் கிருமிகள் பரவுவது இல்லை. ஆடைகள், அணிகலன்கள் மூலமாகவும் இக்கிருமிகள் பரவுவது இல்லை. நோயாளியுடன் பேசுவதாலோ, தொடுவதாலோ, ஒன்றாக உறங்குவதாலோ, கை குலுக்குவதாலோ இக்கிருமிகள் பரவுவது இல்லை.
வைரஸ் கிருமி உடலில் நுழைந்த பிறகு எவ்வளவு காலம் கழித்து ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்படும்?

வைரஸ் கிருமி மனித உடலில் நுழைந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக சிடி 4 என்ற வெள்ளையணுக்களை அழித்து, உடலின் எதிர்ப்புத்திறனைக் குறைத்து விடும். எதிர்ப்புத் திறன் குன்றிய பிறகுதான் உடலில் பல்வேறு நோய்களும் ஏற்படும். தொந்தரவுகளும் உண்டாகும். இவ்வாறு ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் மனித உடலில் நுழைந்து ‘தொந்தரவுகள்’ ஏற்படுவதற்கு ஆகும் காலம் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடும். அது இந்த வைரஸ் எந்த வகையில் உடலில் நுழைந்தது என்பதைப் பொறுத்து அமையும். இரத்தம் செலுத்தியதன் மூலமாக ஒரு நபருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டால் அவருக்கு மிக விரைவில் உடல் பாதித்து பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படும். உடலுறவின் மூலமாக ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டால், அதனால் ஏற்படும் தொந்தரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலைப் பாதித்து நீண்ட காலம் கழித்துத்தான் தொந்தரவுகள் ஏற்படும். பெரும்பாலும் ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்தது முதல், தொந்தரவுகள் ஏற்படும் வரை ஆகும் காலம் சுமார் 6 மாதத்திலி ருந்து 10 வருடம் வரை கூட இருக்கும்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

‘எய்ட்ஸ்’ நோயின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. அதாவது, நோய் ஏற்பட்டவுடனே எல்லாருக்கும் தொந்தரவுகள் ஏற்ப ட்டு விடுவதில்லை. ஆரம்பத்தில் ‘எய்ட்ஸ்’ நோய் உள்ளவர்களும் ஆரோக்கியமாகவே இருப்பது போல் இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகவே உடல் பாதிப்படையத் தொடங்கும். இதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்தும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும், உடலின் எதிர்ப்புத் திறனைப் பொறுத்தும் இது வித்தியாசப்படும். மேலும், எந்த வழியில் ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டது என்பதைப் பொறுத்தும் இதன் பாதிப்பு ஏற்படும் காலம் மாறும். ஒருவருக்கு இரத்தம் செலுத்தி ‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டிருந்தால், அவருக்கு உடற்பாதிப்புகள் வேகமாக ஏற்பட்டு விடும். ஏனெனில், ‘எய்ட்ஸ்’ வைரஸ் கிருமிகள் நேரடியாக இரத்தத்தை அடைந்த பிறகு, இரத்த அணுக்களை விரைவாக பாதிப்படையச் செய்வதால், இந்நோய் இவர்களுக்கு விரைவாக ஏற்பட்டு விடும். அதே நேரம் உடலு றவினால் ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு இரத்த அணுக்கள் பாதிப்படைந்து நோய் ஏற்படத் தாமதமா கும். எப்படியிருந்தாலும், ‘எய்ட்ஸ்’ வைரஸின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். ஏற்பட கொஞ் சம் முன் பின் ஆகலாம்.

நோய் ஏற்படும் காலம் :

இவ்வாறு ஒருவருக்கு வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து ‘எய்ட்ஸ்’ ஏற்பட சுமார் 6 மாதங்கள் தொடங்கி 10 வருடங்கள் வரை கூட ஆகலாம். இந்தக் காலகட்டத்தில்தான் ‘எய்ட்ஸ்’ கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலைப் பாதிப்படையச் செய்து, இரத்த வெள்ளையணுக்களை அழித்து உடலின் எதிர்ப்புத் திறனை பெரிதும் குறைத்துவிடும். உடலின் எதிர்ப்புத் திறன் நன்கு குறையும்
போது, அந்த நபர் பல்வேறு தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகிறது. அப்போதுதான் நோயாளிக்குப் பல்வேறு நோய் அறிகுறிகளும் ஏற்படுகின்றன.

முக்கிய அறிகுறிகள் :

‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டவர்களுக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் ஏற்படும்.

1. உடலின் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும். மருத்துவப் பரிசோதனையில் சமீபகாலமாகக் குறைந்தபட்சம் நோயாளிக்கு 10% உடல் எடை குறைந்திருக்கும்.

2. நோயாளிகளுக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படும். சாதாரண வயிற்றுப் போக்கிற்கான மருந்துகளால் இது கட்டு ப்படாது. இந்தத் தொந்தரவு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும்.
3. இந்த நோயாளிகளுக்கும் பல்வேறு தொற்றுக் கிருமிகளின் பாதிப்பால் காய்ச்சல் / ஜுரம் ஏற்படும். அதுவும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் காணப்படும். சாதாரண காய்ச்சல் மருந்துகளுக்கு இக்காய்ச்சல் குறையாது. மேலும் உடலின் எதிர்ப்புத்திறன் குன்றி விடுவதால், நோயாளிகளுக்குப் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும்.
காசநோய் பாதிப்பு :

குறிப்பாக இவர்களுக்கு காசநோயின் பாதிப்பு ஏற்படும். இதனால் இவர்களது நுரையீரல் பாதிக்கப்படும். மேலும், சாதாரண மனிதர்களுக்கு ஏற்படாத காசநோயை ஒத்த பிற கிருமிகளால் கூட இவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும். மேலும், ப ல்வேறு தொற்று நோய்க் கிருமிகளால் இவர்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டு ‘நிமோனியா’ பாதிப்பும் ஏற்படும். இதன் காரணமாக இவர்களுக்கு இருமல், சளி வெளிப்படுதல், சளியில் இரத்தம் கலந்திருத்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இவர்களுக்கு பூஞ்சைக்காளான் கிருமிகளாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த நோயாளிகளுக்கு உடலின் எதிர்ப்புத் திறன் குறைவதாலும், வாய்ப்பகுதிகளின் பூஞ்சைக் காளான்களின் பாதிப்பு ஏற்படும்.

தோல் பாதிப்புகள் :

இந்த நோயாளிகளுக்கு, வைரஸ் கிருமிகளாலும், பிற நுண் கிருமிகளாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, தோலில் இவர்களுக்கு ‘அக்கி’ பாதிப்பு ஏற்படும். இது ஏற்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் இருக்கும். அக்கி ஏற்பட்ட இடத்தில் எரிச்சல், வலி இருக்கும்.
நரம்பு மண்டல பாதிப்பு :

இந்த நோயாளிகளுக்கு சில வகை புற்றுநோய்களின் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, தோலில் இணைப்புத் திசுக்களில் ஏற்படக்கூடிய, அபூர்வ புற்றுநோயான ‘சார்கோமா’ ஏற்படும். மேலும் இந்த நோயாளிகளுக்கு தோல் பாதிக்கப்பட்டு உடலெங்கும் தாங்க முடியாத ‘அரிப்பு’ ஏற்படும். உடலிலுள்ள பல்வேறு கழலைகளிலும் வீக்கமும் ஏற்படும். இந்த நோயாளிகள் பலருக்கு தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும்.
எய்ட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் :
‘எய்ட்ஸ்’ நோயை நோயாளியின் பல்வேறு உடல் பாதிப்புகளின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ளலாம் என்றாலும், இந்த நோயை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை செய்தாக வேண்டும். இதற்கான பல்வேறு இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. இந்த நோயாளிகளுக்கு சில பொதுவான இரத்தப் பரிசோதனைகளுடன், சில விசேஷ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

பொதுவான பரிசோதனைகள் :

பொதுவான பரிசோதனையில் இரத்தத்தின் மொத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வெள்ளையணுவின் தனிப்பட்ட எண்ணிக்கை, இரத்த ஹீமோகுளோபின் போன்றவைகள் செய்யப்படும். இந்த நோயாளிகளுக்குப் பொதுவாக, இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். குறிப்பாக, ‘லிம்போசைட்’ வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்திருக்கும். இத்துடன், ‘ஹீமோகுளோபினின்’ அளவும் குறைந்தே காணப்படும்.

‘எலிசா’ பரிசோதனை

‘எலிசா’ பரிசோதனையின் மூலம் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி. வைரஸ் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இது ஒரு எளிய பரிசோதனையாகும். இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு அரசாங்க மருத் துவமனைகள் மற்றும், தன்னார்வ நிறுவனங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

‘வெஸ்ட்டன் பிளாட்’ பரிசோதனை :

இவ்வாறு ‘எலிசா’வில் வந்த நபருக்கு ‘எய்ட்ஸ்’ கிருமியின் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய ‘வெஸ்ட்டன் பிளாட்’ என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இது, இந்த வைரஸிற்கு எதிராக உண்டான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனையாகும். இதன் மூலம், ஒருவருக்கு ‘எய்ட்ஸ்’ ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பி.ஸி.ஆர். பரிசோதனை :

‘எய்ட்ஸ்’ வைரஸின் பாதிப்பை அறிந்து கொள்ள மிகவும் நுட்பமான பரிசோதனையாகும் இது. இந்த ‘பி.ஸி.ஆர்.’ பரிசோதனையை, ‘பாலி மரேஸ் செயின் ரியாக்ஷன்’ என்று கூறுவார்கள். இப்பரிசோதனை மூலம், ‘எய்ட்ஸ்’ கிருமி உடலில் இருப்பதை உறுதி செய்வதுடன், எந்த அளவிற்கு இந்த வைரஸ் இரத்தத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்த வைரஸ் உடலில் உட்புகுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்பரிசோதனையின் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முடியும்.

சிடி4 ‘லிம்போசைட்ஸ்’ வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அறிதல் :
இரத்தத்தில் ‘லிம்போசைட்ஸ்’ எனப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, குறிப்பாக சிடி4 என்ற வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும். உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் உண்டாகும். சிடி4 செல்களின் எண்ணிக்கையைக் கொண்டு எய்ட்ஸ் நோயின் தன்மையையும் அறியலாம்.

24 ஆன்டிஜின் பரிசோதனை :

எய்ட்ஸ் நோயை உறுதி செய்ய 24 என்ற ஆன்டிஜின் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆன்டிஜின், எய்ட்ஸ் வைரஸின் உடலிலுள்ள முக்கிய ஆன்டிஜினாகும்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் :

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏதோ பிற நோய்களைப் போலே இந்த நோய்க்கு சிகிச்சை செய்ய முடியாது. ‘எய்ட்ஸ்’ நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதில் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மிகவும் பிரத்தியேக வழிமுறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

‘எய்ட்ஸ்’ நோய் ஏற்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மூலம் நோயை உறுதி செய்ய வேண்டும். நோயை உறுதி செய்த பிறகு, அந்த நோய் இருப்பது குறித்து நோயாளியின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நோயாளிக்கும் அவருக்கு ஏற்பட்ட நோயைக் கூற வேண்டும். இதற்காக அவர் மனதைத் தேற்றுவது மிகவும் அவசியமாகும். அவரது மனதைத் திடப்ப டுத்தினால்தான் முதலில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்பதையே அவர்களால் தாங்க முடியும். இதில் சிலர் பயத்திலேயே உயிரை விட்டு விடவும் கூடும். அது சாதாரண பயமல்ல... மரண பயம்! ஏனென்றால், ‘எய்ட்ஸ்’ வந்தால் விரைவில் சாகப் போகிறோமே என்ற பயத்திலேயே இவர்கள் வாழ்க்கை வெறுத்து, விரக்தியுடன் வாழ ஆரம்பித்து விடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிடித்தமும் இருக்காது.





உணவுகளைத் தவிர்த்து விடுவார்கள். முறையாக உறங்க மாட்டார்கள். தினமும் பயத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்வார்கள்.

எனவே தான் இப்படியொரு மோசமான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத் தை அவர்களுக்கு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

இரண்டாவது, இந் நோய்க்கு, தற்சமயம் சில மருந்துகள் உள்ளன. அதை உட்கொண்டால் உடல் நிலையில் மு ன்னேற்றம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி அவற்றை உட்கொள்ளச் சொல்ல வேண்டும். இவர்களைப் போல உள்ள பிற நோயாளிகள் சிகிச்சை பெறுவதை யும், அவர்கள் வாழக்கையைப் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதையும் இவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். இந்த நோயாளிகளுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரணமாக இருந்தால், இவர்களை வீ ட்டிலேயே வைத்துசிகிச்சை அளிக்கலாம். மிகவும் முடியாமல் வயிற் றோட்டம், காய்ச்சல் ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்ப ட்டிருந்தால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெரும்பாலும், ‘எய்ட்ஸ்’ நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. எய்ட்ஸ் நோயாளிகளை அன்புடனும், ஆதரவுடனும் கனிவான மனத்தோடும் கவனித்துக் கொள்ள அவர்கள் குடும்பத்தில் கண்டிப்பாக ஒருவராவது இருக்க வேண்டும். எய்ட்ஸ் நோயாளி தினமும் பிற நோயாளிகளைப்போல குளித்து, சுத்தமாக உடலைப் பாது காக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதனுடன் வைட்டமி ன்களும், பிற சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குப் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவை சிறந்த உணவுகளாகும்.

இந்த நோயாளியைப் போல உள்ள நோயாளியுடன் இவர்கள் இருந்தால், ஒரு நட்பும், நேசமும் ஏற்படும்; ஓரளவு விரக்தி மனப்பான்மை குறைந்து விடும். எனவே, இது போன்ற சூழ்நிலையை உருவாக்குவதும் சிறந்ததாகும். இத்துடன் இந்த நோயாளிகளுக்கு, தற்சமயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வைரஸிற்கு எதிராகச் செயல்படும் மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.

மேலும், உடலில் எதிர்ப்புத்திறன் குறைவதால் ஏற்படும் காசநோய், நிமோனியா, தோல் நோய்கள், நரம்பு பாதிப்புகள் ஆகியவற்றிற்கும் முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் :

‘எய்ட்ஸ்’ நோய்க்கு மருந்தில்லை என்று கூறிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று இந்த வைரஸிற்கு எதிராகச் செயல்படும் பல்வேறு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை மருந்துகள் முழுமையாக இந்த வைரஸை அழிப்பதில்லை என்றாலும், அவற்றின் பெருக்கத்தை ஓரளவு குறைத்து, நோய் விரைவில் தீவிரமடைந்து உடலைப் பாதிக்காமலிருக்க உதவுகின்றன.

மருந்துகளின் வகைகள் :

எய்ட்ஸிற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. ‘நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ்’ என்ற நொதியைத் தடை செய்யும் மருந்துகள்.

2. ‘நான் நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான் கிரிப்டேஸ்’ என்ற மருந்துகள்.

3. ‘புரோட்டீயேஸ்’ நொதியைத் தடை செய்யும் மருந்துகள்.

நியூக்லியேஸ் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியைத் தடை செய்யும் மருந்துகள் :

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இந்த வைரஸ் மனித உடலை அடைந்தவுடன், இரத்தத்தை அடைந்து அங்குள்ள வெள்ளை யணுக்களைத் தாக்க ஆரம்பிக்கும். இவ்வாறு வெள்ளை அணுக்களைத் தாக்குவதற்கு வைரஸிற்கு ‘ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ்’ என்ற நொதி தான் உதவுகிறது. இதன் மூலமாகத்தான் இந்த வைரஸ் வெள்ளையணுவிலுள்ள கருவின் உட்பொருளை தன் னுடைய பெருக்கத்திற்காகப் பயன்படுத்தத் தொடங்குகிறது. எனவே, இந்த நொதியைத் தடை செய்வதன் மூலம், இந்த வைரஸின் பெருக்கம் கட்டுப்படும்.

இந்த வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளில் சில :

ஸ்டோவிடீன், லேமிவிடீன், ஸ்டூவிடீன், டைடேனோசின், ஸால் ஸிட்டாபீன், அபாக்காவீர் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியை தடை செய்யாமல் செயல்படும் மருந்துகளில் முக்கியமானவை :

நெவீரப்பைன், எஃப்பாரென்ஸ், டெலாவீருடீன் ஆகியவையாகும்.

புரோட்டீயேஸ் நொதியைத் தடை செய்யும் மருந்துகளில் முக்கியமானவை :

இன்று எய்ட்ஸ் நோய்க்கு மேற்கூறிய பல்வேறு மருந்துகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அலோபதி மருத்துவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை முறையாகக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். காசநோய்க்குக் கொடுப்பது போன்றே இந்த நோய்க்கும் ஒரே ஒரு மருந்து மட்டும் கொடுத்தால் போதாது. பல மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த மருந்துகளை நீண்ட காலமாகத் தொடர்ந்தும் கொடுக்க வேண்டும். அப்போது தான், நோயின் தீவிரம் ஓரளவு கட்டுப்படும்.

எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பூசி

எய்ட்ஸ் நோயை வராமல் தடுக்க தடுப்பூசிகள் கண்டறிவதுதான் இன்றைய மருத்துவ உலகத்தின் தலையாய பணியாக உள்ள து. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து உலகின் பல்வேறு வளரும் நாடுகளிலும் நடைபெறுகின்றன. தற்சமயம் இந்த ஆராய்ச்சியில் அறிஞர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். இவர்கள் தயாரித்த சில தடுப்பூசிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரு கிறது. இருந்தாலும், முழுமையாக இந்த நோயைத் தடுக்க வல்ல தடுப்பூசிகள் இன்னும் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. விரைவில் அந்த நிலை ஏற்பட்டுவிடுமென அறிஞர்கள் நம்பிக்கை கொண்டு முயன்று வருகிறார்கள். மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். விரைவில் ‘அந்த நல்ல நாள்’ உதயமாகட்டும்!

எய்ட்ஸ் வராமல் பரவாமல் எப்படித் தடுக்கலாம்?

எய்ட்ஸ் நோயும் ஓர் உடலுறவினால் பரவும் நோய் என்பதால் பிற உடலுறவு நோய்களுக்கு செய்யும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளையே பின்பற்றுவதன் மூலமாக எய்ட்ஸ் நோயைத் தடுக்க முடியும்.
இந்த நோய், முதற் காரணமாய், பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகப் பரவுவதால் ‘உடலுறவு’ விஷயத்தில் பருவமடைந்த ஆண், பெண் இரு பாலினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சபலங்கள், சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் இ ருக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பாக எந்த ஓர் ஆணும் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. இது பெண்ணிற்கும் பொருந்தும். அதேபோலவே, திருமணத்திற்குப் பிறகு, மனைவி அல்லாது பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து விட வேண்டும். இதே நிலை பெண்களுக்கும் பொருந்தும். முறையான உடலுறவு பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளாதவர்கள் குறைந்தபட்சம் உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்தி ‘எய்ட்ஸ்’ நோய் மேலும் பரவாமலிருக்க உதவ வேண்டும்.

போதை மருந்துகளுக்கு ஆட்பட்டவர்கள் போதையின் பிடியிலிருந்து மீள வேண்டும். எந்தவொரு நோயாளியும் ஒருமுறை ஒரு நபர் பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தற்சமயம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிள £ஸ்டிக் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. இதனைப் பயன்படுத்தலாம். கண்ணாடி சிரிஞ்சுகளைப் பயன்படுத்தினால் அவற்றை ஒருவ ருக்குப் பயன்படுத்திய பிறகு முறையாக சுத்தம் செய்து, வெந்நீரில் கொதிக்க வைத்து, கிருமி நீக்கம் செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும். இதே போன்றே, அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் இதர உபகரணங்களையும் ஒரு நோயாளிக்குப் பயன்படுத்தி விட்டு மற்றவருக்குப் பயன்படுத்தும் முன்பாக, முறையாக கிருமி நீக்கம் செய்வது அவசியமாகும்.

இரத்த தானம் பெறும்போதும், சேமிக்கும் போதும், ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் போதும் இரத்தத்தை நன்கு பரிசோதனை செய்து அதில் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும். எய்ட்ஸ் மற்றும் பிற கிருமிகளின் பாதிப்புள்ள இரத்தத்தை ஏற்கக்கூடாது. எய்ட்ஸ் கிருமியின் தாக்கமில்லை என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்த பின்னரே அந்த இரத்தத்தைப் பெற வேண்டும், ஒரு நபருக்குச் செலுத்தவும் வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் அவர்களுக்கு அறுவை செய்யும் போதும், பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கும்போது, அவர்களது, சளி, விந்து, இரத்தம் ஆகியவற்றைப் பரிசோதனை செய்யும் போதும் மிகவும் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதே தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கைகளும் ஆய் வுக்கூட வல்லுநர்களுக்கும் ஆராய்ச்சி களுக்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக