பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 18 மார்ச், 2011

உன் நினைவுகளோடு நானும்....​.!

மறந்து விட்டேன்....ஆம்
உன்னை மறந்து விட்டேன்....
இப்படி சொல்லிக் கொண்டே
நினைத்து பார்க்கிறேன்....

மறந்து விட்டேன்....,
என்று நினைத்தே....,
இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.


இமை மூடி
சிந்தித்த
நினைவுகளை...


விழி திறந்திருந்தும்
வியாபித்த
கனவுகளை...


விடியலின் போது
தூங்குகையில்
என்னைத் துள்ளி எழ
வைத்த உன் பார்வைகளை...


என் வாழ்க்கையின்
நம்பிக்கையை மெருகேற்றிய
உன் வார்த்தைகளை..


நாம் கை கோர்த்து
தடம் பதித்த
பாதைகளை..


பாதையோரம்
செல்கையில்...
ரசித்து சென்ற
காட்சிகளை..


காணும் காட்சிகள்
அனைத்திலும்
நீ மட்டுமே
தோன்றிய பொழுதுகளை,


உன்னால்
நேர்த்தியாய்
அழகாய் தோன்றிய
என் நிமிடங்களை...


துன்பத்திலும் உன்னோடு
நானிருப்பேன் என்று
தோள் சாய்ந்திருந்த
தருணங்களை...

சந்தித்துப் பிரிந்ததும்..
உன்னை எண்ணி
கனவில் வாழ்ந்த கணங்களை...

நம் கனவுகள்
பற்றி சொல்லவே
ஒரு யுகம் வேண்டும்

என்று கூறி
கண் சிமிட்டி
நீ சிரித்த சிரிப்புகளை...

என் கர்வங்களைக்
களவாடிய
உன் பேச்சுக்களை...


மறந்து விட்டேன்....,
என்று நினைத்தே....,

இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.

மறந்து விட்டதாக நினைக்கும்
அனைத்திலும் நீ மட்டுமே
என்னில் நிறைந்திருக்கிறாய்.

வாழ்வது நானாக இருந்தாலும்
வாழ்விப்பது உன் நினைவுகள்தான்
என்பதை நான் எப்படி மறந்தேன்...?

இப்போது நான்
தெளிவாகப் புரிந்து கொண்டேன்....
உன்னை மட்டுமல்ல....
உன் நினைவுகளை நீங்கினாலும்
எனக்கு ஜீவன் இல்லை.

என்றும் என்னோடு நீயும்....,
உன் நினைவுகளோடு
நானும்.....!

மறந்து விட்டேன்....,

என்று நினைத்தே....,
இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.

1 கருத்து: