பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

ஓம்.
சிறிய குட்டை (நீர்நிலைகளில்) வளர்வது வசம்பு. கோரைப் புல் போன்று காட்ச்சி தரும். பிள்ளை மருந்து, பேர் சொல்லாதது என்றெல்லாம் கிராமத்தில் வழங்கப்படும் சிறப்பு மருந்து வசம்பு. பொய்யாகவோ பிழையாகாவோ பிறரைப் பற்றித் திருத்திக் கூறுவோரின் வாயினுள் நாவினில் வசம்பைத் தேய்க்க வேண்டும் என்று ஒரு வசைச் சொல் உண்டு. அவ்வாறு தடவினால் அதன் மருத்துவ குணம் செயல்பட்டு உண்மை மலரும் என்பது அதன் பொருள்.  உன்னைப் பெற்ற வயிற்றினில் பிரண்டையைத் தான்  கட்டவேண்டும் என்ற வசைச் சொல் பயன்படுத்துவதைப் போன்று பல பழமொழிகள் புழங்குவதுண்டு.


இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

 சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
 பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

1 கருத்து:

  1. எந்த டானிக்கிலும் இல்லாத மருத்துவ குணம் இந்த வசம்பில் உண்டு. என் அனுபவப் பாடமும் கூட. நன்று.

    பதிலளிநீக்கு