பிரபலமான இடுகைகள்

புதன், 12 ஜனவரி, 2011

வாழ்க வளமுடன்

ஒரு ஐந்து நிமிடம் தொலைக்காட்சியில் ஏதாவது நல்லதொரு நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று நினைத்து உட்காரும்போது ஒரு நிமிடத்திற்குள் 10 விளம்பரங்களை போட்டுவிடுகிறார்கள். அவற்றில் 6 விளம்பரங்கள் அழகுசாதனப் பொருட்களைப் பற்றியதாக இருக்கிறது.  அந்த ஆறில் மூன்று ’முகப்பொலிவு க்ரீம்’ அல்லது ’சிவப்பழகு க்ரீம்’ பற்றியதுமாக இருக்கிறது.
செயற்கையாக நம்மை அழகாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இத்தகு விளம்பரங்கள் உணர்த்துகின்றன.
.
“சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும்.  முகம் பொலிவாகக் காணப்படும்.”
                                                                                                       -மகரிஷி
’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ ("Face is the Index of the Mind") என்பது ஓர் சிறந்த பழமொழியாகும்.
மனத்தில் எல்லா நற்குணங்களும் தோன்றி செயல்படும்போதுதான் நமது முகம் அழகாககத் தோன்றுகிறது. நற்குணங்கள் என்று சொல்லுகிறபோது அதற்கு எதிர்ச்சொல்லாக வருவது ’தீயகுணங்கள்’ ஆகும்.  ‘தீ’ என்பது எதையுமே அழிப்பது அல்லவா?  அவற்றுல் தலையாயது ‘சினம்’ ஆகும்.
அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,
“தீயவை தீயபயத்தலால் தீயவை
 தீயினும் அஞ்சப்படும்’
                     -குறள் 202
என்கிறார்.
மகரிஷி கூறுகிறார்கள்,
“சினம், அறிவுக்கு மேன்மையைத் தரத்தக்க ஒரு வழியை அடைத்துவிட்டு, தடுத்து விடுகிறது என்பது ஒன்று. இரண்டாவது உடல்நலத்தைக் கெடுத்துவிடுகிறது. மூன்றாவது குடும்பத்தில் எந்த நேரமும் சச்சரவு, சங்கடம். உறவினர்களிடத்தில்கூட அன்போடு பண்போடு இருக்கக்கூடியவர்களிடம் கூட சங்கடத்தையும், துன்பத்தையும், குழப்பதையும் விளைவித்துவிடும்.”
                                                                                                 -(அருளருவி)
மேலும் மகரிஷி அவர்கள் ஒரு எளிய எடுத்துக்காட்டு ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
“ஒரு பூக்கூடையை எடுத்துக்கொண்டு போய், நந்தவனத்திலிருக்கும் அருமையான பூக்களைப் பறித்துப் போட்டுக்கொண்டே வருகிறோம்.  பறித்த பூக்களெல்லாம் நல்ல வாசனையோடு இருக்கின்றன.  அந்த சமயத்தில் தவறி பூக்கூடையைச் சாக்கடையில் கொட்டிவிட்டோமேயானல் என்னாகுமோ அதேபோல நமக்கு(SKY Meditationer) அந்தச் சக்தி (தவஆற்றல்) பயன்படாமலேயே போகும்.  இந்தச் சக்தியை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சினம் தவிர்க்கத்தான் வேண்டும்.”
                                                                                                  -(அருளருவி)
 
மற்றவர்கள் ’முகப்பொலிவு க்ரீம்’ தினசரி பயன்படுத்துவது போல நாமும் சினம் தவிர்க்கும் பயிற்சியை தினமும் செய்து இயற்கையான அழகைப்பெறுவோம்.
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக