பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது

ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது தாலியில்லை, புரோகிதர் இல்லை, மாலை மாற்றமோ மோதிர மாற்றமோ கிடையாது. திருமணப் பதிவு மட்டுமே. சி.வி.இராமனது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எளிய நடையில் மூன்று மணி நேரம் அறிவியல் உண்மைகளை விளக்கினார். கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு அவரது சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தோம். ஒரு மாணவர் உங்களுக்கு இறை நம்பிக்கை உண்டா என்று கேட்டபொழுது எனது புலன்களால் தொட்டு, பார்த்து அறியப்படாத ஒன்றை எப்படி நான் நம்ப முடியும். மேலும் இயற்கையின் அற்புதப் படைப்புகளைப் பற்றி ஆய்வதற்கே நேரம் இல்லாத பொழுது இந்த வீண் முயற்சிகளில் ஈடுபடுவது தேவையில்லாதது என்றார். சொற்பொழிவு முடிந்தவுடன் எல்லோரும் விருந்திற்கு அழைப்பை எதிர்பார்க்க நாயுடு அவர்கள் வந்ததிற்கு நன்றி, உங்கள் வீட்டிற்குச் Aசென்று உண்ணுங்கள் என்றார். இத்தகைய திருமண முறை என்று வருமோ

2 கருத்துகள்: