பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 மார்ச், 2011

பெண்களின் மனதைக் கண்டவர் உண்டோ..!

பெண்களின் மனதைக் கண்டவர் உண்டோ..!

குருதியில் அணுக்கள் இருப்பதை அறிய
கருவிகள் பல தோற்றினார் உண்டு!

வருடிய காற்றில் பயணம் செய்ய
விமான ஊர்தியை படைத்தவர் உண்டு!

அருவியின் அடியில் கருவிகள் தொடுத்து
மின்சாரம் அதனை பெற்றவர் உண்டு!

இந்திய,இலங்கை இரண்டையும் பிரித்த
சமுத்திரமதனைக் கடந்தவர் உண்டு!

விண்ணிலே மின்னிடும் சந்திரன் முதுகினில்
ஆம்ஸ்ரோங் அடி பதித்ததும் உண்டு!

பெண்களின் கண்களில் உள்ளதை அறிய
பூமியில் மகிமை பெற்றவர் உண்டோ!!!!

1 கருத்து: