பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 மார்ச், 2011

"இயற்கை"

இயற்கை;
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;

இயற்கை;
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;
விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா???!!!
வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது;
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்.. கடல்தேவியானது;
பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை; பூமித் தாயானது;
காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது;
பணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;
படிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது;
வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;
மரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின் உரசலால், மறைப்பினால்,
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!
இவ்வளவு ஏன் -
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் -
என் எழுத்து கூட கவிதையானது!!
ஆயினும்,
கடவுளை போற்ற மதத்தை படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;
கடைசியில் -
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.
மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப் படுகின்றன;
அழிவை திருத்தி
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்
இயற்கையை -
வெறியின்றி வணங்குவோம்
வெறியில்லா மனிதத்தில்;
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக