பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

"முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!'

புதுச்சேரியின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுனர் சசி பிரபா:

சின்ன வயசுல இருந்தே, எனக்கு வண்டி ஓட்டுறதுக்கு பிடிக்கும். இரண்டாவது படிக்கும் போதே, கியர் பைக் ஓட்ட ஆசை ஏற்பட்டது; ஆனால், கற்றுத் தர யாரும் இல்லை. வண்டியின் முன்சீட்டில் அமர்ந்து, அப்பாவின் கை மீது கை வைத்து, வண்டி ஓட்டி, என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.என் 15வது வயதில், வீட்டுக்கு வந்த நண்பரிடம், "என்பீல்டு' பைக்கை வாங்கி, புதுச்சேரியின் பிரதானச் சாலைகளில் வலம் வந்தேன். அதுவே, என் முதல் பைக் பயணம். 16வது வயதில், கார் ஓட்ட ஆசைப்பட்டு, அப்பாவிடம் கூறிய போது, அம்பாசிடர் காரை எனக்கு பரிசாக அளித்தார்.

என் ஆசைக்கு, அப்பா தடை சொல்லவே இல்லை.அதன்பின், பஸ், லாரி என தொடர்ந்து, இப்போது, ஜே.சி.பி., பொக்லைன் வரை, அனைத்தும் எனக்கு அத்துப்படி. இவைகள் மட்டுமல்லாமல், பரதம், வயலின், மிருதங்கம், கராத்தே, நீச்சல் என அனைத்தும் எனக்கு, கை வந்த கலை. என் திறமைக்கும், வளர்ச்சிக்கும் எனக்கு துணை நின்றவர், என் அப்பா.

பிறந்தோம், படிச்சோம், வேலைக்கு போய் சம்பாதிச்சோம் என்றிருக்க எனக்கு பிடிக்கலை. வாழ்வது ஒருமுறை; அந்த வாழ்க்கையில், ஒரு சாதனையாளர் ஆவதே என் விருப்பம்.புதுச்சேரியில், மாணவர்களுக்காக இயக்கப்படும் பஸ் ஓட்டுனராக வேண்டும் என்பது தான் என் ஆசை. புதிய துறைகளில் தடம் பதிக்க, பெண்கள் முன்வர வேண்டும். தகுந்த பயிற்சியும், முயற்சியும் இருந்தால், முடியாதது ஒன்றும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக