பிரபலமான இடுகைகள்

புதன், 9 மார்ச், 2011

வலைக்குள் எலிகளாய்

உலகை உள்ளங்கைகளுக்குள் தந்து விட்டது கணணி
வலைத் தளத்துக்குள் கட்டுண்டு கிடக்கிறோம்
கவலைகளை மறந்து! செய்கருமங்களை மறந்து!
கணணி வலைக்குள் எலிகளாய் இன்று நாம்!

பயன்கள் ஒரு நூறு இருக்கலாம்- வாழ்வில் வரும்
புயல்கள் ஆயிரம் ஆயிரம் உண்டு...
மதுவின் போதை தெளிந்துவிடும் மறுநாளே- ஆனால்
மயக்கமே தெளிய விடாமல் வைத்திருக்கும்
சுய நலவாதியாய் இந்தக் கணணி உலகம்!

சாதனை செய்ய எவ்வளவோ இருந்தும்
நாம் செய்வது என்னவோ ஒன்று தான்...
மன அமைதிக்கு தியானம் செய்தது மறைந்து
கணனியில் சட் செய்வது மருந்தாகி விட்டது!

அவசர உலகில் யாவருக்கும்
ஆறுதல் என்ற சொல் அரிதாகி விட்டது...
உலகமே இது என்றாகி விட்டது துரதிர்ஷ்டமே
அதிர்ஷ்டம் ஒன்றும் உள்ளது அது நட்பு!

இனிய நண்பர்கள் நிரவுகின்றனர்
துன்பங்கள் என்ற பள்ளங்களை!
இதற்காக வாழ்வு முழுதும்
இருந்து விடலாம் மயக்கத்தில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக