பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

உங்கள் மேக்கப் சைவமா... அசைவமா?

காஸ்மெடிக் உலகின் அடுத்த ஃபேஷன் டிரெண்ட் என்ன தெரியுமா? சாதுவான நத்தை முதல் சீறும் பாம்பு வரை அனைத்து உயிரினங்களையும் உறிஞ்சி, அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பது. உங்கள் லிப்ஸ்டிக்கில் இருப்பது முயல் ரத்தம் என்றால் என்ன ஆகும்? 'உவ்வே...’ சொல்பவர்களுக்குத் தற்காலிக ஆறுதல், இந்த 'அசைவ’ அயிட்டங்கள் எல்லாம், இப்போதைக்கு வெளி நாட்டில் மட்டுமே விற்பனைக் குக் கிடைக்கும் என்பதுதான்!

இந்த அனிமல் அழகுப் பொருட்கள்பற்றி அழகுக் கலை நிபுணர் வசுந்தராவிடம் விளக் கம் கேட்டோம்.

''நம் உடம்பில் இருக்கும் கொலாஜென் (Collagen) எனப்படும் புரோட்டீனின் வீரியம் குறையும்போது, தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு தோற்றத்தில் முதுமை உண்டாகும். அந்த புரோட்டீன் குறைபாட் டைப் போக்க மாடுகளின் கழுத்துப் பகுதியில் இருந்து ஊசி மூலமாக கொலாஜெனை உறிஞ்சி எடுத்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் வெளி நாடுகளில் சகஜமாகக் கிடைக்கும். ஆனால், அப்படி எதுவும் பயன்படுத்தாமல், சத்தான உணவுகள் மற்றும் நிறையத் தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே கொலாஜென் குறைபாட்டைத் தவிர்க்கலாம். வெளி நாடுகளில் ஃபேஷன் மோகம் உச்சத்தில் இருக்கும். அதிலும் வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டுனு யோசிச்சுட்டே இருப்பாங்க. நத்தையில் இருந்து மாய்ச்சரைஸிங் க்ரீம், தழும்புகளை மறைக்கும் லோஷன் தயாரிச்சு இருக்காங்க. இப்போ பாம்பு விஷத்தில் இருந்து ஹேர் ஆயில் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கிற க்ரீம், கண்ணுக்குக் கீழே இருக்கிற கருவளையம், முகச் சுருக்கங்களைப் போக்குமாம். காரணம், பாம்பின் விஷத்தில் இருக்கும் 'சையோனேக்’ என்கிற வேதிப் பொருள். பறவைகள், பூனைகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுற க்ரீம்கள்தான் இப்போ அமெரிக்காவில் ஹிட்!'' என்கிறார் வசுந்தரா.

''விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் மூலமாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார் காஸ்மெட்டாலஜிஸ்ட் முருகுசுந்தரம்.

''பாம்பின் விஷம் முடி வளர்ச்சியைத் தூண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. பாம்பு விஷத்தால் தயாரிக்கப்பட்ட எண்ணெய், தலைச் சருமத்துக்கு உள்ளே ஊடுருவினால், அதனால் நமக்குத் தீங்குதானே தவிர, துளி நன்மையும் கிடையாது. இயற்கையான பொருட்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை செய்யும் என்பதும் தவறான நம்பிக்கை. மஞ்சள் நல்ல கிருமிநாசினிதான். ஆனால், மஞ்சள் பூசிய சருமத்தில் வெயில் படும்போது ஒருவிதக் கருமை நிறம் படரக் காரணமாக இருப்பது, மஞ்சளில் உள்ள 'ஃப்யூரோ க்ரோம்’ என்ற வேதிப் பொருள்தான்.

இயற்கையே தேவையான அளவுக்கு நமது உடலை டியூன் செய்து வைத்திருக்கிறது. அதனால், ஆரம்பத்தில் உடலை இஷ்டத்துக்குப் படுத்தியெடுத்துவிட்டு, பிறகு நிவாரணம் என்ற பெயரில் அதை மேலும் படுத்தாமல் இருந்தாலே போதும்!'' என்கிறார்.

அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே முடியாத மாடல்கள் என்ன செய்கிறார்கள்?

'கண்ணா, லட்டு திங்க ஆசையா’ விளம்பரத்தில் ஜொலிஜொலிக்கும் பூஜா சால்வி, ''ஐ லவ் காஸ்மெடிக்ஸ். நான் எப்பவும் மேக்கப் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பேன். அதனால், பியூட்டீஷியன் ஆலோசனைப்படி தரமான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துவேன். மாடலிங் தொழிலுக்கு மூலதனமே இந்த அழகுதானே!'' என்று கண் சிமிட்டுகிறார்.

'விவல்... பளிச்னு ஒரு மாற்றம்’ விளம்பரத்தில் மின்னல் அழகுடன் கவனம் ஈர்க்கும் அகன்ஷா... ஓர் இயற்கை விரும்பி!

''ஷோ, ஷூட்டிங் இருக்கும் நாட்களில் தலை முதல் கால் வரை மேக்கப் இல்லாமல் சமாளிக்கவே முடியாது. ஆனா, ஷூட்டிங் இல்லாத நாட்களில் என் சாய்ஸ் முழுக்க முழுக்க நேச்சர்தெரபிதான். என் சருமம் பளபளனு இருக்க ஒரே காரணம், 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை தண்ணீர் குடிச்சுட்டே இருக்கிறதுதான். நம்ம உதடுகள் சிரிச்சா மட்டும் பத்தாது, நம்ம தேகமும் அழகா சிரிக்கணும். அதனால், தினமும் யோகா பண்றேன். ஸ்கின் டோன் பண்ண பசும்பால் பயன்படுத்துவேன். மத்தபடி பசு கொழுப்பு, நத்தை ஆயில்... சான்ஸே இல்லப்பா!'' என்று புன்னகைக்கிறார் அகன்ஷா!

மாடு, நத்தை, பாம்பு என்று அலையாமல் கலகலனு இருங்க... லகலகனு சிரிங்க!

வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'!

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ் பழுத்துவிடும் அளவுக்கு செலவாகிறது. மூலிகை, கைவைத்தியம் என நம் முன்னோர்கள் பின்பற்றிய மருத்துவ முறைகளை மறந்துவிட்டதால்தான் சின்னச் சின்ன வியாதிகளுக்குகூட பெரிய அளவில் செலவுக்கு ஆளாகிறோம். மூலிகைகள் அரிதாகிவிட்ட காலத்தில் அவற்றை எங்கே தேடுவது என நீங்கள் கேட்கலாம். வீட்டிலேயே அவற்றை வளர்க்க வழி இருக்கிறது.

இதுகுறித்து நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையப் பேராசிரியர் சாந்தி மற்றும் உதவிபேராசிரியர் வேல்முருகன் ஆகியோரிடம் பேசினோம்.

'மூலிகைச் செடிகளைத் தொட்டியில்தான் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உடைந்த பிளாஸ்டிக் வாளி, பழைய தகர டப்பா, மரப் பெட்டி, சாக்கு, பிளாஸ்டிக் பை என்று பலவற்றையும் பயன்படுத்தி வளர்க்கலாம். இப்போது செடி வளர்ப்பதற்கு என்றே பிரத்யேகமான பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன.

இரண்டு பங்கு செம்மண் (அ) வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு எரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, செடியை நட இருக்கும் கலனில் நிரப்ப வேண்டும். இம்முறையில், ஐந்து கிலோ கலவையைத் தயார் செய்ய சுமார் 100 மட்டுமே செலவாகும். துளசிச்செடி 5, இன்சுலின் செடி 15 என செடியைப் பொறுத்து விலை மாறுபடும்.

சூரிய ஒளி படும் இடத்தில் செடியை வளர்க்க வேண்டும். ஈரப்பதம் குறையும்போது மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். கோடைகாலத்தைப் பொறுத்தவரை ஒருநாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரே ஒரு செடிக்குப் போதுமானது. தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். செடி வளர்க்கும் கலனில், தேவையற்ற தண்ணீர் வடிவதற்கு வசதியாக துவாரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.



செடி நட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு உரமிட வேண்டும். அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 20 முதல் 40 கிராம் வரை கலப்பு உரம் போடலாம். கலப்பு உரம் போட்ட ஒரு மாதத்துக்குப் பின்னர் 100 கிராம் மண்புழு உரம் போட வேண்டும். உரம் போட்டபின் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் உரமிடத் தேவையில்லை.

செடிகளில், பூச்சிகளின் பாதிப்பு இருப்பதாகத் தெரிந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு மில்லி வேப்ப எண்ணெய், இரண்டு மில்லி ஒட்டும் திரவம் (ஜிமீமீ றிணீறீ) கலந்து செடியின் மீது தெளிக்க வேண்டும். ஒட்டும் திரவம் கிடைக்காவிட்டால் காதிபவன்களில் கிடைக்கும் காதி சோப்பை புளிய விதை அளவுக்குப் பயன்படுத்தலாம்.

செடி ஓரளவு வளர்ச்சி அடைந்தபிறகு அதில் உள்ள இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம்!'' என்கிறார்கள் இருவரும்.

வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும்போது ஆஸ்பத்திரி செலவு, காத்திருப்பு என அல்லாட வேண்டியது இருக்காது. மூலிகைகளின் பயன்பாடு குறித்து சித்த மருத்துவர் அருண் சின்னையாவிடம் பேசினோம். 'சளி, இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து துளசி. இதன் இலையை நன்றாகக் கழுவி அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறெடுத்தோ, கஷாயம் வைத்தோ குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வல்லமை வாய்ந்தது மணத்தக்காளி. இதன் இலை, பழங்கள் குடல்புண் மற்றும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வல்லாரை நினைவாற்றலை மேம்படுத்தும். இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும். இந்த இலையை பச்சையாகவும் சாப்பிடலாம்; துவையல், கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

கற்றாழை உடலை இளமையாக வைத்திருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புதினாக் கீரை ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். புதினா ஜூஸ் குடித்தால், கொழுப்பு கரையும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை இரும்புச்சத்து நிறைந்தது. கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்து. நினைவுத்திறனை அதிகப் படுத்தும். இதை துவையல் செய்தோ அல்லது கஷாயம் வைத்தோ சாப்பிடலாம்.

பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பலமாகும். எலும்பு மற்றும் மூல நோய்களுக்கு நல்ல நிவாரணி பிரண்டை. இதை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரை தேகத்தைப் பொலிவாக்கும். கண்பார்வையை அதிகப்படுத்தும். பொடுதலைக் கீரை மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து!'' என்றவர், ''துவையல், குளம்பு, சட்னி என மூலிகைகளை உணவாக்கி சாப்பிடுவதன் மூலம் வியாதிகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். செலவையும் குறைக்கலாம்!'' என்றார் தீர்க்கமாக.

எளிமை நிலைத்தால்... இனிமை நிச்சயம்!

'நதியா?’ -

ஒற்றை வார்த்தை கவிதை தோன்றுகிறது நதியாவைப் பார்க்கும்போது! வசீகரப் புன்னகை, உறுத்தாமல் மிளிரும் அழகு, கூடுதலாக ஒரு இன்ச் சதைகூடப் போடாத உடல்வாகு... அப்போது எப்படிப் பார்த்தோமோ... இப்போதும் அப்படியே இருக்கிறார் நதியா!

''வயதே ஏறாமல் இருக்க வரம் வாங்கி வந்தீங்களோ?'' எனக் கேட்டால், கன்னக்குழி காட்டிச் சிரிக்கிறார். ''வரம் வாங்கி வரலை... ஆனால், பாரம்பரியம் வாங்கி வந்திருக்கேன். என் அம்மா - அப்பா இருவருமே வயசான பிறகும் ஒரிஜினல் வயசைக் கண்டுபிடிக்க முடியாத இளமையோடு இருக்காங்க. அதே பாரம்பரியம்தான் என் இளமைக்குக் காரணமா இருக்கலாம். 14, 10 வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கணவர், குழந்தை களோடு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோ ஷமாக் கழிக்கிறதும் என் பொலிவுக்குக் காரணம்!''



''உடம்பை எப்படி இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?''

''சிம்பிளான பயிற்சிகளைத் தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுலயே விளையாட்டுல எனக்கு ஆர்வம் அதிகம். காலையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் டிரெய்னிங் பண்றதோட வீட்டு வேலைகளும் எடுத்துக்கட்டி பண்ணுவேன். குடும்பத்தினரோட சந்தோஷமா பேசிச் சிரிக்கிறப்ப, ஆழ்நிலை தியானம் பண்ண மனநிறைவு கிடைக்கும். பெட்ல விழுந்த உடனேயே தூக்கம் வரணும். அப்பதான் நம்ம உடம்பு நல்ல நிலையில் இருக்குன்னு அர்த்தம். நம்ம உடம்பு சரி இல்லைன்னா, அதோட அறிகுறிகள் பசி, தூக்கம் இரண்டிலும் தெரிஞ்சிடும். அது இரண்டும் சரியா இருந்தால், நாம சரியா இருக்கோம்னு அர்த்தம்!''

''உணவு விஷயத்தில் எப்படி?''

''எந்த உணவையும் ஏத்துக்கிற உடம்பு எனக்கு. மும்பை உணவை எந்த அளவுக்கு ரசிச்சுச் சாப்பிடுவேனோ, அதே மாதிரி தென் இந்திய உணவுகளையும் சாப்பிடுவேன். இத்தாலி, ஜப்பானிய உணவுகளும் ரொம்பப் பிடிக்கும். என்னதான் சுவையாக இருந்தாலும், உடலுக்கு எவ்வளவு தேவையோ அதோட நிறுத்திக்குவேன். நிறைய சாப்பிடுறது தப்பு இல்லை. ஆனா, அதில் கிடைக்கிற சக்தி எரிக்கப்படுகிற அளவுக்கு நல்லா வேலை பார்க்கணும். உடல் உழைப்பையும் உணவு அளவையும் ஒப்பிட்டாலே, வீணாக சதை போடுவதை நிச்சயம் தடுத்துரலாம்!''



''முகப் பொலிவு, கூந்தல் மினுமினுப்பு... ரகசியம் சொல்லுங்களேன்?''

''எனக்கு இயல்பாவே ஸ்மைலி ஃபேஸ். அதனால பால்யம் மாறாத தோற்றம். மத்தபடி எந்த வயசுலயும் நம்ம முகத்தை ஒரே மாதிரி வெச்சுக்க முடியாது. அப்படி வெச்சுக்க நினைச்சு நாம தடவுற கண்ட கண்ட க்ரீம்கள் தான் முகத்தைப் பாழாக்கும். ஃபேஷியல்ங்கிற பேர்ல முகத்தை ரசாயனத்தால் நனைக்கிறோம். இயற்கைக்கு மாறான எந்த விஷயமுமே அப்போதைக்கு அழகாத் தெரியுமே தவிர, நிலைச்சு நிக்காது. சொன்னா நம்ப மாட்டீங்க, முகத்துக்குன்னு நான் பயன்படுத்துறது நல்ல தண்ணீர் மட்டும்தான். அடிக்கடி முகம் கழுவுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெயால் தலையை மசாஜ் பண்ணுவேன். ஷாம்பு, பவர்ஃபுல் ஹேர் ஆயில்னு எதுவும் பயன்படுத்த மாட்டேன்!''

''திருமணத்துக்குப் பிறகு உடலைக் கவனிக்கும் எண்ணமே பெண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?''

''குடும்பச் சூழல்தான் காரணம்! கணவர் தொடங்கி குழந்தைகள் பராமரிப்பு வரை ஒரு குடும்பப் பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலை. எத்தனை குடும்பங்களில் பெண்களுக்கு உதவியாக கணவர்கள் கைகொடுக்கிறார்கள்? சுதந்திரமாக இருந்த ஒரு பெண் வீட்டுக்குள் அடைபடும்போது, அவளுடைய உடல்வாகு மாறிவிடுகிறது. ஒரு நாளைக் குக் குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு பெண்ணும் சின்னச் சின்ன பயிற்சிகளையாவது மேற் கொள்ளணும். எப்பவும் ப்ரிஸ்க்கா இருக்கணும்னு மனசுல நினைச்சுட்டே இருக்கணும். உணவு தொடங்கி, உடை வரை நம்ம உடலை நாம முதல்ல நேசிக்கக் கத்துக்கணும்!''

''மனசை ரிலாக்ஸா வெச்சுக்க டிப்ஸ் சொல்லுங்க?''

'' 'எதுக்காக நமக்கு இந்தக் கஷ்டம்?’ ரொம்ப டென்ஷனான நேரத்தில் இந்தக் கேள்வியை மனசுக்குள் எழுப்பிப் பாருங்க. ஆபீஸ் கிளம்புற அவசரத்தில் மகளைத் திட்டி இருப்போம். ஆனா, அந்த மக நல்லா இருக்கணும்னுதானே ஆபீஸுக்கு வர்றோம்.

'நமக்குத் தேவையானதைக் கடவுள் கொடுத்திருக்கான்’னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு லேசா மாறிடும். 'போதும்’கிற வார்த்தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!''

காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி!

காது கேளாமைக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'காக்ளியர் இம்பிளான்ட்’ என்ற காது கேட்கும் செயற்கைக் கருவி இது வரை பொருத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் பேசுவது மட்டுமே கேட்கும்; சுற்றுப்புற ஒலி தெளிவாகக் கேட்காது. இப்போது இசையைக்கூட பிரித்துக் கேட்கும் அளவுக்கு இதில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கே.கே.ஆர். இ.என்.டி. மருத்துவமனையின் சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் ரவி ராமலிங்கம் பேசினார். ''பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக் காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா என்ற இடத்தில் அது எலெக்ட்ரிக்கல் சிக்னலாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்தியேகப் பகுதியில், அந்த சிக்னல் உணரப்படும். இதில் பிரச்னை இருந்தால்... காது கேளாமை ஏற்படுகிறது. பிறவியிலேயே காது கேட்கவில்லை என்றால், தானாகவே வாய் பேச முடியாமலும் போகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான், காக்ளியர் இம்பிளான்ட். இது இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. எக்ஸ்டெர்னல் பகுதியில் சவுண்ட் பிராஸசர், ஒலியை அனுப்பும் அமைப்பு, பேட்டரி போன்றவை உள்ளன. இந்த சவுண்ட் பிராஸசர்தான், வெளியில் இருந்து வரும் சப்தத்தைப் பெற்று, அதை டிஜிட்டல் சிக்னலாக மாற்றும். பின்னர் அது டிரான்ஸ்மீட்டர் வழியாக இன்டெர்னல் அமைப்புக்குச் செல்லும். ஸ்டிமுலேட்டர், காந்தம் போன்றவை அடங்கிய இன்டெர்னல் பகுதி, அறுவை சிகிச்சை செய்து காதுக்குப் பின்புறம் பொருத்தப்படும். மூளைக்குச் செல்லும் நரம்பைத் தூண்டும் ஸ்டிமுலேட்டர் என்ற கம்பி அமைப்பு, டிஜிட்டல் சிக்னலை, எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றி முளைக்கு அனுப்பி கேட்கும் திறனை செயல்படுத்துகிறது.



முந்தைய இம்பிளான்ட் கருவியில் கேட்கும் திறன் ஓரளவுக்கு மேம்பட்டதே தவிர, முழுமையானதாக இல்லை. முன்புவந்த ஸ்டிமுலேட்டர் நீளமாக இருந்தது. இப்போது சுருள் வடிவத்தில் அமைந்துள்ள இன்டெர்னல் காக்ளியரில், ஸ்டிமுலேட்டர் மிகச்சரியாக பொருந்தும்போது, கேட்கும் திறன் சிறப்பாக அமைகிறது. அதனால் இப்போது சாதாரண மனிதர்களைப் போல, பேச்சுடன் சேர்த்து சுற்றுப்புறங்களில் நிகழும் அனைத்து சப்தங்களையும் ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதன் உச்சகட்டமாக இசையைக் கூட பிரித்துக் கேட்டு ரசிக்க முடிகிறது.

சமீபத்தில் மிக மெல்லிய காக்ளியர் இம்பிளான்ட் அறிமுகமாகி உள்ளது. இதன் அகலம் 3.9 மி.மீட்டர். மற்ற இம்பிளான்ட்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கு உறுதியானது. இதில் அகற்றக்கூடிய வகையில் காந்தம் உள்ளது. இதனால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், காந்தத்தை அகற்றிக்கொள்ள முடியும். இந்த எக்ஸ்டெர்னல் அமைப்பில், இசை அல்லது தனக்கு எதிரில் உள்ளவர் பேசுவதை மட்டும் கேட்பது அல்லது ஒட்டுமொத்த சப்தத்தையும் கேட்பது என்று தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, காது மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. செவித் திறன் செம்மையாக உள்ள குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகின்றன. அது வரை மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு, அதைக் கற்று, பேசப் பயிற்சி செய்த பிறகே, பேசுகிறது. பிறவியிலேயே செவித் திறன் இல்லாத குழந்தைகளுக்கு எதுவுமே கேட்பதில்லை என்பதால், பேசுவதற்கு முயற்சிப்பதே இல்லை. குழந்தை பிறந்த உடனேயே அதற்கு காது கேட்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். பிரச்னை இருப்பது தெரிந்தால், உடனே ஆய்வு செய்து மூன்றரை வயதுக்குள் இந்த இம்பிளான்ட் பொருத்துவது நல்லது. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மூளையில் ஒலியைக் கண்டறியும் பகுதி செயல் இழக்க ஆரம்பித்துவிடும் என்பதால் குணப்படுத்த இயலாது.

சிகிச்சைக்கு வரும்போது எதனால் காது கேட்கவில்லை என்று பல சோதனைகள், ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்னரே, இம்பிளான்ட் பொருத்துவது பற்றி முடிவு செய்வோம். சில குழந்தைகளுக்கு காது மண்டல அமைப்பே சரியாக இருக்காது. அவர்களுக்கு இந்த இம்பிளான்ட் பொருத்த முடியாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு புண் ஆறியதும் எக்ஸ்டெர்னல் அமைப்பைப் பொருத்துவோம். அதன் பிறகு குறைந்தது ஓர் ஆண்டு கேட்பதற்கான பயிற்சி எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சையைக் காட்டிலும் இந்த பயிற்சிதான் அந்தக் குழந்தை கேட்கவும் பேசவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.

இன்னொரு நல்ல செய்தியும் உள்ளது. இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் பகுதிகள் இரண்டையும் காதுக்குப் பின்புறம் தோலுக்கு அடியிலேயே வைத்துப் பொருத்தும்படி புதிய இம்பிளாண்ட் விரைவில் வரஉள்ளது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிறவிக் காது கேளாமை பிரச்னை உள்ள குழந்தைகளும் நம்மைப் போலவே கேட்கும் திறனுடன் இருப்பார்கள்...'' என்றார்.

கேட்டாலே இனிக்கிறதே!

புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர் ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.

''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.

இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.

இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.

அரசு மனம் வைக்கட்டும்!

வயிற்றுவலி, குடல் புண்

குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லும் தெம்பு பெறும். மிக கடினமான மலச்சிக்கலாக இருந்தால் அஹிம்சை எனிமா கொடுக்கலாம். இரவில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணம் சாப்பிடலாம். இரவில் திராட்சை, வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்கள் முறைகளை ‘‘நோய் தீர்க்க எனிமா’’. ‘‘மலச்சிக்கலுக்கு மருந்து’’ என்ற புத்தகங்கள் மூலம் அறியவும். ஒரு சில எளிய ஆசனங்கள் செய்யலாம்.

காலையில் சூடான காபி, டீக்கு பதில் ஏதேனும் பச்சை கீரைச் சாறுகள், வெள்ளைச் சீனி சேர்க்காத பழச்சாறு அல்லது உயிரூட்டிய தானியச்சாறு (முளைக்க வைத்து) இவற்றில் ஒன்றை சாப்பிட்டு உடல் நலம் பெறலாம். மழைக்காலம் தவிர பிற காலங்களில் சூடான பானங்களைத் தவிர்க்கவும்.

சமைத்த உணவுகள் எல்லாம் அமில உணவுகள், Acid Food கார்பன்டைஆக்ஸைடு உருவாக்கும் உணவுகள். புளிக்கக் கூடிய உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை. எனவே இட்லி, தோசை, பூரி, புரோட்டா, புலால் உணவுகள் போன்ற உணவுகளை குறைத்து, சாப்பிடும் முன் கனிந்த பழங்களும், சமைக்காத காய்கறிகளும் சாப்பிட்டால் குடல் புண் அதி விரைவில் குணம் அடையும். இதில் மாயம் ஒன்றும் இல்லை.

வயிற்றுப்புண், குடல் புண்ணை குணப் படுத்தும் அற்புத உணவுகள். உணவு மாற்றம் உடனடி தேவை. கார உணவுகள். ஆக்ஸிஜன் தரும் உணவுகள், அற்புத உணவுகள் (Alkaity) மணத் தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, வெண்பூசணிச்சாறு, சோற்றுக் கற்றாழை, நெல்லி, வாழைத் தண்டு, கோஸ், காரட், அருகம்புல் சாறு, பசுங் காய்கறி கலவை, வாழைப் பழம், வெள்ளரி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சீத்தாப்பழம், பீர்க்கை, புடலை போன்ற சஞ்சீவி உணவுகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்தால் ஒரு வாரத்தில் மிகப் பெரிய மாறுதலை அடையலாம். கீரைகளை பச்சையாக சாறு எடுத்துச் சாப்பிட இயலாதவர்கள் வெந்தயத்தை முளைக்கட்டி காய வைத்த பொடி, காய வைத்த முருங்கைப் பொடி, அருகம்புல் பொடி போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காபி, டீக்கு பதில் முளைகட்டிய தானியங்களை காய வைத்து சத்துமாவு ரெடி செய்து கஞ்சி, தோசை செய்து சாப்பிடலாம். பிற இயற்கை நல உணவு வகைகள் பற்றி அறிய ‘‘பால் மனிதனின் பரிபூரண உணவா?’’ மற்றும், ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் மூலம் அறியலாம். ஒருநாள் உணவுத் திட்ட விவரம் பின் பகுதியில் தரப் படுகிறது.

பிற மருத்துவத் துறையில் நேரம் தவறாமல் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தப் படுகிறது. ஆனால் நிரந்தர உடல்நலம் நாடுபவர்கள் நன்றாகப் பசித்த பின்பு தான் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதுவரை அவ்வப்போது தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும்.

குடல் புண், வயிற்றுப்புண் வலியின் கடுமை குறையும்வரை திட உணவுகள் தவிர்த்து திரவ உணவுகளான பழச் சாறுகள், காய்கறிச் சாறுகள் போன்ற வகை உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும். கண்டிப்பாக வெள்ளை சீனி தவிர்க்க வேண்டும். தேன் அல்லது வெல்லம் தேவைப்படின் சேர்க்கலாம்.

கூடிய வரை இரவு உணவை இரவு 7 மணி அளவில் சாப்பிட்டு விட வேண்டும்.

எளிய யோகாசன பயிற்சிகள், பவன முக்தாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், நாடிசுத்தி போன்ற பயிற்சிகளை யோக ஆசிரியர் அல்லது யோகாசன புத்தகம் மூலம் தெரிந்து தினமும் சில நிமிடங்கள் செய்து வர குடல் புண் விரைவில் சரியாகும்.

வயிற்றுப்புண், குடல் புண் முற்றிய நிலையில், தேங்காய் போன்ற இயற்கை உணவுகளை இயற்கை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே சாப்பிடலாம்.

கூடிய வரை சாப்பிட்ட பின்பு குறைந்தது பதினைந்து நிமிடங்கள் கழித்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் மூளை சம்பந்தப் பட்ட வேலை அல்லது கடின உடல் உழைப்பு செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உழைப்பும் செரித்தல் வேலையும் ஒரே நேரத்தில் நடக்க இயலாது.

சாப்பிட வேண்டிய உணவுகளை அமைதி யாக அமர்ந்து நன்றாக அவசரம் இல்லாமல் மென்று உமிழ்நீர் சேர்த்து சாப்பிட வேண்டும். உமிழ்நீர் சேர்ந்த உணவுகள் இரைப்பை, குடலுக்கு நன்மை தருகின்றன. நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.

கோபமாக இருக்கும் போதும், மனம் அமைதியற்று இருக்கும் போதும் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் சாப்பிடலாம். சாந்தி ஆசனம் செய்யலாம். கோபம், குடல்புண், வயிற்றுப் புண்களை அதிகரிக்கும் அமிலத் தைச் சுரக்கச் செய்கிறது. மணத் தக்காளி, வெண்பூசணி கூட்டணி இரப்பைப் புண்ணை இல்லாமல் செய்திடும்.

குடல் புண் குணம் பெற ஒரு நாள் மாதிரி உணவுத் திட்டம்

கண்டிப்பாக கடல் உப்பு, வெள்ளைச் சீனி, மிளகாய், எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தவிர்க்க வேண்டும்.

காலை 5.30 மணி:

எழுந்தவுடன் மூன்று முதல் ஆறு டம்ளர் நீர் வரை அருந்த வேண்டும். காலையில் குடிக்கும் நீர், வயிற்றுப் புண், குடல் புண்ணை சரி செய்கிறது. பின் இயன்றால் பல் துலக்கும் சமயம் வாந்தி எடுக்கவும். கெட்ட நீர், தேவையற்ற அமிலங்கள் வெளியேறும்.

காலை 6.30 மணி:

அருகம்புல் சாறு, மணத்தக்காளி கீரைச் சாறு, நெல்லிச்சாறு, சாம்பல் பூசணிச் சாறு, வெந்தயக் கீரைச்சாறு இவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அருகம்புல் பொடி, உயிரூட்டிய வெந்தயப்பொடி இவைகளில் ஏதேனும் ஒன்று. சாறு எடுப்பதாக இருந்தால் ஒரு கைப்பிடி கீரையை எடுத்து கழுவி மிக்ஸியில் 200 மில்லி நீர் விட்டு அரை த்து வடிகட்டவும். தேவையெனில் இனிப்பும் கலக்கலாம். சப்பிச் சப்பி சாப்பிடவும், கலோரி சக்தி 30 வரை கிட்டும்.

முளைகட்டிய வெந்தயப் பொடி தயார் செய்ய, வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை வரும். வெயிலில் 5 கிராம் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு 1 ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடவும். நைந்து போன, பலம் இழந்த வயிறு, குடல் புண் மற்றும் வாய் புண்ணை ஆற்றும் சஞ்சீவி உணவு, தினமும் சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு ஒரு டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட ஒரு வாரத்தில் குடல்புண் சரியாகும்.

காலை 9.00 மணி:

வாழைப்பழம் 2, திராட்சை 50 கிராம், ஆரஞ்சு 1, பப்பாளி இரு துண்டுகள் அல்லது தேவையான அளவுகள் சாப்பிடலாம். வெள்ளரி, முட்டைகோஸ், காரட் பச்சை யாக தேவையான அளவு சாப்பிடலாம். முளை தானியங்களான கம்பு, கேழ்வரகு, கோதுமை, பச்சைப்பயறு சேர்க்கலாம். கலோரி சக்தி 200 வரை கிட்டும்.

மதியம் 1.00 மணி:

காரட், கோஸ், தக்காளி, புடலை, பீர்க்கை போன்ற காய்கறிகள் கலந்த பசுங்கலவை 200 கிராம் ஆப்பிள் 1 துண்டு, மாதுளை 50 கிராம், தர்பூசணி சிறிது, வெள்ளரி, 2 சமைத்த காய்கறிகள் 200 கிராம், ஊற வைத்த கார் அவல் 150 கிராம்.

இவைகளில் சில மற்றும் தேவையான அளவுகள் சாப்பிடலாம். முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிட லாம். அரைப்பதத்தில் உள்ள தேங்காய், வழுக்கைகள் சேர்க்கலாம். கலோரி சக்தி 500 வரை கிட்டும்.

பசுங்காய்கறி கலவை
செய்யும் முறை (1 நபருக்கு)

காரட் 50 கிராம், தக்காளி 1, பல்லாரி வெங்காயம் 1, கோஸ், பீர்க்கை, புடலை, தர்பூசணி இவைகளில் ஒன்றோ எல்லாம் சேர்ந்தோ 50 கிராம், தேங்காய்த் துருவல் 50 கிராம், எலுமிச்சைச் சாறு சிறிது, வெல்லத்தூள் சிறிது, மல்லி, கறிவேப்பிலை சிறிது, காய்கறிகளை நன்றாக கழுவி தேங்காய்த் துருவல் போல் செய்து எலுமிச்சை சாறு, வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிட்டால் எவ்வித குடல் புண்ணும் மூன்றே நாளில் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

ஜெலுசில் போன்ற ஆங்கில மருந்துகள் தேவைப்படாது. கவலை தரும் நோய் களை விரட்டும் அற்புத மருந்து வயதான வர்களும் பல் இல்லாதவர்களும் மிக்ஸியில் அரைத்துச் சாப்பிடலாம். இனிப்புக் கலந்தும் சாப்பிடலாம்.

மாலை 4.00 மணி:

தேன் கலந்த நீர், காய்கறி சூப், நெல்லி வத்தல், மணத்தக்காளி சூப், மூலிகை டீ, காரட் கீர், காயவைத்த முருங்கைப் பொடி, உயிரூட்டிய (முளைக்கட்டிய) தானிய சத்துமாவு இவைகளில் ஏதேனும் ஒன்று. முருங்கைக் கீரையை சமைத்து உண்பதால் அமில உணவாகி, கழிவு உணவாகி விடு கிறது. எனவே கீரையை பறித்து உலர்த்தி பொடி செய்து வைத்து தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டால் குடல் புண் தீரும். இது ஒரு சஞ்சீவி கீரையாகும். கீரைகளில் மனிதன் சாப்பிடக்கூடிய கீரை முருங்கைக் கீரை ஒன்றே. அதையும் சமைக்காமல் பொடி செய்து சாப்பிடும்போது அற்புத ஆற்றல் தருகிறது. சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும். ‘வெந்து கெட்டது முருங்கை’

காரட் கீர் செய்யும் முறை

காரட் துருவலை மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஆட்டி சாறு எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும். இது டிபனுக்குப் பதில் மாற்று உணவு. சத்து தரும். உடனடி சக்தியும் தெம்பும் தரும். குழந்தைகள் மிகவும் விரும்பி பிரியமாக சாப்பிடுவர். காரட் கீர் கேட்டுப் பருகுவோம்.

தேங்காய்ப் பாலுக்குப் பதில் முளை தானியப்பால் சேர்க்கலாம். இதே போல் பேரீச்சை கீர், கருவேப்பிலை கீர், கொத்த மல்லி கீர் செய்து சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும்.

இரவு 7.00 மணி:

சாப்பிடும் முன்பு ஏதேனும் கீரைப் பொடிகள். மேலும் வாழைப்பழம் 2, உயிரூட்டிய தானியங்கள் (பாசிப்பயறு) 30 கிராம், கொய்யா 1, காரட் 50 கிராம் போன்ற தேவையான அளவு, முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் சேர்க்கலாம். கலோரி சக்தி 300 வரை கிட்டும். அவல் உணவுகள் 100 கிராம் வரை சேர்க்கலாம்.

முளைக்கட்டிய உயிரூட்டிய (Sprouts) தானியங்கள் செய்முறை:

ஒரு கைப்பிடி பாசிப்பயறு 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை கிளம்பி வரும். நன்றாக கழுவி தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் கலந்து சாப்பிட லாம். இதுபோல் கேழ்வரகு, கம்பு, கோதுமை, கொண்டைக்கடலை போன்ற தானியங்கள் சாப்பிடலாம். புண்ணாகி போன குடலையும், மனதையும் விரைவில் குணமாக்கக் கூடிய சக்தி உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களுக்கு உண்டு. சாப்பிட்டு பலனைத் தெரிவியுங்கள். உப்பால் உடைந்து சிதைந்து போன குடலை சரி செய்வது உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களே. இதில் இருந்து மிக்ஸியில் அரைத்து நீர் சேர்த்து முளை தானியப் பால்கள் தயாரித்தும் சாப்பிடலாம்.

சிரஞ்சீவி உணவுகள்
இயற்கை உணவுகளே

‘உடல் நலம் மிகப் பெரிய ஊதியம்
மனநலம் மிகப் பெரிய பொக்கிஷம்’

வயிற்றுப்புண், குடல் புண்ணுக்கு தவறான அளவுக்கு மீறின அமில உணவு களும் தவறான பழக்க வழக்கங்களும் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு பற்றி அறியாமையுமே. தேவையற்ற அளவுக்கு மீறின இரசாயன மருந்து பொருட்களும் உடல் நலத்தை சீரழித்து பிற வியாதி களையும் உண்டு பண்ணுகின்றன. சமைக்காத இயற்கை உணவு களும், கனிவு தரும் கனிகளும் பல வியாதிகளை விரட்டுகிறது. அதிலும் குடல் புண், வயிற்றுப் புண்களை விரைவில் குணம் அடையச் செய்கிறது. நலமான மனிதன் ம ட்டுமே பிறர் நலம், தேவையைப் பற்றி சிந்திக்க இயலும். வியாதியுள்ள மனிதர் பிறர் நலத்தையும் அதற்கான ஆலோசனை பற்றிப் பேச தகுதியில்லாதவர்களே. ‘தன்னை காத்துக் கொள்ள தவறியவர் பிறர் நலனை எப்படி சரி செய்வர்.

வயிற்றுவலி, குடல் புண் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாட்பட்டதாக இருந்தாலும் மாதிரி ஒரு நாள் உணவு திட்டப்படி கடைப்பிடித்தால் ஒரு வாரத்தில் அற்புத கு ணம் கிட்டும். மருந்து மாத்திரை கள் தேவைப்படாது. இது உறுதி.

புரோட்டின் தோசை

புரோட்டின் தோசை

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு 1 கப்,
சுரைக்காய் 200 கிராம்,
பச்சை மிளகாய் 3,
பிரெஷ் கெட்டித் தயிர் 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
சால்ட் தேவைக்கு

ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி 2
பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் 2
பொடியாக நறுக்கிய
கொத்துமல்லி இலைகள் 2 அல்லது
3 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு தேவைக்கு ஏற்ப
கடுகு உளுந்தம் பருப்பு 1 டீஸ் ஸ்பூன்
சமையல் எண்ணெய் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

பாசிப்பருப்பை மூன்று முதல் நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்து அதனோடு பச்சை மிளகாய் மற்றும் பிரெஷ் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையோடு பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும், இப்போது புரோட்டின் தோசைக்கு மாவு தயார்.இனி ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்களைப் பார்க்கலாமா?!

ஸ்டஃபிங்க்கு:

வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிதம் செய்த பின் பொடியாக நறுக்கிய சுரைக்காய்,பொடியாக நறுக்கிய பச்சை மிள காய்,பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலைகளோடு சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை லேசாக வதக்கவும், வதங்கிய பின் அளவாக உப்பு சேர்த்து இறக்கவும். இந்தக் கலவையை புரோட்டின் தோசைக்குள் ஸ்டஃப் செய்யப் பயன் படுத்தலாம்.

அடுப்பில் தோசைக் கல்லை சூடாக்கி அதன் மீது ஒரு கரண்டி மாவுக்கலவையை மெல்லிசான தோசையாக வார்க்கவும், தோசையின் மேற்புறத்தில் முன்னரே தயாரித்து வைத்த ஸ்டஃபிங் கலவையை தேவைக்கு ஏற்ப வைத்து நிரவி விடவும்.மொறு மொறுப்பாக தோசை வெந்த பின் அப்படியே சுருட்டி எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

டேஸ்ட் டிப்ஸ்:

புரோட்டின் தோசைக்கு சிறந்த காம்பினேஷன் புதினா சட்னி. இந்த ஸ்டபிங் புரோட்டின் தோசையை புதினா சட்னியோடு பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.

ஹெல்த் வியூ:

பேரே புரோட்டின் தோசை என்றிருப்ப தால் இந்த தோசையில் புரதச் சத்து அதிகம், சுரைக்காய் சேர்ப்பதால் நார்ச் சத்தும் கிடைக்கும், தக்காளி, கொத்து மல்லி மற்றும் புதினாவில் தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக் கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விரும்பி உண்ணலாம். நோ ரெஸ் ட்ரிக்சன்ஸ்!

சாப்பிட்டவுடன் சும்மா இருக்கவும்!

‘உண்ட மயக்கம் தொண் டருக்கும் உண்டு’ என்று சொல்கிறோம். நன்றாக சாப் பிட்டவுடன் தூக்கம் கண்களை இழுத்தால் முகத்தில் தண்ணீரை அடித்துத் தூக்கத்தி லி ருந்து தப்பிக்கவும். அரைமணி நேரம் கழித்து படுக்கச் செல்லவும். அப்போது தான் நன்கு செரிக்கும்.

சாப்பிட்டவுடன் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மலச்சிக்கல் வராது என்பது அவர்கள் நம்பிக்கை. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்போ, பி ன்போதான் பழம் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட வுடன் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குள் காற்று சென்று வயிறு உப்புசத்திற்கு உள்ளாகும். சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால் செரிமான உறுப்புகளுக்கு சாப்பிட்ட வுடன் செல்ல வேண்டிய ரத்தம் கால் களுக்குச் சென்று வி டும். உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு சாப்பிட்ட வுடன் நடப்பது இடைஞ்சல் செய்யும். சாப்பிட்டவுடன் சிலர் புகைபிடிப் பார்கள். சாப்பிட்ட வுடன் புகைக்கும் ஒரு சிகரெட்டால் ஏற்படும் புற்று நோய் அபாயம் பத்து சிகரெட்டால் ஏற்படும் அபாயத்துக்குச் சமம்.

அதனால் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பதே நல்லது.

நமது கலாச்சாரத்தில் விழாக்களுக்கும் உணவுகளுக்குமா பஞ்சம்!

திருமணங்கள், பெர்த் டே பார்ட்டிகள், ஃபிரெண்ட்ஸ் கெட்டுகெதர் பார்ட்டிகள், புதுமனைப்புகு விழாக்கள், புதிதாக தொழில் துவக்க விழாக்கள் இப்படியான குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது ஆடியில் அம்மனுக்கு கூழ், வெள்ளிக்கிழமை தவறாது அம்மன் கோயில்களில் சர்க்கரைப் பொங்கல் படையல்கள், கிருத்திகைக்கு முருகனுக்கு கந்தரப்பம், பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைப்பு, அனுமன் ஜெயந்திக்கு வடை மாலைகள், புரட்டாசி ஆரம்பித்து விட்டதா பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை தவறாது புளியோதரை விநியோகம், நவராத்திரி காலங்களில் ஒன்பது நாட்களிலும் கொலு பண்டிகைகளில் விதம் விதமான நைவேத்தியங்கள் இப்படியான பக்தி விழாக்கள்;

தலைவருக்குப் பிறந்தநாள், அறுபதாம் கல்யாணம், கட்சியின் முப்பெரும் விழாக்கள், தேர்தலில் வென்ற விழாக்கள் இப்படி அரசியல் ரீதியாகவும் பல விழாக்களை ஏற்படு த்தி வைத்துக் கொண்டு நாம் எதையாவது கொண்டாடிக் கொண்டே தான் இருக்கிறோம்.

தமிழர்களான நமது கொண்டாட்டங் களில் பிரதான இடம் வகிப்பது உணவு. நமது சந்தோசத்தை, பூரண மன நிம்மதியை வெளிப்படுத்த நாம் பல விதமான உணவு வகைகளைச் செய்து நமது நண்பர் களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து நன்றியை வெளிக்காட்டிக் கொள்கிறோம். இது ஒரு விதமான ரிலாக்சேஷன்.

இப்படி படைக்கப்படும் உணவுகள் எல்லா இடங்களிலும் முழுமையாக உபயோகமாகிறதா என்பதில் எத்தனை பேருக்கு நிஜமான அக்கறை இருக்கக் கூடும் என்று தெரியவில்லை.

பெரும்பாலான திருமணங்களில் பந்தியில் இலைகளில் பரிமாறப்படும் முழு சாப்பாடு பாதிக்கும் மேல் வீணடிக்கப் படுவதை நம்மில் பலர் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். நமது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத ஆப்ரிக்க நாடுகள், போரினால் பாதிக்கப்பட்ட நாடு களிலெல்லாம் எண்ணிக்கையற்ற அளவில் பெரியவர்களும், குழந்தைகளும் உண்ண உணவில்லாமல் குடிக்கத் தண்ணீர் கிடைக் காமல் தவிக்கிறார்கள் என்பதை கண் கூடாக செய்தி சேனல்களில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அப்படி யான சூழலில் நமக்கு இங்கே பாது காப்பாக வாழும் சூழல் கிடைத்து நல்ல உணவும் கிடைக்கும்போது அவற்றை குப்பையில் கொட்டி வீணடிப்பானேன்.

இனிமேல் உங்கள் வீடுகளில் நடத்தப் படும் விழாக்கள் என்றாலும் சரி, அல்லது உங்கள் பகுதிகளில் நடத்தப்படும் அரசியல் மற்றும் ஆன்மிக விழாக்கள் என்றாலும் சரி இந்தப் புகைப்படத்தில் உள்ள 1098 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மீதமான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்ளுங்கள், நமது தேவைக்கு மிஞ்சும் உணவுப் பொருட்கள் நிஜமாகவே தேவை உள்ள குழந்தைகளின் நலன்காக்க உயிர் காக்க உதவும். இந்த ஹெல்ப் லைன் எண்கள் இந்தியப் பயன்பாட்டுக்கு மட் டுமே!

காளானின் மருத்துவ குணங்கள்

காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வேஷியா ஜெய்ஜான்டியா, போரிபோலஸ் வெர்சி கலர்ஸ், பாலிபோரஸ்; உள்ளிட்ட காளான் இனங்கள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

காளானின் மருத்துவ குணங்கள்

பாக்டீரியா நோய்கள், இன்புளுயன்ஸா காய்ச்சல், சுரப்பிகளின் வீக்கம், நரம்புக்கோளாறு, காக்காய் வலிப்பு, மூளைநோய், வலிமைக் குறைவு, தாம்பத்ய உறவுக்கு, முதுமை குறைவு, காய்ச்சல், நீரிழிவு நோய், எய்ட்ஸ், பேதி, பித்த சுரப்பி கோளாறு நோய்கள், குடல் கோளாறு, காதுவலி, மஞ்சள் காமாலை, மூட்டுவலி, நீர்க் கோர்த்தல் உள்ளிட்ட நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.

ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்கமுடியாது’

ஒருமுறை அரசவையில் கிருஷ்ண தேவராயர் அவையோரிடம் ஒரு கேள்வி கேட்டார். உலகத்திலேயே எதை அடக்குவது கடினமானது? ஒவ்வொரு வரும், மனதை அடக்குவது கடினம், நாவை அடக்குவது கடினம் என பல்வேறு விதமான கருத்துக்களை கூறினார்கள்.

கேள்வி தெனாலிராமன் பக்கம் வந்த போது, ‘ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்கமுடியாது’ என விடை பகன்றான்.

அவையில் சபை நாகரிகமில்லாமல் பதில் கூறியதற்காக உடனடியாக அவையை விட்டு வெளியேற மன்னர் கட்டளை யிட்டார்.

மறுநாள் அதிகாலையிலேயே மன்னரின் அறைக்கு வெளியே தாளிட்டார் தெனாலி ராமன். அரசர் மிகவும் தவித்துப் போன பிறகு கதவை திறந்துவிட்டார்.

இயற்கை உபாதையை மட்டுமல்ல இயற்கையை அடக்குவதும் மிகவும் கடினம் என்பதை எளிதாக புரிய வைத்தார் தெனாலி ராமன். அரசன் அவர் கூற்றை ஏற்று பரிசளித்தார்.

மருத்துவர் பவளவிழி மனோகரன் கூற்றுப்படி, சிறுநீர் என்பது பல பெரிய வியாதிகளை எளிதில் கண்டறிய உதவும் ஒரு உடல் திரவம்.

சங்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் சிறுநீரின் அளவை வைத்தும், நிறத்தைப் பார்த்தும், மணத்தை(?) நுகர்ந்தும், சுவைத் தும்(?) பல்வேறு விதமான வியாதிகளை எளிதில் கண்டறிந்தார்கள்.

இன்றும்கூட சிறுநீர் கழித்த இடத்தில் எறும்பு, ஈ, தேனீ மொய்ப்பதைக் கண்டு, சர்க்கரை வியாதியையும், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் சில சாத பருக்கைகளை ஒரு தேங்காய்த் தொட்டியில் உள்ள சிறு நீரில் போட்டு பிறகு நல்ல நீரில் கழுவிப் பார்த்து சாதத்தில் மஞ்சள் நிறம் படிந்து இருந்தால் மஞ்சள் காமாலை என்பதை யும் எளிதாக கண்டறிகின்றனர்.

சோதனைக் கூடங்களில் சிறுநீர் உள்ள சிறுபாட்டிலை மேலும், கீழுமாக அசைத்து நுரை தோன்றினால், காமாலைக்குக் காரண மான பித்தநீர், நிறமிகள் இருப்பதைக் கண் டறிகின்றனர் என உறுதிப்படுத்து கிறார் மருத்துவர் பவித்ரா விஸ்வநாதன். பழங்கால நாட்களில், மூத்திர தோஷம் என சிறுநீர் சம்பந்தமான வியாதிகளை குறிப்பதோடு, அவைகளை வாத வாஸ்ஷ், வாத குண்டலி, வாதரஷ்டீலம், மூத்தரா தீதம், மூத்திர சடரம், மூத்திரோச்சங்கம், மூத்திர சுக்லம், மூத்திர கிரந்தி, மூத்திர விட்விகாதம், மூத்திர வுஷ்ணாவாதம், மூத்திர ஷயம், மூத்திர சாதம் என பிரித்து பரி சோதனை செய்து வைத்தியம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘சாதாரண சமயங்களில் சிறுநீரைப் பற்றி கவலைப்படாத மக்கள், வலி, எரிச்சல் வந்தாலோ மிக குறைவாக போனாலோ, மிக அதிகமாக போனாலோ, சிவப்பு கலரில் போனாலோதான் அலறி அடித்துக் கொண்டு மருத்துவரிடம் வருவர்’’ என்கிறார் மருத்துவர் பிரபு.

நோயாளிகளிடம் சிறுநீர் எந்த நிறத்தில் போகிறது, எவ்வளவு போகிறது என கேட்டால், பலர் திருதிருவென விழிப் பதும், இதையெல்லாம் யாருங்க டாக்டர் பார்க்கிறார்கள் என நம்மிடம் பதில் சொல்வதும்தான் பெரும்பாலான சமயங்களில் நடக்கிறது.

ஒரு அனுபவம்மிக்க மருத்துவர், ஒரு சிறிய, நிறமில்லாத கண்ணாடி பாட்டி லில் பிடிக்கப்பட்ட சிறுநீரின் நிறத்தை வைத்தே பல வியாதிகளை சொல்லி விடுவார்.

நிறைய நீர் அருந்துபவர்களுக்கு நிற மில்லாமல் வெளியேறும் சிறுநீர், சாதார ணமாக வெளிர் மஞ்சள் அல்லது வைக் கோல் நிறத்தில் காணப்படும். வெயில் காலங்கள், போதுமான நீர் அருந்தாத வர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நீரிழப்பு காலங்களில் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

எலுமிச்சம்பழ நிறத்தில் காணப் பட்டால் மஞ்சள் காமாலை எனவும், பால் கலக்காத டீ டிக்காஷன் போல இருந்தால், சிறுநீரகத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று எனவும், அடர் பழுப்பு நிறத்தில் காணப்பட்டால் மலேரியா நோய்த் தாக்குதல் என்றும் சூடா மோனாஸ் என்ற கிருமி தாக்கியவர்களுக்கு நீல, பச்சை, மஞ்சள் நிறத்திலும், பினைல் கீ ட்டோன்யூரியா அல்காட்டனூரியா போன்ற வளர்சிதை மாற்ற நோய் உள்ளவர்களுக்கு கறுப்பு நிறத்திலும், சில மாத்திரைகளை குறிப்பாக பி. காம்ப்ளெக்ஸ் பயன்படுத்து வோருக்கு அடர்ந்த மஞ்சள் நிறத்திலும், காசநோய்க்கான மருந்து எடுத்துக் கொள் பவர்களுக்கு ஆரஞ்சு நிறத்திலும், பால் வினை நோய் உள்ளவர்களுக்கு சீழ் கலந்த நிறத்திலும், நாப்தால் கலந்த மருந்தை உண்பவர்களுக்கு பிங்க் நிறத்திலும், பார்பைரியா நோய் உள்ளவர்களுக்கு மர நிறத்திலும் சிறுநீரகக் கல், சிறுநீரக காசநோய், சிறுநீரக நோய்த் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய், மூத்திரப்பை புற்றுநோய் உள்ளவர்களுக்கு ரத்தம் கலந்தும், சிறுநீர் சிவப்பாக வெளியேறும்.

சிலவகை சல்பா மருந்து சாப்பிட்டால் உப்பு படிமம் கலந்தும், நீண்ட நாள் பால்வினை வியாதி உள்ளவர்கள் துர் நாற்றத்துடனும், சீழ் மட்டுமே சிறுநீரில் வரும்.

காரட், பீட்ரூட் போன்ற உணவு வகை களை உண்டால் அதே நிறத்திலும், பல் வகை வண்ணம் சேர்த்த மிட்டாய் சாப் பிட்டால் அந்த நிறத்திலும் சிறுநீர் வரக் கூடும். நீலக் கலரில் சிறுநீர் இருந்தால் அது அரசாங்கம் கொடுத்த மண்ணெண் ணெய் ஆக இருக்கக்கூட வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை!

புகை படிந்தாற்போல் மங்கலாக இருந் தால் சிறுநீரக நோயாக இருக்கலாம். கலங்கலாக இருப்பது, அதிகமாக புரதம் வெளியேறும். சிறுநீரக நோய்களாலோ சிறுநீர்ப்பை புற்று நோயானால் கசடு களுடன் கலந்தும் இருக்கலாம். கோலா, பாண்டா நிறத்தில் சிறுநீர் இருப்பது, சிறுநீரக வியாதிகளால் இருக்கக்கூடும். நிறமில்லாத கண்ணாடி பாட்டிலில் பிடித் தால் மட்டுமே இவைகளை எளிதாக கண்டறிய இயலும்.

எண்ணெய்ப் படிவம் சிறுநீரின் மேல் படிந்து பல வண்ண வானவில் நிறம் தெரிந்தால், ‘அதிக கொழுப்பு சிறுநீரில் வெளியேறும் நெப்ராடிக் சின்ரோம் வியாதி யாக இருக்கலாம்.

பால்போல் சிறுநீர் கழிந்தால், ‘கைலஸ்’ எனும் கொழுப்பு புரத கரைசல் சிறுநீரில் கலந்ததால் இருக்கலாம்.

நீங்களாகவே மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவீர்களா?

உலகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தாலும் திரு. தம்பிராஜன் அவர்கள் சொல்வது போல மருந்துக் கடைக்காரருக்கு தலைவலி வந்தால் ‘டீ’ சாப்பிடுவார். டீக்கடைக்காரருக்கு தலைவலி வந்தால் மாத்திரை சாப்பிடுவார். ஒரே வலி, பல்வேறு நிவாரணங்கள்.

உலகெங்கும் OTC எனப்படும் Over the Couter மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே கிடைக்கும் மாத்திரை, மருந்துகள் கிடைத்தாலும், மு ன்னேறிய நாடுகளில் அதற்கு மிகப் பெரும் கட்டுப் பாடுகள் உண்டு. நம் இந்தியாவிலும் அந்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் பெயரளவிலும், எழுத்தளவிலும் உண்டே தவிர ‘Rules are for fools’ என்பதில் நம்பிக்கை கொண்ட, சட்டத்தை மீறவே விரும்பும் ஒரு ஜனநாயக நாட்டில், நீங்கள் எந்த ஊரிலும் எந்தக் கடையிலும், எந்தவித மாத்திரையும், எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதற்கு தினசரி அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்காக தூக்க(?) மாத்திரைகள் ம ருத்துவரின் சீட்டின் அனுமதியின்றி வாங்கி தற்கொலை முயற்சி யில் ஈடுபடும் நோயாளிகளின் எண்ணிக் கையைப் பார்த்தாலே புரியும்.

நம் நாட்டைவிட மேல் நாடுகளில் மருந்துகளின் விலை சுமார் 10 மடங்கு அதிகம் என்பதாலும், மருத்துவரின் சீட்டின்றி மருந்து வாங்க இயலாது என்ப தாலும், மருத்து வரைப் பார்க்க இன்சூரன்ஸ் மற்றும் முன்பதிவு பெற்ற பிறகே பார்க்க இயலும். மற்றும் அவர் பரிந்துரை சீட்டின் மூலம்தான் சிறப்பு மருத்துவரை (34 மாத முன்பதிவுடன்) அணுகவே முடியும்.

எனவேதான் இங்கிருந்து செல்லும் போதே 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மருந்துகளை பில் மற்றும் மருத்துவர் சீட்டுடன் வாங்கி எடுத்துச் செல்பவர்கள் அநேகர்.

கடைகள்:

நம் நாட்டில் சாதாரண பெட்டிக்கடை, மளிகைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மருந்துகள் தாராளமாக கிடைக்கும் பெட்டிக்கடைகளிலேயே அனாசின், சாரிடான், பரால்கான், விக்ஸ் ஆக்ஷன் 500 என வரிசைகட்டி மாத்திரைகள் கிடைக்கும். வழக்கம்போல பில் இருக்காது, மாத்திரைகள் உதிரியாகவே கிடைப்பதால், பழைய தாகவோ, போலியானதாகவோ, தடைசெய்யப் பட்டதாகவோ, காலாவதியானதாகவோ இருக்க வாய்ப்புஉண்டு. பார்த்து, கேட்டு, கவனித்து வாங்காவிட்டால், நஷ்டம் நமக்குத்தான்!

மருந்துக் கடைகளில் இதுபோன்ற உரையாடல் சர்வ சாதாரணம்:

தம்பி ‘வயிற்றுப் போக்கு மாத்திரை கொடுங்க’. அந்த தம்பி 3 அல்லது 4வது படித்துவிட்டு 4, 5 மருந்துக் கடைகளில் கூட்டி, பெருக்கி, தன் அனுபவத்தை வைத்து பதவி உயர்வு பெற்று, டவுன் கடைகளுக்கு தினசரி போய் மருந்து வாங்கிவரும் வேலை பழகி, இப்போது சொந்தமாக(?) ஒரு மருந்துகடைக் வைத்திருப்பவராகவோ அல்லது அதற்கான நேரம் கனிந்துவரக் காத்திருப்பவராகவோ இருப்பார். இதே கேள்வியை ஒரு மருத்துவரிடம் கேட்டிருந்தால் வயிற்றில் என்ன தொந்தரவு, பசிக்கிறதா? சாப்பிடமுடிகிறதா? வாந்தி, வயிற்றுவலி இருக்கிறதா? மலம் கழிக்கும் போது, சீதம், இரத்தம், தண்ணீர் போல வருகிறதா, காய்ச்சல் இருக்கிறதா, அலர்ஜி உண்டா, கருவு ற்றிருக்கிறீர்களா? தாய்ப் பால் கொடுக்கிறீர்களா? என பல கேள்வி கேட்டு, பரிசோதித்து, மருந்து அல்லது மாத்திரை, எந்த நேரத்தில், என்ன உணவுடன் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தி, வயிற்றுப் போக்கு என்றால் அதை சரிசெய்வதற்கும் வயிற்றில் போகவேண்டும் என்றால் அதற்கான மருந்தையும், தேவைப்பட்டால், பரிசோதனை களும் செய்ய எழுதிக்கொடுப்பார்.

ஆனால் இங்கே நீங்கள் கேட்டு வாயை மூடும் முன்னர் ஒரு காக்கி கவரில் இரண்டு மூன்றுவித கலர் மாத்திரைகள் போட்டு அவற்றில் பெயர், தேதி, விலை எதுவும் இருக்காது. குத்துமதிப்பாக ஒரு ரேட் (எம்.ஆர்.பி.யைவிட 2 முதல் 5 மடங்கு ஆளுக்கு தகுந்தாற்போல்) தீட்டி விடுவார்.

டாக்டரிடம் போனாலும் இதைத் தானே தருவார். அந்த காசு மிச்சம்தானே என தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார்(?) அந்த மனிதர்.

அது உண்மையான(?) மருந்தா? போலி மருந்தா? தடைசெய்யப்பட்ட மருந்தா? எனத் தெரியவேண்டிய ஆயிரம் கேள்விகள் இருக்க, இவருக்கு தலைக்கு(?) மேலே இருக்கும் வேலையில் இதற்கு எங்கே நேரம்.

அந்தக் கடைக்கார தம்பி விரைவி லேயே ஒரு கைராசி போலி டாக்டர் ஆகவும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.

மருந்துக்கடை வைக்கணுமா?:

காலாவதி, தரமற்ற மருந்துகள், போலி மருந்துகள் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு புதிதாக மருந்துக் கடை திறக்க நிறைய(?) கட்டுப்பாடுகள் இருந்தாலும், பழைய கடைகள் லைசென்ஸ் புதுப்பிக்க, தடையேதும் இல்லை.

200 சதுர அடி கட்டிடம், ஏ.சி. மிஷின், ஒரு ஃப்ரிட்ஜ், 1 ஜெனரேட்டர்(?) ஒரு டி.ஃபார்ம் படித்தவரின் சர்ட்டிஃபிகேட் ஜெராக்ஸ் (மாதம் 1000 2000 ரூபாய்க்கு தாராளமாக கிடைக்கும்) லைசென்ஸ், மறைமுக, நேர்முக கட்டணம் எல்லாம் ஒரு 15,000 ரூபாய்க்குள் வரும். நீங்கள் தூக்க மாத்திரை, வலிப்பு, போதை(?) மாத்திரை விற்க, உணவுப் பொருட்கள்(?) விற்க, சோப்பு, ஷாம்பு, பவுடர் விற்க என ரூ.100 கட்டினால் கூடவே 1015 ரூபாய் கட்டினால் ஆயுர்வேத, சித்த மற்றும் தேவைப்பட்டால் கால்நடை மருந் துகள் விற்க அனுமதி ரெடி! மாதம் ஒருமுறை மருந்து ஆய்வாளர்கள் வந்து மருந்து இருப்பு, கணக்கு, பில், தரமற்ற போலி மருந்து, சாம்பிள் மருந்து உள்ளதா என பரிசோதனை செய்வார்களே என கவலை வேண்டாம். தமிழகத்தில் 70,000 மருந்துக் கடைக்கு சுமார் 46 ஆய்வாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களை நீங்களே போய்ப் பார்த்து(?) கையெழுத்து வாங்கி வந்தால் நீங்கள் மிகத் திறமையான மருந்துக்கடை முதலாளி. மிகச் சில பெரிய கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் ‘பார்ம ஸிஸ்ட்’ என்பவர் இருக்கமாட்டார்.

பில் கொடுக்காத ‘பில்லா’க்கள்:

எந்த மருந்தையும் பில் இன்றி விற்பது சட்ட விரோதம். பில்லில், நோயாளி பெயர், மருத்துவர் பெயர், தேதி, நேரம், மருந்துகளின் பெயர், வீரியம். தயாரித்த கம்பெனி, விலை, தயாரித்த தேதி பேட்ஜ் நம்பர், காலாவதி தேதி, தள்ளுபடி, எத்தனை மாத்திரை, என்பது போன்ற அனைத்து விவரங்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். உங்களுக்கு, தேவைப் படாத, ஒத்துக்கொள்ளாத மருந்துகளை அல்லது டாக்டர் மாற்றிக்கொடுத்த மருந்து களை பில் இருந்தால் மட்டுமே, திருப்பிக் கொடுத்து, காசை திரும்பப் பெறமுடியும்.

சென்சார் செய்யாதீர்கள்:

சமீபத்தில் ஒரு பெரிய இதய நோய் மருத்துவரின் நோயாளி ஒருவர், ஒரு மருந்துக் கடையில் மாத்திரை வாங்க வந்தார்.

இனி கடைக்காரரிடம் இவர் கேட்ட கேள்விகளும், அதற்கு கடைக்காரர் பதில் களும், நம் கருத்துக்களும் கட்டங்களுக் குள்ளே.

நோயாளி: இந்த முதல் மாத்திரை எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: பிரஷர் மாத்திரை

நோயாளி: எனக்கு பிரஷர் இல்லை, மாத்திரை வேண்டாம்.

(உண்மை: அந்த மருந்து பொதுவாக ரத்தக் கொதிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந் தாலும், இந்த நோயாளிக்கு இதயத் தசையை பலப்படுத்த கொடுக்கப்படுகிறது).

நோயாளி: இரண்டாவது மருந்து எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: ரத்தம் உறை யாமல் தடுக்க

நோயாளி: இந்த மாத்திரை சாப் பிட்டால் வயிறு எரிச்சல் வருகிறது. எனவே வேண்டாம்.

(உண்மை: இந்த மாத்திரை மறுபடி ரத்தக் குழாய் அடைபட்டு மாரடைப்பு வராமல் தடுக்கும். உயிர் காக்கும் மருந்து ஆகும்.)

நோயாளி: 3வது மாத்திரை எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: வயிறு எரிச்சல் தடுக்க...

நோயாளி: இந்த மாத்திரையும் வேண் டாம். 2ம் மாத்திரை நிறுத்தினாலே வயிறு எரிச்சல் குறைந்துவிடும். 4ம் மாத்திரை வலி வந்தால் சாப்பிடச் சொன்னால், நெஞ்சுவலி இப்போது இல்லை. அதுவும் வேண்டாம்.

அடுத்த மாத்திரை எதுக்குங்க.

மருந்துக் கடைக்காரர்: அது கொழுப்புச் சத்தைக் குறைக்க...

நோயாளி: நான் பத்தியமா சாப்பிட்டுக் கொள்கிறேன். எண்ணெய்ப் பல காரம் வேண்டாம். மாத்திரையும் வேண்டாம்.

(உண்மை: இதயக் குழாயில் ரத்தக் கொழுப்பு படிவதைத் தடுக்க, மறுபடி, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்க அவசியமான மருந்து.)

நோயாளி: அடுத்த மாத்திரை A, B, C, D, E Vit போட்டிருக்கே.

மருந்துக் கடைக்காரர்: சத்து மாத்திரை.

நோயாளி: நல்லா காய்கறி சாப்பிட் டால் அதுவும் வேண்டாம்.

(உண்மை: அது ரத்தக் குழாய்களை செப்பனிட்டு அடைப்பு, விரிசல் வராமல் இதயத்தை, மூளையைப் பாதுகாக்கும்.)

நோயாளி: அடுத்து மாத்திரை தூக்க மாத்திரை. அது போட்டால் பழகிப் போகும். வேண்டாம். அந்த பாட்டில் மருந்து எதுக்கு?

மருந்துக் கடைக்காரர்: அது மலச் சிக்கலுக்குக் கொடுப்பது.

நோயாளி: நல்ல வேளை அந்தத் தொந்தரவும் எனக்கு இல்லை.

(உண்மை: கஷ்டப்பட்டு முக்கி, முனகி போனால்கூட மாரடைப்பு திரும்ப வரும். தூக்க மாத்திரை தேவையில்லாத மன பதட்டம், டென்ஷன் படபடப்பை குறைக்க கொடுக்கப்படுவது.)

இந்த நோயாளி என்ன ஆகியிருப்பார் என்று நினைக்கிறீர்கள். ஒரு வாரத்தில் ஏறக்குறைய சொர்க்கத்தில் இருப்பார். பெரும்பாலான சமயங்களில் உண்மை யாக இந்த மருந்து எதற்காக கொடுக்கப் படுகிறது என்பதை மருத்துவர், அல்லது அவரது உதவியாளர் சொல்வார். மருந்து விலை, நிறைய மருந்து சாப்பிட பயம், அறியாமை, இவை நோயாளியை நேராக சொர்க்கத்துக்கே கொண்டுபோய் சேர்த்து விடுகிறதே!

‘‘கீரையோ கீரை’’

‘‘கீரையோ கீரை’’ என வீதிகளில் கூவி வருவோரிடம் எத்தனை எத்தனை கீரை வகைகள்! இவை மருத்துவப் பேழை. உடல்நலம் காக்கும் எளிய நல் இயற்கை மருந்து கள் ஆகும். வீதியில் விற்பதால் இவற்றை குறைத்து மதிப்பிட்டு வாங்காது, அவற்றை பயன் படுத்தாது இருந்தால் பெரும் இழப்பு நமக்குத்தான்.

முக்கியமான கீரைகளின் சிறந்த மருத்துவக் குணங்களைத் தெரிந்துகொள்வோம். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது பயன்படுத்தி உடல் நலம் காப்போம்.

அரைக்கீரை:

அரிந்து அரிந்து சேகரித்தாலும், அற்புத மாய் துளிர்த்துவரும் கீரை அரைக்கீரை. இரத்த விருத்திக்கு நல்கீரை, சரும நோய் வராது காக்கும்.

அகத்திக்கீரை:

அகஉறுப்புகளைக் காக்கும் அருமை யான கீரை அகத்திக்கீரை.

சிறுகீரை:

இரணங்களை விரைவில் குணப் படுத்தும். கண் பார்வையை அதிகரிக்கும். குண்டு உடம்பை மெலியச்செய்யும்.

ஆரைக்கீரை:

ஆரம்ப நிலை மனநோயை குணப் படுத்தும். அதிக நீர்ப்போக்கை சீராக்கும். பித்தத்தைக் குணமாக்கும் குணமுடையது.

கரிசலாங்கண்ணிக்கீரை:

பெண்களின் கூந்தல் பராமரிப்புக்கு இக்கீரைச் சாறை எண்ணெயிலிட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்துவர கருகருவென நீண்ட கூந்தல் அமையும். ஈறு, பொடுகு அழியும். கூந்தல் பளபளப்பாகத் திகழும்.

புளிச்சைக்கீரை:

உடல் வீக்கத்தை வற்றச் செய்யும். இரத்த சுத்திக்கு நல்லது. உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சி உண்டாக்கும்.

புதினாக்கீரை:

சீரண சக்தியை அதிகரிக்கும். பசிருசி ஏற்படுத்தும். புதினா கீரையை துவையல் அரைத்து, சாதத்தில் சேர்த்து சாப்பிட்டுவர இரத்த விருத்தி ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கை சீராக்கும்.

வெந்தயக்கீரை:

கைகால் மூட்டுவலியைப் போக்கும். தலைச்சுற்றைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும். சரும நோய்களைக் குணமாக்கும்.

சாரணக்கீரை:

கபத்தைக் குணப்படுத்தும்.

வயிற்று உப்புசத்தைப் போக்கும்.

அதிக இரத்தப் போக்கை சீராக்கும். இரணங்களை விரைவில் ஆற்றும்.

தூதுவளைக்கீரை:

ஆஸ்துமா நோய்க்கு அரும்

இயற்கை மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் நமச்சலைத் தணிக்கும்.

கொத்துமல்லிக்கீரை:

பித்தத்தை வேரறுக்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். பசி ருசி ஏற்படுத்தும். வாயுத் தொல்லையைப் போக்கும்.

முடக்கற்றான் கீரை:

வாதக் கோளாறுகளைக் குணப்படுத்தும். மேக வெட்டை நோய்க்கு இயற்கை மருந்து, நரம்புகளை சீராய் இயக்கும்.

பொன்னாங்கண்ணிக்கீரை:

கண் பார்வையை அதிகரிக்கும். கல்லீரல் கோளாறுகளைப் போக்கும். உடலை வலப் படுத்தும் எளிய கீரை.

முருங்கைக் கீரை:

மலச்சிக்கலை மாய்க்கும்.

இரத்த விருத்தி ஏற்படுத்தும்.

தசைச் சிதைவுகளை சீராக்கும்.

கை, கால் உளைச்சலைப் போக்கும்.

வல்லாரைக் கீரை:

ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மண்ணீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

நரம்புகளை சீராக இயக்கும்.

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய் களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டு வலிக்குக் காரணமாக அமைகின்றன.

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

நன்கு நேராக நிமிர்ந்து உட்கார, நிற்கப் பழக வேண்டும். நிற்கும் பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்ப தாலும் முதுகுத் தண்டை நிமிர்த்திய படி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும்.

‘‘ஹை ஹீல்ஸ்’’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நடக்கும்போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணி களைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப் பாக வருடத்திற்கு ஒரு முறை காலணி களை மாற்ற வேண்டும்.

எந்த வேலையையும் ஒரேயடியாகச் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்புத் தோன்றா மலிருக்க தங்களுக்குப் பிடித்த பாடல் களை இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.

வலியின் தன்மை, வலி கூடும் குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்ற வற்றை மருத்துவரிடம் செல்லும் போது தெரிவிக்க வேண்டும்.

நிம்மதியான தூக்கம், உடலை அமைதி யாகவும் தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும் போது மூட்டுகளும் தளர்வடை கின்றன. 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் க ட்டாயம் தேவை. பகல் உணவுக் குப் பின் 1020 நிமிடங்கள் ஓய்வெடுப் பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.

அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி தசைகளை வலிமைப் படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சி களை மேற்கொண்டாலே நல்ல மாற் றத்தை உணர முடியும்.

சிறுநீரக கல்லை தடுக்கும் எலுமிச்சை

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகைகள் உள்ளன. சிட்ரிக் அமிலம் இருக்கும் பழங்கள், சிட்ரஸ் பழ வகைகள் என அழைக்கப்படுகின்றன. சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை, சாத்துக்குடி யில்தான் சிட்ரஸ் அதிகமாக உள்ளது.

உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் உள்ள பலவித காரணிகளில் முதன்மைக் காரணியாக உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியத்தின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சை சாறு உதவுகிறது.

அமெரிக்காவில் சாண்டியாகோ வில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் எலுமிச்சை சாற்றை அதிக அளவில் தண்ணீருடன் கலந்து குடிப்பவர் களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேர் வதற்கான வாய்ப்புக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டும் அன்றாடம் எலுமிச்சைச் சாறு அருந்துவதன் மூலமும், சிறுநீரகக் கற்களே உருவாகாமல் முழுமை யாகத் தடுக்கலாம்.

புற்று நோயைய தடுக்க உதவும் குங்குமபூ

கல்லீரல் புற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்று நோயைக் கட்டுப் படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். எலியைக் கொண்டு சோதனை மேற் கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவு களில் கொடுத்து வந்தனர். பின்னர், செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன் (டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப் பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது. இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் என உறுதி செய்தனர்.

‘‘உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப் படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது. கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல் களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது’’ என அமீன் தெரிவித்தார்.

கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பாகப் பிறக்க குங்குமப் பூ பயன்படும் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் புற்றுநோயைத் தடுக்க உதவும் என்பது ஆச்சரியம் தரும் தகவல் போல்தான் இருக்கிறது.

குடல் அழற்சி நோய்

குடலை உருவி மாலையா போட்டுடு வேன்னு அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். குடல் என்ன பூவா? கட்டி மாலையாகப் போடன்னு நெனச்சதுண்டு. ஆனா கு டலைப் பூப்போல பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்பது சில நோய்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது புரிகிறது. குடலுக்கு வருகின்ற நோய் களுள் ஒ ன்று இந்தக் கிரோன் நோய்.

கிரோன் நோயைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உணவுப்பாதையைத் தாக்கி அதில் சிறு வீக்கத்தைத் தோற்று விக்கிறது. கிரோன் நோயானது, அதிக அளவில் சிறுகுடல் மற்றும் குடல் கார்சி னோமா ஆகியவற்றுடன் தொடர்புடையது, இதில் மலக்குடல் புற்று நோயும் அடங்கும் அதுவே கிரோன் எனப்படும். வாய் முதல் மலவாய் வரையுள்ள செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியையும் இந்த நோயானது தாக்கக் கூடும். இரைப்பை குடல் பாதை நோயின் தன்மை ஆகிய வற்றின் காரணமாகவும், திசு ஊடுருவலின் ஆழம் காரணமாகவும், ஆரம்பநிலை அறிகுறிகள் மிகவும் தெளிவற்றதாகவும், புண்சார்ந்த பெருங்குடலழற்சி என்றும் கருதப்படுகிறது. கிரோன் நோய் கொண்டவர்கள், பெரும்பாலும் திடீரென நோய் தீவிரம் அடையும் நிலையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

கிரோன் நோய் மரபு சார்ந்தது. முன்னோர் களில் எவருக்கேனும் இந்நோய் இருப்பின் ஒருவருக்கு வரலாம். அதே சமயம் சுற்றுச் சூழலே பெருமளவில் இந்நோய்க்குக் காரணமாக இருக்கும் என்பதும் நாம் அறிய வேண்டுவது. ஏனெனில் தொழில் துறையில் முன்னேறிய நாடுகளில் இந் நோய் அதிகம் இடம்பிடிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. புகை பிடிப்பவர் களுக்கு இந்நோய் வருவதற்கான காரணங் கள் மூன்று மடங்கு அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு அதிலும் 18 வயது முதல் 30 வயதுடைய வர்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.

வட அமெரிக்காவில் மட்டும் 400,000 முதல் 600,000 வரையிலான மக்களுக்குக் கிரோன் நோய் தாக்கம் காணப்படுகிறது. வடக்கு ஐரோப்பாவில், ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் 2748 நபர்கள் இருப்பதாக நோய்ப்பரவல் பகுதி கணக்கீடுகள் தெரிவிக் கின்றன. கிரோன் நோயானது, இளைஞர் களுக்கு பால் வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் இருவருக்கும் வருகிறது. ஆனாலும், நோய் எந்த வயதினருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஐம்பது முதல் எழுபது வயதிற்கு இடைப்பட்டவர் களுக்கும் இதே அளவு இந்நோய் தாக்கு கிறது என்கின்றன ஆய்வுகள்.

அறிகுறிகள்

இந்த நோய்க்கு இதுதான் அறிகுறி என்று சுட்டிக்காட்ட இயலாது. கிரோன் நோயின் ஆரம்பநிலை அறிகுறியாக அடி வயிற்றுவலி காணப்படுகிறது. இதில் தொடக்கத்தில் பேதி ஏற்படக்கூடும், குறிப்பாக இந்தப் பகுதியில் முன்னதாக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர் களுக்கு. பேதியில் இரத்தமும் கலந்திருக் கக்கூடும். ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல அறுவைசிகிச்சைகளை செய்து கொண்ட நபர்கள் பொதுவாக இரைப்பை குடல் பாதையில் குறுகிய குடல் நோய்க் குறியீட்டுக்கு ஆளாவர்கள். இதில் அமைந்துள்ள சிறுகுடல் அல்லது பெருங்குடல் பகுதி யைச் சார்ந்தே கிரோன் நோயில் ஏற்படும், இரைப்பை குடல் பாதைக்கு வெளி யேயும் பாதிப்புகளை ஏற்படுத் தக்கூடும், அதாவது தோல் தடித்தல், ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்களில் அழற்சி ஏற்படுதல் போன்ற ஏராளமான நோய் அறிகுறி களைக் கொண்டது இது.

குதத்துவாரம் அருகில் அரிப்பு அல்லது வலி வீக்கம் அல்லது வெடித்து காணப் படுவது போன்றவையும் அழற்சியின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

குழந்தைகளுக்குப் போதிய வளர்ச்சி யின்மை மற்றுமொரு அறிகுறியாகும். கிரோன் நோயைக் கொண்டுள்ள 30% குழந்தைகள் தடையுற்ற வளர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வறிக்கைக் கூறுகிறது.

கிரோன் நோயாளிகள் உணவு உண்ணா மல் இருக்கும்போது நன்றாக உணர்வார் கள், இதனால் வழக்கமான உணவூட்டம் குறைவுறும். பசியின்மை, எடையிழப்பு ஆகியவை ஏற்படும்.

இரைப்பை குடல் பாதிப்புடன், கிரோன் நோயானது, பிற உறுப்பு மண்டலங் களையும் பாதிக்கக்கூடும். கண்ணின் உட் பகுதியில் யுவெய்டிஸ் எனப்படும் அழற்சி ஏற்படுதல், கண் வலியை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக ஒளிக்கு ஆளாகும் போது (ஃபோட்டோபோபியா). கண்ணின் வெள்ளைப் பகுதியிலும் அழற்சி தோன்றக்கூடும் (ஸ்கெலெரா), இந்நிலைக்கு எபிஸ்கெலரி டிஸ் என்று பெயர். எபிஸ்கெலரிடிஸ் மற்றும் யூவெடிஸ் ஆகிய இரண்டுமே சிகிச்சை இன்றி தொடர்ந்தால் கண் பார்வை இழப்பை ஏற்படுத் தக்கூடும். கிரோன் நோயில் பெரிஆனல் தோல் குறிகளும் பொதுவாக காணப்படக்கூடும். மலம் கழித்தல் கட்டுப்படுத்தமுடி யாமையும் பெரிஆனல் கிரோன் நோயில் காணப் படக்கூடும். இரைப்பை குடல் குழாயின் எதிர் எல்லையில் உள்ள, வாயும் கூட குணப்படுத்த முடியாத புண்களால் பாதிக்கப் படலாம். அரிதாக, எஸோபாகஸ், மற்றும் வயிறு ஆகியவை யும் கிரோன் நோயில் பாதிப்படையக்கூடும். இவை விழுங்குவதில் கடினம் (dysphagia), மேல் வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவற்றைத் தோற்று விக்கிறது.

கிரோன் நோயில் தோல், ரத்தம் மற்றும் எண்டோகிரைன் அமைப்பு ஆகியவை அடங்கக்கூடும். தோல் பாதிப்பில் ஒரு வகை எரிதிமா நோடோசம் என்பதாகும், சிவப்பு நிற கட்டிகள் தோலில் ஏற்படு வதை எரிதிமா நோடோசம் என்பர். இது. சப்கியூட்டானஸ் திசுக்களில் ஏற்படும் அழற்சியின் காரணமாக ஏற்படுகிறது.

மற்றும் அது செப்டல் பன்னிகியூலிட்டிஸ் ஆல் வகைப்படுத்தப்படுகிறது. மற்றொரு தோல் நோயானது, பயோடெர்மா காங்க்ரே னோசம் என்பதாகும். இது மிகவும் வலி யுள்ள புண்ணைத் தோற்றுவிக்கும். இரத்தம் உறைவடையும் விதத்தையும் கிரோன் நோய் அதிகரிக்கிறது; காலின் அடிப்பகுதி யில் வலிமிகுந்த வீக்கம் காணப்படும்

நுரையீரல் எம்பாலிசம் காரணமாக சுவாசப்பற்றாக்குறையும் ஏற்படக்கூடும்.

கிரோன் நோயானது, நரம்பு தொடர் பான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். பொதுவாக காய்ச்சல் காணப்படும்,கிரோன் நோய் ரூமட்டாலாஜிக் நோயுடனும் தொடர்புடையது. இதனால் முழங்கால் முட்டி, தோள் பட்டை, முதுகெலும்பு, ஆகியவை பாதிக்கப்படும். வலி, வீக்கம், முட்டி மடக்க முடியாமல் போவது ஆகிய இவையும் இந்நோயின் அறிகுறி களுள் அடங்கும்.

ஆழமான இரத்த அடைப்பு காரணமாக இது ஏற்படும், அதே நேரத்தில். நோய் எதிர்ப்பு மண்டலம் இரத்த சிவப்பு அணுக் களைத் தாக்கத் தொடங்கும், சுய நோயெதிர்ப்பு ஹீமோலிட்டிக் அனீமியா, என்ற நிலை தோன்றக்கூடும், இதனால் மயக்கம், தோல் நிற மாற்றம் மற்றும் இரத்த சோகையில் பொதுவான பிற அறிகுறி களும் தோன்றக்கூ டும். விரல்களின் நுனியில் வடிவ மாற்றம் ஏற்படும் கிளப்பிங் என்பதும், கிரோன் நோயில் தோன்றக் கூடும். இறுதியாக, கிரோன் நோயானது, ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்பு மெலிவடைதலை தோற்றுவிக்கக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸைக் கொண்ட நபர் களுக்கு எலும்பு உடைவதற்கான வாய்ப்பு களும் அதிகம் கிரோன் நோயானது, நரம்பு தொடர் பான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் 15% நோயாளிகள் வரை இந்த பாதிப்பு காணப்படுகிறது இதில் பொதுவானவை தசைப்பிடிப்புகள், வாதம், பரிவு தண்டு வட நியூரோபதி, தலைவலி மற்றும் மனச் சோர்வு ஆகியவை ஆகும்.

கண்டறியும் முறை

கிரோன் நோயைக் கண்டறிவது சில நேரங்களில் மிகவும் சவாலானதாக இருக்கக் கூடும், இந்நோயைக் கண்டறிவதற்கு உதவ பல சோதனைகள் பெரும்பாலும் அவசியமாகிறது. முழுமையான சோதனை களும், கிரோன் நோய் இருப்பதை முழு தெளிவுடன் உறுதிப்படுத்துவதில்லை; ஒரு கோலன்ஸ்கோப்பி ஏறத்தாழ 70% திறனுள்ள தாக இருக்கிறது, பிற சோதனைகள் இதை விடவும் குறைவான திறனையே கொண் டுள்ளன. சிறுகுடலில் உள்ள நோய் குறிப்பாக அதிக கடினமானது, ஏனெனில் பாரம்பரியமான கோலனஸ்கோப்பி பெருங் குடல் மற்றும் சிறுகுடலின் அடிப் பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே எட்டு மாறு அமைக்கப்பட்டுள்ளது. எண்டோஸ் கோப்பிக் கண்டறிதலில் கேப்ஸ்யூல் எண்டோஸ்கோப்பி அறிமுகப்படுத்தப் பட்டது உதவிகரமாக தற்போது இருந்து வருகிறது.

எண்டோஸ்கோபி

கிரோன் நோயைக் கண்டறிவதற்கு கோலனஸ்கோபி என்பது சிறந்த சோதனை யாக இருக்கிறது, ஏனெனில் இது நேரடி யாக பெருங்குடல் மற்றும் இறுதிப்பகுதி இலியம் ஆகியவற்றின் காட்சியைக் காண் பிக்கிறது, மேலும் நோய் வளர்ச்சியின் வடிவமைப்பைக் கண்டறிய முடிகிறது. சில நேரங்களில், கோலனஸ்கோப் இறுதிப் பகுதி இலியத் தையும் தாண்டி செல்லக் கூடும், இது ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடுவதாக காணப்படுகிறது. இந்த நடைமுறையின்போது, பயாப்ஸியையும், இரைப்பை குடல் மருத்து வர் செய்ய முடியும், அதாவது சிறிய மாதிரிகளை ஆய்வக சோதனைக்காக எடுப்பது, இது நோய் கண்டறிதலுக்கு உதவக்கூடும். 30% கிரோன் நோயானது, இலியத்தில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆனாலும் இலியத்தின் இறுதிப்பகுதியில் குழாய் மூலம் பார்த்தல் நோய் கண்டறி தலுக்கு மிகவும் அவசியம்.

கதிரியக்க சோதனைகள்

சிறுகுடல் பின் தொடருதலானது, கிரோன் நோயை சுட்டிக்காட்டக்கூடும் மற்றும் நோய் சிறுகுடலில் மட்டுமே இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், கோலனஸ்கோப்பி மற்றும் கேஸ்ட்ரோஸ் கோப்பி ஆகியவை இறுதிப்பகுதி இலியம் மற்றும் டியோடினத்தின் ஆரம்பப்பகுதி ஆகிய வற்றின் நேரடி விஷுவலைசேஷனை மட்டுமே அனுமதிக்கிறது, அவற்றைப் பயன்படுத்தி சிறு குடலின் பிற பகுதிகளை மதிப்பிட முடியாது. இதனால், பேரியம் பின் தொடருதல் எக்ஸ் கதிர் பயன்படுத்தப்படு கிறது. இதில் பேரியம் சல்ஃபேட் உட்செலுத்தப் படுகிறது மற்றும் ஃப்ளூரோஸ்கோபிக் குடல் படங்கள் எடுக்கப்படுகின்றன. இவை சிறு குடலில் அழற்சி மற்றும் சுருக்கம் ஏற்பட்டுள்ளதா என்று காண்பதற்கு உதவக்கூடியது. பேரியம் எனிமாஸ் என்ற சோதனையில் பேரியமானது மலக் குடலில் உட்செலுத்தப்பட்டு, ஃப்ளூரோ ஸ்கோப்பி மூலம் குடல் படமெடுக்கப் படுகிறது, கோலனஸ்கோப்பியின் பரவலான பயன்பாட்டின் காரணமாக கிரோன் நோயின் கண்டறிதலில் அரிதாகவே பயன்படுத்தப் படுகிறது. கோலனஸ்கோப்பானது நுழைய முடியாத சிறிய துளைகளில், அமைப்பு ரீதியான மாறுபாடுகளை கண்டறிவதற்கு அவை இன்னமும் பயனுள்ளதாகவே இருக் கின்றன அல்லது பெருங்குடல் நீட்சி தோற்றத்தைக் கண்டறிய பயன்படுகின்றன.

சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் சிறு குடல் என்டரோக்லைஸில் நெறிமுறைகளை அளவிட பயன்படுகின்றன. கிரோன் நோய் களின் சிக்கல்களான சீழ் கோர்த்தல்கள், சிறுகுடல் தடை அல்லது நீட்சி உருவாக்கம் போன்றவற்றை கண்டறியவும் இவை கூடுத லாக பயன்படுகின்றன. காந்த ஒத்திசைவு படமெடுத்தல் (MRI) என்பது சிறு குடலை படமெடுப்பதற்கு மற்றும் பிற சிக்கல் களைக் கண்டறிவதற்கான மற்றொரு விருப்ப மாகும், இது மிகவும் விலையுள்ளது மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்றாலும் விரும்பக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

இரத்தப் பரிசோதனைகள்

முழுமையான இரத்த எண்ணிக்கை இரத்த சோகையைச் சுட்டிக்காட்டக் கூடும், இவை இரத்த இழப்பு அல்லது உயிர்ச் சத்துக் குறைபாடு ஆகியவற்றின் காரண மாக ஏற்படக்கூடும். இரண்டாவதாக கூறப் பட்டது, இலியிட்டஸில் காணப்படும் ஏனெனில், விட்டமின் பி ஆனது இலியத்தில் உள்ளே இழுக்கப்படுகிறது. எரித்ரோசைட் படிவடைதல் வீதம் அல்லது ESR மற்றும் சிரியாக்டிவ் புரதம் அளவீடுகள் ஆகியவையும் அழற்சியின் அளவை அளவிடு வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கக் கூடும். இந்த சிக்கலின் காரணமாக நோயாளிக்கு இலிக்டோமி செய்யப்படுகிறது. இரத்தசோகை ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் தொடர் நோயாகும், இது மைக் ரோசைடிக் மற்றும் ஹைப்போகிரோனிக் இரத்த சோகை என்று வகைப்படுத்தப் படுகிறது. இரத்தசோகை ஏற்படுவதற்கு பலவகையான காரணங்கள் இருக்கக்கூடும், அசதியோபெரின் போன்ற குடல் அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன் படும் மருந்துகள், சைடோபினியா மற்றும் சல்ஃபாசலாசைன் போன்றவற்றைத் தோற்று விக்கும், அது தவறாக உள்ளிழுக்கப்படு வதை விளைவிக்கும். சாக்காரோ மைசிஸ் செரிவிசியே ஆன்டிபாடிகள் (ASCA) மற்றும் நியூட்ரோபில் சைடோ பிளாஸ்மிக் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் (ANCA) ஆகியவற்றுக்கான சோதனைகள் குடலின் அழற்சி நோய் களைக் கண்டறிவதற்கு பயன்படுகின்றன மற்றும் இவையே கிரோன் நோயை பிற அல்சரேட்டிவ் கொலிட்டஸ் நோயிலிருந்து வேறுபடுத்தி அறியவும் உதவுகிறது. மேலும், கிஷிசிகி போன்ற சீரோலாஜிக்கல் ஆன்டிபாடி களின் அளவு அதிகரித்தல், லாமினாரி பயோசைட் எதிர்ப்பு பொருட்கள் சிட்டோ பயோசிட் எதிர்ப்பு மான்னோபயோசிட் எதிர்ப்பு லாமினாரின் எதிர்ப்பு மற்றும் சிட்டின் எதிர்ப்பு ஆகியவை தொடர்புடைய நோய்க் கூறுகளாகும் மற்றும், இவை கிரோன் நோய் முன் கண்டறிதலுக்கு உதவக்கூடும்.

கிரோனின் பெயர்க்காரணம்:

குடல் அழற்சி நோய்க்கு குரோனின் எனப் பெயர் வரக்காரணம் அமெரிக்க, இரைப்பை குடலியக்க மருத்துவர் பர்ரில் பெர்னார்டு கிரோன் என்பவரின் பெயரில் இந்நோய்க்கு பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1932ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நோயாளி களுக்கு குடலின் முடிவுப் பாதிப்பு பாதிப்பதை விவரித்தார், இது பாதிக்கும் உண வுக் குடல் பாதையின் இடத்தைப் பொறுத்தும் இது வகைப் படுத்தப் படுகிறது. இல்லியோகோலிக் கிரோன் நோய் என்பது இலியம் பகுதியையும் (சிறுகுடல் பகுதியின் இறுதி, இது பெருங்குடல் உடன் இணைப்பது) பெருங் குடலையும் பாதிக்கிறது, ஐம்பது சதவீதம் நோயாளிகள் இதனாலேயே பாதிக்கப் படுகின்றனர். இந்த கிரோன் இலி ட்டிஸ் என்பது இலியம் பகுதியை மட்டுமே பாதிக்கிறது. கிரோன் கொலிட்டிஸ் என்பது பெருங் குடலை பாதிக்கக்கூடியதாகும், இந்த காரணத்திற்காகவே, நோயானது, பகுதி வாரி இலியட்டிஸ் அல்லது பகுதி வாரி என்டெரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

கிரோனின் வகைகள்:

குறுக்கக்கூடியது, ஊடுருவக்கூடியது மற்றும் அழற்சி சார்ந்தது என்று கிரோன் நோயில் மூன்று வகைகள் பொதுவாக காணப்படுகின்றன:

‘குறுக்கக்கூடியது’ குடலின் அகலத் தைக் குறைக்கும், இதனால், குடல் அடைப்பு அல்லது மலம் கழித்தலில் சிரமம் போன்றவை ஏற்படக்கூடும்.

‘ஊடுருவல் நோய்’ குடல் மற்றும் தோல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்கு இடையே வழக்கத்திற்கு மாறான பாதை களை (ஃபிஸ்டியுல்லா) உருவாக்குகிறது.

‘அழற்சி சார்ந்த’ நோயில் குறுக்கம் அல்லது ஃபிஸ்டியுல்லா ஆகியவை தோன்றாமல் அழற்சி ஏற்படுகிறது.

இந்நோய்கள் அனைத்தும் எண்டோ ஸ்கோபி செய்வதாலே தெளிவாக அறிய முடியும்.

மருந்துகள்

கிரோன் நோயின் அறிகுறிகளுக்காக அளிக்கப்படும் மருந்துகளில், அமினோ சாலிசிலிக் அமிலம் (5ASA) மருந்துக் கலவைகள், ப்ரீடெனிசோன், நோயெதிர்ப்பு திறன் மாற்றிகளான அசாதியோபெரின், மெர்காப்டோப்யூரின், மெதோட்ர்க்ஸேட், இன்ஃப்ளக்சிமாப், அடாலிமுபாம், செர்டோலி ஜுமாப் மற்றும் நாட்லிஜுமாப் ஆகி யவை அடங்கும். கிரோன் நோயின் மிகத்தீவிர பாதிப்புகளின் போது மட்டுமே ஹைட்ரோகார்டிசோன் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஓபியேட் ஏற்பி ஆன்டாகானிஸ்ட்டான நால்ட்ரக்சோன் மருந்தின் குறைவான மருந்தளவுகள் (குறைந்த மருந்தளவு நால்ட்ரக் சோன் என்றும் அழைக்கப்படுகிறது) 67% நோயாளிகளுக்கு நோய் தணிப்பைத் தூண்டு வதற்கு உதவுவதாக கண்டறியப்பட் டுள்ளது, இதற்கான ஆய்வு பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் நடைபெற் றது. பென்சில் வேனியா மாகாண மருத்துவ பல்கலைக் கழக, இரைப்பை குடல் மருத்துவ பேராசிரியர் டாக்டர். ஜில் ஸ்மித், “கிரோன் நோயாளி களிடையே லிஞிழி சிகிச்சையானது பயனுள்ள தாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது” என்கிறார். ஸ்மித் மற்றும் அவருடைய நண்பர்களும் இணைந்து ழிமிபி மானியத் தைப் பெற்று, இரண்டாம் கட்ட மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வை நடத்தி வருகின்றனர்.

குடல் அழற்சி சார்ந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க அக்குபஞ்சர் பயன்படுத்தப் படுகிறது,

மீத்தோட்ரெக்ஸேட் என்பது ஒரு எதிர்ப்பு மருந்தாகும், இது கீமோதெரபியிலும் பயன்படுத்தப்படுகிறது. கார்டிகோஸ் டீராய்டு களைத் தொடர்ந்து உட்கொள்ள முடியாத நபர் களுக்கு நோய்த் தணிப்பைத் தக்கவைக்க இது பயன்படுத்தப்படுகிறது

மெட்ரோனிடாசோல் மற்றும் சிப்ரோ ஃப்ளோக்சாசின் ஆகியவை கிரோன் நோய்க்கு அளிக்கப்படும் ஆன்டிபயோடிக்கு கள் ஆகும், எப்படிப் பார்த்தாலும் எய்ட்ஸ் நோய் போலத்தான் கிரோன் நோயும். இந்நோயை முற்றிலும் சரியாக் கக் கூடிய மருந்துகளோ அல்லது அறுவைசிகிச்சை முறையோ இது வரை கண்டறியப் படவில்லை. மேற்கொள்ளப் படுகின்ற எல்லா சிகிச்சைகளும் அறிகுறி களைக் கட்டுப் படுத்துவது, நோயின் நிலையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருப்பது, மற்றும் நோய் முற்றிவிடாமல் தடுப்பது ஆகியவற்றுடன் முடிந்து விடுகின்றது.

இண்டக்சன் ஸ்டவ்களில்

கேஸ் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் உயரக் கூடும் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ முன்னெப்போதும் இ ல்லாமல் இப்போ தெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் மின்சார அடுப்புகள் என்று சொல்லப் படுகிற ‘இண்டக்சன் ஸ்டவ்’ விளம்பரங்கள் அதிகரித்துக் கொண்டி ருக்கின்றன. மெகா சீரியல்களுக்கு நடுவில் ‘ப்ரீத்தி இண்டக்சன் ஸ்டவ்’ விளம்பரம் பார்த்திருப்பீர்கள் தானே!

ஹெல்த் வாசகர்களுக்காக மார்க்கெட் டில் பிரபலமாக உள்ள இண்டக்சன் ஸ்டவ் பிராண்டுகள், மாடல்கள், ஸ்டவ்களை இயக்கி விதம் விதமாகச் சமைக்கத் தேவைப்படும் மின்சார யூனிட் அளவுகள், கேஸ் ஸ்டவ் வோடு ஒப்பிடும்போது இரண்டிலும் உள்ள சாதக பாதகங்கள் போன்றவற்றைப் பற்றி ஒரு சின்ன அலசலை இங்கு காண்போம்.

இந்த இண்டக்சன் ஸ்டவ்களில் அப்படி என்னவெல்லாம் ஸ்பெஷல்?

மின்சார அடுப்பு என்பதால் மாதக் கடைசியில் ‘ஐயோ எப்போது கேஸ் தீர்ந்து போகுமோ!’ என்ற பயம் இல்லாமல் சமைக்கலாம்.

இண்டக்சன் ஸ்டவ்களில் சமைக்க கனமற்ற லேசான பாத்திரங்கள் போதும். இந்தப் பாத்திரங்களில் தான் வெப்பம் ஒரே சீராகப் பரவும். மேலும் இந்தப் பாத்திரங்களை சு த்தம் செய்வதும் எளிது.

கேஸ் ஸ்டவ்களில் சமைக்கும் போது கிச்சனில் எழும் புகை, அதிகப்படி புழுக்கம் எல்லாம் இண்டக்சன் ஸ்டவ்களில் சமைக்கும் போது கிடையாது.

மேலும் மழைக்காலங்களில் நமது லிவிங் ரூம்களை சூடாக்கவும்கூட இண்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு நேர சமையலை முடிக்க ஒரு யூனிட் மின்சாரம் போதும் என்று மின்னடுப்புகள் விற்கும் பிரபலமான வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கூடங்களில் கூறப்படுகிறது.

மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள இண்டக்சன் ஸ்டவ் பிராண்டுகள்:

ப்ரீத்தி

ப்ரெஸ்டீஜ்

பட்டர்ஃபிளை

பீஜியன்

ஹேன்போ (வசந்த் அண்ட் கோ ஷோரூம் களில் கிடைக்கிறது)

இண்டக்சன் ஸ்டவ் மாடல்கள் மற்றும் விலை:

சென்னை ஷோரூம்களில் இந்த பிராண்டுகள் ஒவ்வொன்றிலும் சமைக்கும் பாத்திரங்களின் எடைக்குத் தக்க மூன்று விதமான மாடல் கள் வைத்திருக்கிறார்கள். மாடல் களுக்குத் தகுந்து விலை ரூ 2500 இல் இருந்து ரூ 4500 வரை மாறுபடுகிறது.

கேஸ் ஸ்டவ் VS இண்டக்சன் ஸ்டவ்:

நமக்கு நன்கு பழக்கமானது, கிச்சனில் புழக்கத்திற்கு எளிமையானது, விலை கட்டுப் பாட்டில் இருந்தால் கேஸ் ஸ்டவ் தான் அனைவரது ஏகோபித்த சாய்ஸ் ஆக இருக்கக் கூடும். ஆனால் அடிக்கடி உயர்ந்து கொண்டே இருக்கும் சிலிண்டர் விலைகள் மட்டுமல்லாது மழைக்காலங்களில் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பெரும் தட்டுப்பாடாக இருக்கும் கேஸ் சிலிண்டர்கள் மக்களை பெரும் அவதிக்குட்படுத்துகின்றன. அதனாலும் சிலர் இண்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத் தும் மனநிலையை அடைந்திருக்கலாம்.

கேஸ் ஸ்டவ்களில் பூரி, வடை, முறுக்கு, போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் சமைக்கும் போது எழும் அதிகப்படி புகையை பலர் விரும்புவதில்லை. இண்டக்சன் ஸ்டவ் களில் இப்படி புகை எழுவதில்லை என்பது அதன் ப்ளஸ்களில் ஒன்று.

மேலும் கேஸ் ஸ்டவ்களில் சமைக்க அடி கனமான பாத்திரங்கள் தேவைப் படுகின்றன. சமைத்து முடித்ததும் இவற்றை சுத்தப்படுத்துவது சில நேரங்களில் மனச் சோர்வைத் தரும் பெரிய வேலை. ஆனால் இண்டக்சன் ஸ்டவ்களில் எப்போதும் கனம் குறைவான லேசான பாத்திரங்களே பயன் படுத்தப்படுகின்றன என்பதால் பாத்திரங்களை சுத்தம் செய்வது வெகு எளிதானது.

கேஸ் ஸ்டவ் போலவே இண்டக்சன் ஸ்டவ்களும் பயன்படுத்த எளிதானவையே. ஆனால் மின்சாரப் பற்றாக்குறை இருப் பின் இண்டக்சன் ஸ்டவ்கள் பெரும் அவதி. மின்சாரம் இல்லாவிட்டால் இண் டக்சன் ஸ்டவ்களால் பயன் இல்லை.

பண்டிகைக் காலங்களில் விதம்வித மாய் சமைத்தால் இண்டக்சன் ஸ்டவ் உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணங் களை அதிகமாக்கும்.

இப்படி கேஸ் ஸ்டவ்வோடு ஒப்பிடும் போது கேஸ் ஸ்டவ் மற்றும் இண்டக்சன் ஸ்டவ் இரண்டிலும் சில பிளஸ் மைனஸ்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில் ‘இதில்லா விட்டால் அது; அதில்லாவிட்டால் இது’ என்ற கணக்கில் இரண்டையும் வாங்கி வைத்துக் கொண்டு சிலிண்டர் பற்றாக் குறை காலங்களில் இண்டக்சன் ஸ்டவ் களையும், மின்சாரப் பற்றாக்குறை இருக்கும் காலங்களில் கேஸ் ஸ்டவ் களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உடல் பருமனாக உள்ள இளைஞர்கள்

உடல் பருமனாக உள்ள இளைஞர்கள், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மீன் எண்ணெய் தொடர்ந்து சாப்பிடலாம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் பருமனாக உள்ளவர்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மீன் எண்ணெயின் பங்கு குறித்து ஒரு ஆய்வு நடைபெற்றது. உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குப்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.

ஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 1.5 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 16 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தத்துக்கும் உடல் பரு மனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, மீன் எண்ணெய் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை குறைந்திருந்தது. ஆனால் வெஜிடபிள் ஆயில் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை.

உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே, உடல் பருமனான இளைஞர்கள் மீன் எண்ணெய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவித்தது

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.


1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?

மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும்.

3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ, கூடவோ செய்யலாம்.

5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலை

இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிக்கக் கூடும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்

இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள் ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்

ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக் காரணங்களாக அமைகின்றன.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.

படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.

இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்

பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம் சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு அதிகரிக்கிறது.

மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை

இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள் பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.

உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

காரத்தன்மையுடைய உணவுப் பொருட்கள்

நாம் உண்ணும் உணவில் சில உணவுகள் அமிலத்தன்மை அதிக முள்ளதாகவும், சில காரத்தன்மை அதிகம் உள்ளதாகவும் உள்ளன.

இயற்கை நமக்கு இருவகையான உணவுகளையும் கொடுத்திருக்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்து நமது உமிழ்நீர், சிறுநீர், இரத்தம் ஆகியவை அமிலத்தன்மை உடையதாகவோ அல்லது காரத்தன்மை உடையதாகவோ இருக்கும்.

நாம் காரத்தன்மை 75% இருக்கும் படியும் அமிலத்தன்மை 25% இருக்கும் படியும் நமது உணவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் வயிற்றிலுள்ள ஜீரண நீர் ஹைடிரோ குளோரிக் அமிலம் பெயருக்கேற்றாற் போல அமிலத் தன்மை உடையது. இந்த அமிலத்துடன் நாம் உண்ணும் உணவானது கூழ்போல் நன்கு கடையப் பட்டுச் சிறிது சிறிதாகச் சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. இந்த உணவு அமிலத் தன்மை வாய்ந்தது.

கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலி லிருந்து பித்தநீர், சிறுகுடலிலிருந்து பல என்சைம்கள் கலந்து குடல்நீர் ஆகியவைகள் சிறுகுடலுக்கு வந்து சேருகின்றன. இந்த எல்லா ஜீரண நீர்களும் காரத்தன்மையுடையன. முன் சிறுகுடலில் (Duodeum) இந்த அமிலத்தன்மையுள்ள நீர்களும், காரத் தன்மையுள்ள நீர்களும் கலந்து நடு நிலையை அடைகின்றன. இந்த காரத் தன்மையுடைய நீர்கள் சரிவரச் சுரக்காத போது அமிலத்தன்மை அதிகரித்து குடல் புண் உண்டாகிறது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும்போது வயிற்றுப் புண் உண்டாகிறது. ஒவ்வாமை, மன அழுத்தம் ஆகிய இவைகள் நம்முடைய உடம் பில் அமிலத்தன்மையை அதிகப் படுத்துகின்றன.

இதற்குத் தீர்வு காண காரத்தன்மை உடைய உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் காரத் தன்மையுள்ள உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த றிபி சமநிலை என்பது 1 முதல் 14 எண்களுக்குள் இருக்கும். 7 என்ற எண் சமநிலையைக் குறிக்கும். 7க்கு மேல் இருந்தால் காரத்தன் மையையும், 7க்குக் குறைவாக இருந்தால் அமிலத் தன்மையையும் குறிக்கும்.

நம்முடைய உடம்பில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும்போது பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. வயிறு மற்றும் சிறுகுடலில் எரிச்சல் ஏற்பட்டு நாளடைவில் புண்கள் உண்டாகின்றன. அமிலத்தன்மை அதிகமாகும்போது, பற்கள், எலும்புகள் ஆகியவைகள் கரைய ஆரம்பிக்கின்றன. ‘‘ஆஸ்டியோ பொராஸிஸ்’’ என்ற எலும்பு களை அரிக்கும் நோய் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. நம் உடலில் காரத்தன்மை அதிகமாக இருந்தால், இதய நோய்கள், ஆர்த்ரைடிஸ், சிறு நீரகப் பித்தப்பைக் கற்கள், பற்சிதைவு, புற்றுநோய் போன்ற நோய்கள் தோன்றுவ தில்லை.

காரத்தன்மையுடைய உணவுப் பொருட்கள்:

பழங்கள் அனைத்துமே! நீங்கள் எல்லா விதப் பழங்களையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக பப்பாளிப் பழத்தை, நீங்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

எல்லாவிதமான காய்களையும் நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

கீரைகள் அனைத்துமே காரத்தன்மை உடையவை. இவைகளை நீங்கள் தவறாது உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

பழங்களில் ஆப்பிள் பழம், அத்திப் பழம், திராட்சைப் பழம், எலுமிச்சை, வாட்டர் மெலன், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம், தக்காளிப்பழம், வாழைப் பழம், பேரீச்சம்பழம் ஆகியவைகளைத் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். பழங்களை நீங்கள் வேண்டிய மட்டும் சாப்பிட்டு வாரு ங்கள்.

முட்டைக்கோசு, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், வெள்ளரி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பறங்கிக்காய், முளை விட்ட தானியங்கள், பட்டாணி, கீரை கள், காய்கள், பழச்சாறுகள் ஆகியவை களின் சாறுகள், மூலிகை டீ, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள் ஆகியவைகளைச் சாப்பி ட்டு வர வேண்டும்.

அமிலத் தன்மையுள்ள பொருட்கள்:

சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ், வால்நட், (அக்ரோட்), முந்திரி, மீன், சோயா பீன்ஸ், நூடுல்ஸ், உருளைக்கிழங்கு

உடல் பருமன்

ஒபிசிட்டி அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியதாக இருக்கும்?

லேப்ராஸ்கோபிக் முறையில் செய்யப் படும் ஒபிசிட்டி அறுவை சிகிச்சைக்காக ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும், சிகிச்சை முடித்து நார்மலாக வீடு திரும்பலாம்.

ஒபிசிட்டி சர்ஜரி செய்து கொள்வதால் தலை முடியை இழக்க நேரிடுமா?

தலைமுடி கொட்டுவதும், வலுவிழப் பதும் அறுவை சிகிச்சை முடிந்து மூன்றி லிருந்து ஐந்து மாதங்கள் வரை நீடிக்கலாம், ஆனால் அது தற்காலிகமான பிரச்னையே. சில வாரங்களில் கேச ஆரோக்கியம் இயல்பான நிலைக்கு மீண்டுவிடும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகு சிகிச்சை செய்து கொண்ட நபர் எத்தனை நாட்களுக்குப் பின் வேலைக்குச் செல்ல முடியும்?

இம்முறையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் பொதுவாக குறைந்தபட்சம் சிகிச்சை முடிந்த இரண்டு வாரங்களில் வேலைக்குத் திரும்பி விடலாம்.

ஒபிசிட்டி சர்ஜரிக்குப் பிறகு ஒருவருக்கு எத்தனை கிலோ வரை எடை குறையும் என்று எதிர்பார்க்கலாம்?

சர்ஜரி செய்து கொள்பவர்களின் உடலமைப் பையும், எடையையும் பொறுத்து இது மாறுபடும். பொதுவாக அறுவை சிகிச் சைக்குப் பின் ஒருவரது உடலில் இருக்கும் அதிகப்படி எடையில் 70% முதல் 80% வரை குறைவதற்கான வாய்ப்பு உண்டு என நம்பலாம்.

ஒபிசிட்டி சர்ஜரி செய்து கொள்ளும் பெண்களுக்கு சர்ஜரிக்குப் பிறகு கருவுறுதலில் பிரச்னை வருமா?

பெண்கள் கர்ப்பமாவதற்கு ஒபிசிட்டி சர்ஜரி தடையாய் இருப்பதில்லை. சொல்லப் போனால் சிகிச்சைக்கு முன் அந்தப் பெண் களுக்கு இருந்த தாமத கர்ப்பத்திற்கான காரணங்கள் கூட இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் சீராகி விடும். ஆனால் சர்ஜரிக்குப் பிறகு 18 முதல் 24 மாதங் களுக்கு உடல் எடை சராசரியாக நிதானத் திற்கு வரும் வரை கருவுறுதலை தள்ளிப் போடுவது நல்லது.

இந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்து அதனால் யாராவது இறந்ததாக?!

அப்படி விரும்பத்தகாத செய்திகள் எதுவும் இல்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புபவரின் உடல் நிலையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தோல்வியில் முடிய 0.5% அளவில் வெகு குறைவான வாய்ப்பு மட்டுமே உள்ளது

உபவாச சிகிச்சை

உடல் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே நோய் என்று நோய் இயல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடலை மறுபடியும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இயற்கை மருத்துவ சிகிச்சையின் நோக்கம். மற்ற சிகிச்சை முறைகளில் உள்ளது போல நோய்க்குத் தகுந் தவாறு மருந்துகள் என்று இதில் இல்லை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இதன் நோக்கம்.

இந்த முறைகளில் உபவாச சிகிச்சை தலை சிறந்தது. இயற்கை மருத்துவத்தின் மற்ற எந்த சிகிச்சையையும் விட உபவாச மும், பிராணாயாமமும் உடலை சீக்கிரம் தன் சகஜ நிலைக்குத் திருப்பி விடுகிறது. உபவாசத்தை ‘பட்டினி கிடப்பது’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள். பட்டினிக்கும் உபவாசத்திற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எல்லா பகுதியையும் உபயோகித்து விடுவ தில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியை உடல் உபயோகப்படுத்தாமல் சேமிப்பில் வைத்துக் கொள்கிறது. என்றாவது உணவு உடலுக்குக் கிட்டவில்லை என்றால் அந்த சேமிப்பு உணவை உடல் உபயோகப் படுத்திக் கொள்கிறது.

உடலில் சேமிப்பு உணவு இருக்கும் வரை நாம் உணவு கொடுக்காமல் இருந் தால் ஒன்றும் பெரிய தவறில்லை. அந்த சேமிப்பும், கரையும் பொழுது நம்மு டைய உபவாசம் தொடருமானால், அதற்கு மேல் உடல் தளர்ந்து கொண்டே வருகிறது. இந்தத் தளரும் நிலைக்கு நாம் வந்து அதற்கு மேல் உணவு அருந்தாமல் இருந்தால் தான் பட்டினி என்பதாகும்.

உடலில் இந்த சேமிப்பு உணவு இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் உணவு கொடுக்காமல் இருந்தால் உடல் தன் னுடைய பல வேலைகளைக் குறைத்துக் கொண்டு தன்னைத் தானே சுத்திகரிக்கும். பணியில் ஈடுபடுகிறது. உடலில் தேங்கி உள்ள நச்சுப் பொருட்களையும் நோய் களுக்குக் காரணமாக உள்ள உடலுக்கு ஒவ்வாத கழிவுத் தேக்கங்களையும் வெளி யேற்றுவது இந்த சுத்திகரிப்புதான்.

நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களுக்கு உண்டு. இந்த வெள்ளை அணுக்களின் முழுமையான திறன் உணவு அருந்திக் கொண்டிருக்கும் நாட்களைவிட உபவாச நாட்களில் அதி கம் வெளிப்படுகிறது.

உபவாசம் உடலுக்கு ஓய்வாக அமை கிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக் கங்களுக்கும் ஓய்வு தருகிறது. இந்த முழு ஓய்வு கிடைக்கும் பொழுது உடல் தானே சீரடைகிறது.

உபவாசத்தில் பலவகைகள் இருக்கிறது. தண்ணீர் கூட அருந்தாமல் இருந்து விடுவது நிர்ஜலோபவாசம் என்பது. இது உடல் ஆரோக்கியத்துக்காக இருப்பதை விட ஆன் மிக ஆரோக்கியத்துக்குத்தான் பின்பற்றப்படுகிறது. உடல் ரீதியில் ஏதா வது பிரச்னைகள் இருந்தால் இது அவ்வளவாக உபயோகமாக இராது.
அடுத்தது, தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். நாள் முழுவதும் 3 முதல் 4 லிட்டர் அருந்தி முழு ஓய்வு எடுப்பது. இது உடல் நோய்களைச் சீர் படுத்தவல் லது. காய்ச்சல், வயிற்றோட் டம், ஜலதோஷம், தொண்டைக் கட்டு போன்ற பல நோய்களுக்கு இது நல்ல பலன் தரும்.

நாள்பட உடலில் பிரச்னை கொடுத்து வரும் மூட்டு வலிகள், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் ஆரம்ப கால கட்டமாக உடல் சுத்திகரிப்புக்கு இது மிகவும் பலன் தரும். ஒன்று முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உடல் எந்த அளவுக்கு இடம் கொடுக் கிறதோ அந்த அளவுக்கு உபவாசம் இருக் கலாம். கொஞ்சம் மன உறுதியும், பொறு மையும் தேவைப்படும்.

அடுத்த ரக உபவாசம் எல்லோராலும் எளிதில் பின்பற்றக் கூடியதே. பழரசங் கள், இளநீர் போன்ற இயற்கையான பானங்களை மொத்தம் 2 முதல் 2லு லிட்டர் வரை கு டித்து, மேலும் 2லு லிட்டர் வரை தண்ணீர் அருந்திக் கொண்டு உபவாசம் இருத்தல். இயற்கை மருத்துவத்திற்குப் புதிதாக வரும் நோயா ளிகள் இந்த முறையைப் பின் பற்றி உடல் சுத்திகரிப்பு செய்து கொள்வர்.

உபவாசம் இருக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உபவாசம் இருப்பதற்கு முந்திய தினமே இரவு மாமிசம், மசாலா உணவுகள் எண்ணெய்ப் பதார்த்தங்கள் தவிர்க்கப் பட வேண்டும்.

எளிய உணவு உட்கொண்டு, பழங்கள் முதலானவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் உபவாசத்தன்று காலை மலச்சிக்கல் இன்றி எளிதில் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

உபவாசத்தன்று மலச்சிக்கல் ஏற்பட்டு குடலில் மலம் தேங்கியிருந்தால் அதிகமாக வாயு, உற்பத்தியாகி தலைவலி, உடல் இறுக்கம், வலிகள் போன்ற உபாதை கள் இருக்கும்.

எனிமா:

மலச்சிக்கல் இருப்பது போல் தோன்றி னால், எனிமா சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். வெளியே பிரசவ மருத்துவ மனைகளில் கொடுப்பது போல சோப்புத் தண்ணீர் எல்லாம் எனிமாவுக்குப் பயன் படுத்துவது இல்லை. சாதாரண தண்ணீரே இளம் சூட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை மருத்துவமனைகளில் சிறிய டம்ளர் எனிமா கருவியைப் பயன்படுத்துவ துண்டு. அதை உபயோகித்து ஆசனவாய் வழியாக பெருங்குடலில் ஒன்றிரண்டு டம்ளர் தண்ணீரைச் செலுத்தினால் மலத்தைக் கழுவி வெளியேற்றி விடுகிறது.

(எனிமா சிகிச்சை பற்றி இயற்கை மருத்துவர்களிடம் நேரடியாக தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்).

வயிற்றுப்பட்டி

வயிற்றில் வாயு தொந்தரவு, அதிகப் படியான பசி முதலியவை அடங்கியிருந் தால் உபவாசத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

அதற்கு ஏதுவாக வயிற்றுக்கு களிமண் பட்டிகள் காலை, மாலை, இரவு மூன்று வேளைகளிலும் போட்டுக் கொள்ள வேண்டும். அசுத்தமில்லாத இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப் பட்ட களிமண்ணை இயற்கை மருத்துவ நிலையங்களில் ஊறப்போட்டு வைத்திருப் பார்கள். சில்லென்று இருக்கும்.

இதை ஈரமான பருத்தித் துணிகளில் பொட்டலம் போல கட்டி வைப்பது மண்பட்டி. அது கிடைக்காத பட்சத்தில், சற்றே கனமான துவாலையை பானைத் தண்ணீரில் அல் லது ஐஸ்வாட்டரில் நனைத்து முக்கால் வாசித் தண்ணீரைப் பிழிந்து விட்டு மண்பட்டி போல வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

சற்றே கனமாகவும், சில்லென்றும் இருக்கும் மண்பட்டி, அல்லது ஈரத் துணிப்பட்டி உள்வயிற்றில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து பெருங்குடல், சிறு குடல் போன் றவற்றைச் சீராக இயக்குகிறது.

வயிற்றின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கினால் வாயு கட்டாமல், வயிற்று வலியோ தலைவலியோ இல்லாதிருக்கும்.

மனோநிலை:

உபவாசம் இருப்பதற்கு மனம் தயா ராக இருத்தல் அவசியம். அப்போதே பசி மட்டுப்படுகிறது. இயற்கை மருத்துவ நிலையங்களில் மருத்துவர்கள் உபவாசத் தின் நன் மைகளையும், முறைகளையும் விரிவாக எடுத்துக்கூறி ஊக்குவித்து, அதன் பின்பே நோயாளிகளை உபவாசத்தில் வைப்பர்.

அதிகம் சமையல் வாசனை வரக்கூடிய இடங்களிலும் விருந்து, கேளிக்கைகள் நடக்கக் கூடிய இடங்களிலும் மக்கள் உபவாசம் இருப்பது கஷ்டம். உபவாசம் இருக்கும் நோயாளிகளுக்கு உதவியாக வீட்டில் உள்ள மற்ற உறவினர்களும் எளிமையான உணவையே, உட்கொள்வது அவசியம். அப்போதே சூழல் தயாராகி இருக்கும்.

வீட்டில் ஒருவருக்கு அம்மை கண்டிருந் தாலும், சமையலில் யாருக்குமே தாளிப்ப தில்லை என்கிற கலாச்சாரம் நம்மிடத்தில் உண்டு தானே. அது போலத்தான் இது.

தண்ணீர் குடித்தல்:

உபவாசத்தன்று காலையிலிருந்தே தண்ணீர் குடித்துக்கொண்டு வரவேண்டும். நாள் முழுவதும் இடை இடையே அரை டம்ளர், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திக் கொண்டே வந்தால் பசியும் இல்லா திருக்கும். சுத்திகரிப்பும் சீராய் நடக்கும்.

ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று டம்ளர் தண்ணீரை ஒன்றாகக் குடித்தால் சிலருக்கு வாந்தி வருவதுபோலத் தோன்றும். அதனால் முதலிலிருந்தே கொஞ்சம், கொஞ் சமாக அருந்திக்கொண்டு வந்தால் கஷ்ட மாகத் தெரியாது.

தண்ணீர் 2லு முதல் 3லிட்டர் வரை குறைந்தபட்சம் குடிக்க வேண்டும். பழரசங்கள் 2லிட்டர் வரும். வெறும் தண்ணீர் உபவாசமானால் மொத்தம் 4 முதல் 5 லிட்டர் வரை குடித்தல் அவசியம்.

உபவாசத்தில் உடலுக்கும் உள் உறுப் புகளுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் ஆக நான்கு விதமான ஓய்வுகள் தர வேண்டும்.

உடலுக்கு ஓய்வு

அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லுதல் முதலா னவை உபவாசத்தின் பலன்களை வெகு வாகக் குறைத்துவிடும்.

எளிமையில் செரிக்கக்கூடிய பழரசங் களையே நாம் அருந்துவதால், உள் உறுப்பு களுக்கும் ஓய்வு கிட்டுகிறது. காபி, டீ, பீடி, சிகரெட், மாத்திரைகள் முதலியவை நம் உள்ளுறுப்புகளுக்குத் தரும் ஓய்வைக் குறைக்கிறது.

டி.வி., சினிமா பார்த்தல், சென்ட் உபயோகித்தல், வாசமுள்ள மலர்களைச் சூடிக் கொள்ளுதல், அருந்தும் பழரசங் களில் வாசனைப் பொருட்களைச் சேர்ப் பது, அதிகப்படியான சுவையை உண் டாக்கிக் கொள்வதோ புலன்களுக்குக் கொடுக்கும் ஓய்வைக் குறைக்கிறது.

உபவாசத்தில் நாம் செய்யக் கூடியது தியானமும், மென்மையான நாடி சுத்தி பிராணாயாமமும் மட்டும்தான். மற்றபடி ஓய்வே சிறப்பானது.

மென்மையான இசை சிறிது நேரம் கேட்கலாம். இப்படி முழு ஓய்வு அளித்து, உடலின் சுத்திகரிப்பே நோக்கமாக காத் திருத்தல் உபவாசத்தின் முக்கிய அம்சம்.

சர்க்கரை நோயாளிகள், ரத்த சோகை உள்ளவர்கள், வயிற்றில் அல்ஸர் உள்ள வர்கள் உபவாசம் இருப்பதில்லை. சில குறிப்பிட்ட நோய்களுக்கு உபவாச வகை கள் சற்றே மாறுபடும். எதுவாக இருந் தாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே உபவாசம் இருத்தல் அவசியம்.

நல்ல தூக்கம்

தூக்கம் இன்றும் மனிதனுக்குப் புரி யாத புதிராகவே இருக்கிறது. ‘அதன் காரணம் இன்னதாக இருக்கலாம்’ என் பது பற்றி பல ஊகங்கள் இருக்கின்றன. நம் உடல் நலனைக் காக்கவும், செலவிட்ட உடல் ஆற்றலைத் திரும்பப் பெறவும், உயிர் வாழவும் தூக்கம் அவசியம்.

ஓய்வும், முறையான தூக்கமும் செல விட்ட ஆற்றலை இட்டு நிரப்ப மட்டு மின்றி, நாம் சோர்வு நீங்கி உற்சாகம் பெறவும் பயன்படுகின்றன.
இதயத் துடிப்பு இருந்து வரும்வரையில் நம் உடலுக்கு முழுமையான ஓய்வு என்பது கிடைக்காது. எப்போதும் நடை பெற்றுத் தீரவேண்டிய மூச்சு, இதயத் துடிப்பு இவற்றுக்காக எந்நேரமும் உடல் ஆற்றல் செலவாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், பூரண ஓய்வுக்கு மிக நெருங்கிய நிலை, தூங்கும்போது ஏற்படுகிறது.

தூங்கும் போது நம் நாடித் துடிப்பும் மூச்சு வேகமும் மிகவும் மந்தம் அடைகின்றன.

நம் ரத்த அழுத்தமும் குறைகிறது. நம் பிரக்ஞை (உணர்வும்) மறைந்து நிற்கிறது.

ஆனால், அடி மன பிரக்ஞை (Sub cocious mid) மட்டும் தூங்குவதில்லை.

தூங்கும்போதுகூட ஒருவன் நம் பேச் சுக்குச் சில சமயம் பதில் சொல்வதற்கு இந்த அடிமன பிரக்ஞையின் விழிப்புதான் காரணம்.

நம் தூக்கத்தின் ஆழம் எப்போதும் ஒரே தரமாக இருப்பதில்லை. தூக்கம் தொடங்கிய இரண்டாவது மூன்றாவது மணி நேரங்களில் தூக்கம் ஆழ்ந்ததாக இருக்க வேண் டும். இந்த இரண்டு மணி நேரங்களில் தூக்கம் கலைந்தாலும் அதை யாராவது கலைத்தாலும் கேடு நேரும். முக்கியமாக குழந்தைகளின் விஷயத்தில் இதில் கவனம் வே ண்டும். விழிப்பு நேரம் நெருங்க நெருங்க தூக்கத்தின் ஆழம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும்.

உடம்பு, இழந்த அதன் ஆற்றலைப் பெறும் வேலை முடிந்தவுடன் விழிப்பு வந்துவிடும்.

தூக்கத்தில் முழுப் பயனையும் பெற வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்:

ஒழுங்கு முறை

தினமும் ஒரே நேரத்தில் படுக்கப்போக வேண்டும். ஒரே நேரத்தில் விழித்தெழ வேண்டும். இது முதல் விதி. இந்த நேரக் கட்டுப்பாடு குழந்தைகளுக்கு மிக அவசி யம். போதிய தூக்கமில்லாத குழந்தைகள் படபடப்பும், சிடுசிடுப்பும் உள்ளவர் களாக இருப்பார்கள். நல்ல பசி இருக் காது. இளைக்கத் தொடங்குவார்கள்.

தூக்கத்துக்கு முன் உடல், மனம் இரண்டும் சிறிது நேரமாவது ஓய்வு பெற வேண்டும். தூக்கத்துக்கு முன் எது பற்றியாவது உணர்ச்சி வசப்பட நேர்ந்திருந்தால், இந்த ஓய்வு மிக மிக அவசியம்.

நல்ல காற்றோட்டமான பகுதியில் சற்று உலாவுவது இந்த ஓய்வைப் பெற உதவும். சிலர் விஷயத்தில், இளஞ்சூடான பானம் அருந்துவது இதற்கு உதவும்.

தூக்கமின்மை (Insomnia) என்பது உண்மை யில் ஒரு நோய் அல்ல; வேறு ஒரு நோய் காரணமாக இது ஏற்படுவதும் எப்போதாவது தான். கவலை அல்லது மனக்கிளர்ச்சியே தூக்கம் கெடுவதன் அடிப்படைக் காரணம் என்பது கவனித்தால் விளங்கும்.

தூக்கம் போவதற்கு ஒரு மணி நேரம் முன்பாவது மனக் கிளர்ச்சிகள் பற்றிய காரணத்தை ஆராய்ந்து ஆறுதல் பெற முயல வேண்டும். கோபம், தூக்கம், பயம் இவை தூக்கத்தைத் கெடுத்துவிடும்.

மிகச் சிறு நிகழ்ச்சிகள் கூட குழந்தை களிடம் இந்த உணர்ச்சிகளை உண்டாக்கி விடும்.

இருட்டைக் கண்டு பயப்படும் குழந்தைக்கு ஆறுதல் தர, கூடத்து விளக்கின் ஒரு கிரணம் குழந்தையின் படுக்கை அறையில் விழும்படி அமைப்பது அதற்குத் தைரிய மூ ட்டும். அதன் பயத்தைப் போக்கி விடும். நமக்குத் துணை இருக்கிறது என்ற தைரியம் குழந்தைக்கு இந்த சிறு சாதனத்தால் உண்டாகும்.

படுக்கை அறையைக் கவனமாகத் தயாரிப்பது அவசியம். பிரகாசமான வெளிச்சம் கண்ணுக்கும், நரம்புகளுக்கும் எரிச்சல் ஊட்டும். எனவே, பிரகாசமான வெளிச்சம் தரும் விளக்குகளை ‘லைட் ஷேடு’களால் மங்கச் செய்யவேண்டும். படுக்கை விரிப்புகள் சில்லென்று இல்லாமல் கதகதப்பாக இருக்கவேண்டும். அவை மிக கனமாக இ ருக்கக்கூடாது. மிக இறுக்கமாக, படுக்கையோடு இணைத்து செருகியிருக்கக்கூடாது. உடல்நலத்துக்கு தூய காற்று அவசியம். எனவே, ஜன்னல் களைக் கொஞ்சமாவது திறந்து வைத் திருக்க வேண்டும்.

தூங்கப் போகும்முன் வயிறு நிரம்ப உண்ணக்கூடாது. மிதமான உணவே இரவில் பலருக்குப் போதும்.

தூக்கத்தின் அளவு

நம் தூக்க நேர அளவு என்ன? இது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்ப தில்லை. நபருக்கு நபர் வேறுபடுகிறது. என்றாலும், வயது வந்த ஒருவர் ஒரு நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் கழிக்கவேண்டும். அதாவது, சுமாராக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். குழந்தைகள் இன்னும் அதிக நேரம் தூங்குவது அவசியம்.

கீழ்க்காணும் அட்டவணையில் உடல்நலத்துக்கு அவசியமான சராசரி தூக்க அளவைக் காண்க:

வயது தூக்க நேரம்

1 ஆண்டு 14-16 மணி
2-3 ஆண்டு 12-14 மணி
4-5 ஆண்டு 10-12 மணி
6-10 ஆண்டு 10-11 மணி
11-16 ஆண்டு 9-10 மணி

யாருக்கேனும் இங்கே குறிப்பிட்டுள்ள அளவுக்கு குறைவாகத் தூங்கி எழுந் திருக்கும்போது சோர்வில்லாமல் உற்சாக மாக இருந்தால், அவர் அந்த அளவு தூக்கமே தமக்குப் போதும் என்று வைத்துக் கொள்ளலாம்.

தூக்கத்தையொட்டிய பழக்கங்கள்

கால ஒழுங்கு வேண்டும். தூங்கப் போகும்முன் மனமும், உடலும் ஓய்வாக இருக்கவேண்டும். கவலை கூடாது.

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத் துக்கு முன்பே மனக் கிளர்ச்சிகளை ஆற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து நம் உடலில் ஏதாவது வலியோ, வேதனையோ எங்காவது இருந்து தூக்கத்தைக் கெடுக்கு மானால், மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

தூக்கத்திற்கு முன் தூய காற்றோட்ட முள்ள இடத்தில் சற்று உலாவி வருவதும், மிதமான உணவு கொள்வதும், நல்ல தூக்கத்துக்குத் துணை. உடல், மன ஓய்வைத் தரும்.

படுக்கை அறை அமைதியாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள தாக இருக்கவேண்டும். படுக்கை விரிப்பு கள் கதகதப்பாகவும், கனமில்லாமலும் இருக்கவேண்டும்.

அசைவ உணவால் வரும் தீமைகள்

நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந் திருந்தது. நாளாக நாளாக நிலத்தைப் பண்படுத்தி, சாகுபடி செய்யக் கற்றுக் கொண்ட பின், அவனது உணவிலும் மாற்றம் ஏற்பட்டது. தானியங்கள், காய்கறிகள் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உணவைச் சமைத்து சாப்பிட முடியும் என்பதைத் தெரிந்து கொண்டதும் சைவ உணவை அதிகமாக உட்கொள்ளத் துவங்கியதும், விவசாயமும் வளர ஆரம்பித்தது. கால்நடை களைக் கொன்று தின்பதற்குப் பதில் அவற்றை விவசாய வேலைகளுக்குப் பயன் படுத்தவும் அவற்றிடமிருந்து கிடைக்கும் பால், தயிர் போன்றவற்றை உணவாக அருந்தவும் தெரிந்து கொண்டதும், கால்நடை களை வளர்க்க ஆரம்பித்தான். ஆடு, மாடு களின் மாமிசத்திற்குப் பதில் சுவை தரும் பால் பெரும்பாலோரது உணவாகியது.

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான், ஜனத்தொகை அதிகரிக்க ஆரம்பித் ததும், உணவின் தேவையும் பெருகவே அவன் தாவர உணவுக்கு மாற்றாக வேறு உணவை நாட வேண்டியதாயிற்று. மீண்டும் அசைவ உணவில் அவன் நாட்டம் திரும்பியது.

விஞ்ஞான அறிவு வளர ஆரம்பித்ததும் தாவர உணவில் கிடைக்கும் புரதச் சத்தை விட மிக அதிகளவு புரதமும், அமினோ அமிலங்களும் (மாமிச உணவில்) இருப்பதை அறிந்து மனிதர்களுக்கு அது தேவையான உணவாகியது.

ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வுக ளிலிருந்து மாமிச உணவில் புரதமும், அமினோ அமிலங்களும் அதிகம் இருந் தாலும், அதனால் உடலுக்குத் தீமைகளும் அதிகம் விளைகின்றன என்று கண்டறியப் பட்டது.

நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உடல் நலமும் அமைகிறது. இரைப் பையில் ஜீரண நீர் சரியாக சுரக்க இந்தப் புரதமும், அதை ஜீரணிக்கும் சத்துக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாமிச உணவு சிறுகுடலில் தங்கி சரியாக ஜீரண மாகாமல் ஜீரண நீர் அதிகம் சுரக்க வேண்டியிருப்பதால் குடல் பகுதியை அந்த அமிலங்கள் பெரி தும் பாதிக் கின்றன. குடலில் ஜவ்வு போன்ற மெல்லிய பகுதிதான் குடலைப் பாதிப் படையாமல் பாதுகாக்கிறது. இந்த அமில நீர் அதிகம் சுரப்பதால் ஜவ்வுப் பகுதிகள் அரிக்கப்பட்டு அதனால் குடல் புண் (அல்சர்) உண்டாகிறது.

மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதி யில் உள்ள க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.

தவிர, மாமிச உணவைத் தயாரிப்ப தற்கு மசாலாப் பொருள்களை அதிகம் பயன் படுத்துவதாலும், மாமிச உணவுடன் சேர்த்து மதுபானங்களை அருந்துவதாலும் மேலும் தீங்கை விளைவிக்கிறது.

உணவுக் குழாய், வயிற்றுப் பகுதி, குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் நமது உணவின் தன்மைக்கு ஏற்ப அமை கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில வகை மீன் கள், அதிகளவு உப்பு சேர்க்கப் பட்ட உணவுகள் முதலான நைட்ரோ அமினோ அமிலச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவாலும் அண்ணக்குழாய், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஏதுவாகிறது.

புரதமும், கொழுப்புச் சத்தும் மிகுந்த, நார்ச்சத்து அதிகமில்லாத உணவுகளா லும், பெருங்குடலில் அல்சர் நோய் வருவதற் கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிலும் முக்கியமாக அசைவ உணவுகளில் இந்த தீமை அதிகமாகிறது.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் சரியாகக் கழியாமல் குடல் பகுதி தடித்து வீங்கல் காரணமாக ஜவ்வுப் பகுதி அரிக்கப்பட்டு அல்சர் ஏற்படுகிறது.

தவிர, விலங்குகளிலிருந்து கிடைக்கும் மாமிச உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி யைக் குறைக்கவும் செய்கிறது. உணவு ஒவ்வாமை (அலர்ஜி) உடலுக்கு சில வகை உணவு கள் ஒத்துக்கொள்ளாமல் போவது காரணமாகவும் நோய் ஏற்பட வழிபடுத்துகிறது.

மூட்டு வலிகள் பற்றி கடந்த சில காலமாக ஆராய்ந்து பார்த்ததில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளும்போது நோயின் தீவிரம் குறைவதைக் கண்டறிந்துள்ளனர்.

சிலவகை அலர்ஜி நோய்கள் ஏற்படு வதற்கும் அசைவ உணவே காரணம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மாமிச உணவை ஜீரணிக்கையில் சில நச்சுப் பொருட்களும் வெளிப்படுகின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுகின்றன.

மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. கலோரிச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவு களும் அதனால் ஏற்படு கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் தமது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தி சில காலம் மாமிச உணவைச் சாப்பிட்டு வந்தபோது, புண் ஆறாமல் இருந்ததைக் கண்டார். பின் சைவ உணவுக்கு அவர் மாறியதும் விரைவில் குணம் ஏற்பட்டதை அறிந்தார்.

சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர் களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.

புலால் உணவால் விலங்கு உணர்வு களே மிகுந்து காணப்படுகின்றன. கொலை வெறித்தாக்குதல் போன்ற ராட்சச குணங்கள் மேலோங்குவதற்கு அசைவ உணவை உட் கொள்வதே காரணமாகும். மாறாக சைவ உணவை அருந்துபவர்களிடம் அன்பு, கருணை, கனிவு போன்ற தெய்வீக குணங்கள் நிறைந்திருப்பதுடன், சைவ உணவை உட் கொள்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் விளங்குகின்றனர்.

அண்மைக்காலமாக மேலை நாடு களில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருவது கண்கூடு. சைவ உணவின் சிறப்பை உணர்ந்துதானோ, வள்ளுவரும் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் புலாலைத் தள்ளும்படி வலியுறுத்தி யிருப்பதைக் காணலாம். ‘கொல்லான், புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்று அவர் சிறப் பித்துக் கூறுகிறார்.