பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

காரத்தன்மையுடைய உணவுப் பொருட்கள்

நாம் உண்ணும் உணவில் சில உணவுகள் அமிலத்தன்மை அதிக முள்ளதாகவும், சில காரத்தன்மை அதிகம் உள்ளதாகவும் உள்ளன.

இயற்கை நமக்கு இருவகையான உணவுகளையும் கொடுத்திருக்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்து நமது உமிழ்நீர், சிறுநீர், இரத்தம் ஆகியவை அமிலத்தன்மை உடையதாகவோ அல்லது காரத்தன்மை உடையதாகவோ இருக்கும்.

நாம் காரத்தன்மை 75% இருக்கும் படியும் அமிலத்தன்மை 25% இருக்கும் படியும் நமது உணவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் வயிற்றிலுள்ள ஜீரண நீர் ஹைடிரோ குளோரிக் அமிலம் பெயருக்கேற்றாற் போல அமிலத் தன்மை உடையது. இந்த அமிலத்துடன் நாம் உண்ணும் உணவானது கூழ்போல் நன்கு கடையப் பட்டுச் சிறிது சிறிதாகச் சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. இந்த உணவு அமிலத் தன்மை வாய்ந்தது.

கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலி லிருந்து பித்தநீர், சிறுகுடலிலிருந்து பல என்சைம்கள் கலந்து குடல்நீர் ஆகியவைகள் சிறுகுடலுக்கு வந்து சேருகின்றன. இந்த எல்லா ஜீரண நீர்களும் காரத்தன்மையுடையன. முன் சிறுகுடலில் (Duodeum) இந்த அமிலத்தன்மையுள்ள நீர்களும், காரத் தன்மையுள்ள நீர்களும் கலந்து நடு நிலையை அடைகின்றன. இந்த காரத் தன்மையுடைய நீர்கள் சரிவரச் சுரக்காத போது அமிலத்தன்மை அதிகரித்து குடல் புண் உண்டாகிறது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும்போது வயிற்றுப் புண் உண்டாகிறது. ஒவ்வாமை, மன அழுத்தம் ஆகிய இவைகள் நம்முடைய உடம் பில் அமிலத்தன்மையை அதிகப் படுத்துகின்றன.

இதற்குத் தீர்வு காண காரத்தன்மை உடைய உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் காரத் தன்மையுள்ள உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த றிபி சமநிலை என்பது 1 முதல் 14 எண்களுக்குள் இருக்கும். 7 என்ற எண் சமநிலையைக் குறிக்கும். 7க்கு மேல் இருந்தால் காரத்தன் மையையும், 7க்குக் குறைவாக இருந்தால் அமிலத் தன்மையையும் குறிக்கும்.

நம்முடைய உடம்பில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும்போது பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. வயிறு மற்றும் சிறுகுடலில் எரிச்சல் ஏற்பட்டு நாளடைவில் புண்கள் உண்டாகின்றன. அமிலத்தன்மை அதிகமாகும்போது, பற்கள், எலும்புகள் ஆகியவைகள் கரைய ஆரம்பிக்கின்றன. ‘‘ஆஸ்டியோ பொராஸிஸ்’’ என்ற எலும்பு களை அரிக்கும் நோய் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. நம் உடலில் காரத்தன்மை அதிகமாக இருந்தால், இதய நோய்கள், ஆர்த்ரைடிஸ், சிறு நீரகப் பித்தப்பைக் கற்கள், பற்சிதைவு, புற்றுநோய் போன்ற நோய்கள் தோன்றுவ தில்லை.

காரத்தன்மையுடைய உணவுப் பொருட்கள்:

பழங்கள் அனைத்துமே! நீங்கள் எல்லா விதப் பழங்களையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக பப்பாளிப் பழத்தை, நீங்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

எல்லாவிதமான காய்களையும் நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

கீரைகள் அனைத்துமே காரத்தன்மை உடையவை. இவைகளை நீங்கள் தவறாது உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

பழங்களில் ஆப்பிள் பழம், அத்திப் பழம், திராட்சைப் பழம், எலுமிச்சை, வாட்டர் மெலன், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம், தக்காளிப்பழம், வாழைப் பழம், பேரீச்சம்பழம் ஆகியவைகளைத் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். பழங்களை நீங்கள் வேண்டிய மட்டும் சாப்பிட்டு வாரு ங்கள்.

முட்டைக்கோசு, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், வெள்ளரி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பறங்கிக்காய், முளை விட்ட தானியங்கள், பட்டாணி, கீரை கள், காய்கள், பழச்சாறுகள் ஆகியவை களின் சாறுகள், மூலிகை டீ, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள் ஆகியவைகளைச் சாப்பி ட்டு வர வேண்டும்.

அமிலத் தன்மையுள்ள பொருட்கள்:

சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ், வால்நட், (அக்ரோட்), முந்திரி, மீன், சோயா பீன்ஸ், நூடுல்ஸ், உருளைக்கிழங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக