பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

பணிவும் மூர்க்கமும்


அன்றும் அதே மூர்க்கத்துடன் கடைக்காரர் கையிலிருந்து பத்திரிக்கைப் பிடுங்கிச் சென்றான் ..அந்த குமார்..


கடை பையன்...என்ன அண்ணாச்சி நீங்க..?


எவ்வளவு பணிவா..அவனுக்கு வணக்கம் சொல்றிங்க..


அதுக்கு அவன் பதில் வணக்கம் சொல்றான னா...இல்ல..


சரி.. அது தான் போகட்டும் னா .. பதிலுக்கு...ஒரு சின்ன சிரிப்பு கூட அவன் மொகத்துல இல்ல..


அத விட்டுத் தள்ளுங்க..நீங்க எவ்வளவு மரியாதயா அவன் கைல பேப்பர் குடுக்குறிங்க..


அதாவது கொஞ்சம் மெதுவா எடுக்கலாம் ல....அதென்ன... .வெடுக்குனு புடுங்குறது..?


சரி..காசாவது உங்க கைல தரலாம் ல ..அதென்ன ஒங்க மூஞ்சில எறியிற மாதிரி வீசிட்டுப் போறான்..


அதுக்கும் வெக்கம் இல்லாம ..தேங்க்ஸ் ன்னு சொல்லணுமா..எனக்கு கேவலமா இருக்கு..ஒங்கள நெனச்சா..




ஒண்ணு சொல்றேன் கேளுங்க..


நாளைக்கு அவன் காச வீசுனா...நீங்களும் பேப்பர் ர அவன் மூஞ்சில வீசி எறியணும்..புரியுதா..


மௌனமாகப் பார்த்த கடைக்காரர்..சொன்னார்,,


தம்பி..ஒனக்கு சின்ன வயசு..


அது தான் பொசுக்கு பொசுக்கு ன்னு கோவம் வருது..




ஒண்ணு புரிஞ்சிக்க..


நான் என்ன பண்ணினாலும்..அவன என்னால நகரிகமுள்ளவனா மாத்த முடியாது..




அதே மாதிரி..அவன் என்ன பண்ணினாலும் என்ன அவனால..முரடனா மாத்த முடியாது..


அவோனோட மூர்க்கத்தனம் ..என்னோட பணிவான சுபாவத்த எதுவும் பண்ணிற முடியாது...பண்ணவும் விட மாட்டேன்..


இந்த விசயத்துல..நான் அவனா மாற விரும்பல..நான் நானாகவே இருந்துட்டுப் போறேன்..


அவன் அவனாகவே இருக்கட்டும்..


நல்ல விஷயம் னா அவன்கிட்ட இருந்து கத்துக்கலாம்


உப்பு பெறாத விஷயத்த..நம்ம நல்ல கொள்கைய விட்டுக்கொடுத்து கத்துக்கணுமா..சொல்லு..




அண்ணாச்சி கடைய்ல ..இன்னும் ஏன் இவ்வளவு கூட்டம்..அலை மோதுது ன்னு..இப்ப தான் அந்த பையனுக்கு புரிய..ஆரம்பிச்சது..




நல்லவைகளைக் கற்றுக் கொள்வோம்


அல்லவைகளை விட்டுத் தள்ளுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக