பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

திரும்பிப் பார்க்கிறேன்.......!

நிதானமாய்ச் செல்லும்
நேரான பாதையைத் தவிர்த்து...
சுற்றிச் சுழலும்
மாற்றுப் பாதையைத் தேர்ந்து...

சீரற்ற வேகத்தில்
சரேலென வளைந்து...
இடமும் வலமுமாய்
திடீரென நுழைந்து...
குறுக்கும் நெடுக்குமாய்
வேகத்துடன் விரைந்து...
திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்
திசையெல்லாம் பயணித்து.........

முடியுமிடத்தில் இருந்து
திரும்பிப் பார்க்கிறேன்

அழகாய்
உருவாகி இருந்தது
கோலம் ஒன்று......!

2 கருத்துகள்:

  1. அழகாய்
    உருவாகி இருந்தது
    கோலம் ஒன்று...
    Excellent sight.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நண்பா ,
    தங்களின் பின்னூடத்தை பார்த்து மிகவும் மனம்நொந்து போனேன் .
    எல்லாரும் ஈசனின் பிள்ளைகள் தான்.
    கவலைகொள்ளாதே யாம் இருக்கிறோம்.
    இந்த பதிவு கோலத்தை குறிக்க அல்ல நமது வாழ்க்கையும் தான்.
    அருமையான பதிவு.

    சித்தர்களுக்காக வாழுங்கள் மீதியை அவர்களே பார்துகொள்வார்கள்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு