பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 மார்ச், 2011

இலவு காத்த கிளியாய்

எண்ணக் குதிரைகள்
ஓட்டமெடுக்கின்றன
அதை வண்ணமாய் தீட்டி வடிக்க
வேண்டுமெனக்கு புத்தகம்
எனக்கே எனக்கென்று
படைக்கப்பட்ட புத்தகம்

புரட்டப்படாத பக்கங்கள் ஏராளம்..
வாசிக்க மனசும் தாராளம்
ஆனால்...
திருப்பும் பக்கங்களெல்லாம்
வெற்றுக் காகிதங்களாய்..
நீர்மேலிட்ட மாக்கோலமாய்!

என் வாழ்க்கை
முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட
ஓர் அத்தியாயம்

புது அத்தியாயம்
தொடங்க பக்கமில்லை
எழுதுகோலில் மையுமில்லை!!

காத்திருக்கிறேன்
மனதில் போராட்டங்களுடன்
புதிய புத்தகத்திற்கு
அதில்..
புதிய அத்தியாயத்திற்கு..
இலவு காத்த கிளியாய்
ஆகப் போகிறேன் என்பதறியாமலேயே...!




__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக