பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஓட்டைப் பானை

இரண்டு பானைகளையும் தடியின் இரு புறமும் தொங்கவிட்டு தினமும் தண்ணீர் சுமந்து செல்லும் அந்த மனிதன்..


இரண்டில் ஒன்றில் ஒரு சிறு கீறல்..அதன் விளைவாய் ..ஒரு பானையில் முழுக் கொள்ளளவும்..மற்றதில் பாதியும் மட்டுமே
அவனால் தண்ணீர் கொண்டு செல்ல முடிந்தது..

நல்ல பானை..அந்த கீறல் பானையை நக்கலாகப் பார்ப்பதும்..கீறல் பானை வெட்கித் தலை குனிவதும் வாடிக்கை யாகி
விட்டன..


ஆண்டுகள் இரண்டு கடந்தோடின..ஒரு நாள் துக்கம் தாங்காமல் கீறல் பானை அவனிடம் கேட்டது..


நீங்கள் தினமும் என்னை பல மைல் தூரம் சுமக்கிறீர்கள்.. ஆயினும் என்னால் பாதி யளவு தண்ணீர் தானே உங்களுக்கு வழங்க முடிகிறது..
எனக்கு பெருத்த அவமானமாக உள்ளது..


அவன் சொன்னான் ....


நீ சொல்வது சரி தான்..ஒன்று கவனித்தாயா..?


வரும் வழியெங்கும் உனது பக்கம் மட்டும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை..


நீ சிந்திய நீர் வீண் போகவில்லை..நான் தான் மலர்ச் செடிகளை நட்டு வைத்தேன்..


இங்குள்ள பெண்களின் தலையில் அழகுடன் அணிந்திருப்பது..நம் வீட்டு வரவேற்பறை..பூஜை அறை அனைத்திலும் இந்த மலர்களே..


அது மட்டுமல்ல..கல்லும் முள்ளும் நிறைந்த இந்தப் பாதையின் ஒரு புறம் மட்டும் நந்தவனம்..
அதுவும் உன்னால் தான் இதெல்லாம் முடிந்தது..


அன்றிலிருந்து அந்தப் பானை தனது கீறலை...குறையை மறந்தது..நல்ல பானையும் நக்கலை விட்டொழித்தது..









நீதி

நாம் அனைவரும் "அந்த நந்தவனத்து ஆண்டி" செய்த ஓட்டைப்பானைகளே...


யாரிடம் தான் "கீறல்" இல்லை..


ஒவ்வொரு மனதிலும் ஆயிரம் கீறல்கள்..


குறைகளை மறப்போம்..குறைவின்றி உழைப்போம்


நிறைகளை மட்டும் நினைப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்..











.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக