பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய் களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டு வலிக்குக் காரணமாக அமைகின்றன.

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

நன்கு நேராக நிமிர்ந்து உட்கார, நிற்கப் பழக வேண்டும். நிற்கும் பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்ப தாலும் முதுகுத் தண்டை நிமிர்த்திய படி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும்.

‘‘ஹை ஹீல்ஸ்’’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நடக்கும்போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணி களைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப் பாக வருடத்திற்கு ஒரு முறை காலணி களை மாற்ற வேண்டும்.

எந்த வேலையையும் ஒரேயடியாகச் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்புத் தோன்றா மலிருக்க தங்களுக்குப் பிடித்த பாடல் களை இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.

வலியின் தன்மை, வலி கூடும் குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்ற வற்றை மருத்துவரிடம் செல்லும் போது தெரிவிக்க வேண்டும்.

நிம்மதியான தூக்கம், உடலை அமைதி யாகவும் தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும் போது மூட்டுகளும் தளர்வடை கின்றன. 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் க ட்டாயம் தேவை. பகல் உணவுக் குப் பின் 1020 நிமிடங்கள் ஓய்வெடுப் பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.

அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி தசைகளை வலிமைப் படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சி களை மேற்கொண்டாலே நல்ல மாற் றத்தை உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக